Thursday, May 5, 2022

காமத்துப்பாலின் உச்சம்

 

 

 
காமத்துப்பாலின் உச்சம் கலிங்கத்துப்பரணி.
செயங்கொண்டார் அளவுக்கு காமத்தை
இத்துனை அழகியலுடன் எழுதியவர் யார்?
சும்மா பேயாட்டம் ஆடி இருக்கான் யா..
சிருங்காரத்தின் அழகியலை
ரொம்பவும் நுணுக்கமாக தன் பாடல்களில்
வைத்தவன் இவன் தானய்யா.
 
“வருவார் கொழுநர் எனத்திறந்தும்
வாரார் கொழுநர் என அடைத்தும்
திருகும் குடுமி விடியளவும்
தேயும் கபாடம் திறமினோ”
 
 
இந்த 4 வரியுடன் எங்கள் கலிங்கத்துப்பரணி
கடைத்திறப்பு முடிந்துவிடும்.
அதற்கும்மேலே வாசித்தால் நாங்கள்
“கெட்டுப்போயிடுவோம்” என்று
நாங்களும் எங்களுக்கு கற்பித்தவர்களும்
நம்பிய காலம் ஒன்றுண்டு.
இன்று..?
தொடுதிரையில் எல்லாம் “பார்க்கும்” வசதி
வந்தக் காலத்தில் 
 
“நேயக்கலவி மயக்கத்தே
நிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப
வாயைப்புதைக்கும் மட நல்லீர்
மணிப்பொற் கபாடம் திறமினோ”
 
என்ற 4 வரிகளை ரசித்து வாசித்து
புன்னகையுடன் கடந்துப் போகிறேன்..
 
அது அது அதுஅதுவாக இருந்தால்
எதுவும் எதையும் கெடுத்துவிடாது..
அவ்வளவுதான்.. வெரி சிம்பிள்.

No comments:

Post a Comment