Monday, November 17, 2014

தூய்மை இந்தியாவின் கனவான்களுக்கு..



எங்கள் குடியிருப்புக்கு அரசு சுகாதரப்பணியில் இருக்கும்
பெண்கள் வந்தார்கள். பால்கனியில் இருக்கும் செடிகளில்
தண்ணீர் தேங்க கூடாது, பூந்தொட்டிகளின் கீழ் தண்ணீர்
ஒழுகாமல் இருக்க வைத்திருக்கும் தட்டுகளைக் கூட
அக்ற்றிவிட்டு ஒவ்வொரு வீடாக கதவைத் தட்டி
டிப்ஸ் வேறு சொல்லிவிட்டுப் போனார்கள்.

பரவாயில்லையே... தூய்மை இந்தியா ஏதோ ஒரு வ்கையில்
வெற்றிகரமாக செயல்படுகிறது. எதற்கெடுத்தாலும் அரசை,
அதிலும் குறிப்பாக் மோதியை விமர்சனம் செய்வதை
தவிர்க்கலாமோ, இன்றைக்கு யார் யார் கையில் எல்லோமோ
'துடைப்பத்தைக் கொடுத்து"  போஸ் கொடுக்க வைத்துவிட்டாரே
என்று பேசும் கன்வாண்களின் கவனத்துக்கு:

மும்பையின் மக்கள் தொகையில் 54% மக்கள் குடிசைப்பகுதியில்
வாழ்கிறார்கள். 25% முதல் 35% வரை மக்கள் சால் வீடுகளிலும்
சாலையோரங்களிலும் வசிக்கிறார்கள். மீதி 10 % முதல் 15%
மக்கள் தான் அடுக்குமாடி குடியிருப்புகளில் , அப்பார்ட்மெண்ட்
வீடுகளில் வாழ்கிறார்கள். உலக வங்கி 2025ஆம் ஆண்டில்
சற்றொப்ப 22.5 மில்லியன் மக்கள் மும்பையில் குடிசைவாசிகளாக
இருப்பார்கள் என்று அறிவித்திருக்கிறது.
காங்கிரசும் சிவசேனாவும் இக்குடிசை மக்களின் வாழ்க்கையில்
விளக்கேற்றப் போவதாக - குடிசை மாற்று வாரியத்தின்
திட்டங்களை அறிவித்திருந்தார்கள். இதுவரை அத்திட்டங்கள்
முழுமையடையவில்லை. தற்போது ஆளும் கட்சியாக
மாநிலத்திலும் மத்தியிலும் ஆளும் பாரதீய ஜனதா கட்சி
"தூய்மை இந்தியா" என்று பேசுகிறது.

இக்குடிசைகளின் வாழ்க்கையை மக்கள் நலன் அரசாக
கவனிக்கத் தவறிவிட்டு இவர்கள் பேசும் தூய்மை இந்தியா
எவ்வளவு போலியானது!  ஒருவேளை இக்குடிசைகளில்
இருக்கும் மனிதர்களை இவர்கள் இந்தியர்களாக, ஏன் மனிதர்களாக
நினைக்கவே இல்லையோ?

"அம்மாக்களின் அவஸ்தை" என்ற தலைப்பில் நான் எழுதிய
கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

இரண்டு நிமிசத்திற்கு ஒரு டிரெயின்.
அறிவித்தார் அமைச்சர்
அச்சப்பட்டார்கள் என் அம்மாக்கள்
அடிக்கடி எழுந்து நிற்கும்
அவஸ்தையை நினைத்து.
..
டிரெயினில் பயணம் செய்யும் எவரும் எல்லா மாநிலங்களிலும்
இக்காட்சியை இந்தியாவில் தான் பார்க்க முடியும்.
இதற்காக ஒவ்வொரு இந்தியனும் வெட்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் தலை குனிய வேண்டும்.
வெட்கமா இல்ல ... தூய்மை இந்தியானு மேனா மினிக்கியாட்டம்
போஸ் கொடுக்கறதுக்கு.. ஒய்யார கொண்டையாம் தாழம்பூவாம்..
உள்ள இருக்காம் ஈறும் பேனும்.. போங்கடா.. நீங்களும்
உங்க நாறுன பொழைப்பும்.!

1 comment:

  1. ஒவ்வொரு இந்தியனும் வெட்கப்படத்தான் வேண்டும்

    ReplyDelete