Tuesday, May 15, 2012

புதியவாசல்



காதலோ கள்ளமோ இது
காமமோ மாயமோ இது
மனம் பிறழ்ந்த காலமோ இது
கவிதைமன சாபமோ இது
கண்டறியேன்
கண்டவர் சொன்னதில்லை
சொன்னவர் கண்டதில்லை
கண்டதும் கேட்டதும்
கனவாகிப்போனது.
மாயங்கள் மட்டுமே
நிஜமாகி
மரணிக்கும் ஒவ்வொரு
மணித்துளியிலும்
உயிர்ப்புடன்
தன்னை எழுதிக்கொண்டே இருக்கிறது
புதிது புதிதாக
புதிய அர்த்தங்களுடன்
.
உன் அகராதியில்
நீ எழுதிவைத்த
பெண்ணுக்கான சொற்குப்பைகளை
பெருக்கி எடுத்து
துடைத்து எறிந்துவிட்டேன்.
என் வாசலுகு
வருவதற்கு முன்
உன் பாட்டன் முப்பாட்டன்
ஏற்றிவைத்த சுமைகளை
எங்காவது இறக்கி வைத்துவிட்டு
வா.
காத்திருக்கிறேன்
நமக்கான நம்
புதிய வாசலில்
தோரணங்கள் கட்ட.


-------------------------------------------------------------------

1 comment:

  1. வலைச்சரத்தின் மூலம் உங்கள் பக்கம் வந்தேன் அருமையான புரிதல் தோழி .என் முக நூல் பக்கத்தில் உங்கள் பெயருடன் பகிர்ந்து கொள்கிறேன்

    ReplyDelete