Thursday, September 7, 2023

அண்ணாவின் திராவிடமாடல் 1

 அண்ணாவின் திராவிட மாடல்..



திமுக வின் தலைமையகம் 2/12/1951ல் திறக்கப்பட்டது.
சென்னையில் சொந்தமாக ஓரிடம் வாங்கி அதில் தன்
அரசியல் கட்சியின் தலைமையகம் செயல்பட
வேண்டுமென்பது அண்ணாவின் அன்றைய
கனவாக இருந்த து. கனவு கண்டவுடன் அதை நனவாக்கும்
சூழல் அன்றில்லை. அன்றைய திமுக என்பது வேவேவேறு ..
. திமுக.
    தங்கசாலை தெருவிலிருந்த அண்ணாவின் உறவினர் இல்லத்தில்தான்
திமுக கட்சி அலுவலகம் நடந்து கொண்டிருந்தது.
கட்சியின் ஏடான திராவிட நாடு பணிகளும்
அந்த அறையில் தான் நடந்தன.
கொஞ்சம் கொஞ்சமாக அவர் சேமிப்பும் தம்பிகளின் நிதியுமாக
சேர்த்த ரூ. 13000/ ல் ராயம்புரம், சூரிய நாராயணசெட்டி தெருவிலிருந்த கட்டிடத்தை வாங்கினார்.
திமுகவின் அறிவகம், தலைமைச்செயலகமாக உருவெடுத்தது.
அந்த அறிவகம் திறப்புவிழாவில் திமுகவின் தலைமைச்செயலகத்தை திறந்துவைத்தவர் அண்ணாவின் தம்பி
குமரி மாவட்ட வி.எம்.ஜாண் அவர்கள்.
அன்று குமரி மாவட்டத்தில் திமுகவுக்கு பெரிய
செல்வாக்கெல்லாம் கிடையாது..!
ஜாண் அவர்களைக் கொண்டு திறந்து வைப்பதன் மூலம்
திமுகவின் தேர்தல் வெற்றிக்கு அது எந்த வகையிலும்
தாக்கத்தை ஏற்படுத்திவிடப் போவதில்லை.
ஆனாலும் அறிஞர் அண்ணா தேர்ந்தெடுத்தவர் வி. எம் ஜாண்
என்பதில் இருக்கிறது அண்ணாவின் திராவிடமாடல்.
வி. எம் ஜாண் அவர்கள் இந்திய சாதி சமூகத்தில் ஒடுக்கப்பட்ட
சமூகத்தைச் சார்ந்தவர். ( நன்றி இந்துதமிழ்)
அண்ணாவின் திராவிட மாடல் இங்கிருந்து ஆரம்பமாகிறது.
எந்தவொரு மாற்றமும் முன்னேற்றமும்
எந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்
என்பதை தன் கட்சிக்கும்
தம் தமிழ்ச் சமூகத்திற்கும்
இப்படித்தான் உணர்த்தினார் அண்ணா.

No comments:

Post a Comment