Friday, April 20, 2012

பாம்பாட்டி



கனவுகளிலும் என்னைத் துரத்துகிறது
பாம்புகளின் கூட்டம்.
மகுடி எடுத்து வாசித்து
மயக்க வேண்டும்
கடிப்பதற்குள் எப்படியாவது
கட்டிப்போட வேண்டும்
கனவுகளில் தேவதைகள்
வரப்போகிறார்கள்
நட்சத்திரங்களுடன்
நடனமாடிக்கொண்டே வரக்கூடும்
அவர்கள்.
பாம்புகள் பயமுறுத்தினால்
என்னையும் என் கனவுகளையும்
அவர்கள் விலக்கி வைக்கலாம்.
பாம்புகளைப்  பிடிக்கும்
பாம்பாட்டி
என் படுக்கை அறையில்
பாம்புகளுக்காகக் காத்திருக்கிறான்.

இப்போதெல்லாம் 
பாம்புகள் வருவதில்லை
ஏனேனில் எனக்கு
கனவுகளும் வருவதில்லை.
பாம்பாட்டி பொட்டிக்குள்
பத்திரமாக 
படுத்திருக்கிறேன்
படம் எடுத்து ஆடுகிறேன்
நானே பாம்பாகிப் போனதறியாமல்.



1 comment: