Pages

Monday, December 13, 2010

செம்பருத்தி




செம்பரிதி குளத்தில் நீராடிய வதனம்
பார்த்தாலே போதையூட்டும் கவர்ச்சி
சிவந்த இதழ்களைத் தொடும்போதெல்லாம்
வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பு.
ஐந்துவிரல்களாய் இணைந்த
ஐம்பூதங்கள்
இப்படி எத்தனையோ இருந்தாலும்
நாங்கள் சூடுவதில்லை
செம்பருத்தி பூக்களை.
அச்சமாக இருக்கிறது
ஐவருடன் வாழ்ந்த
அவளறியாதக் காமத்துடன்
சூல்முடியும் சூலகமும் விரித்து
சூரியக்குஞ்சுகளைப்
பிரசவிக்கத் துடிக்கும்
அவளைப் பார்த்து.

----------------------------

1 comments:

svramani08 said...

வித்தியாசமான சிந்தனை
வாழ்த்துக்கள் கவிதைக்கும் பொங்கலுக்கும்