Tuesday, May 10, 2022

யாரும் ஆணியைப் பிடுங்க முடியாது.

யாராலும் ஆணியைப் பிடுங்க முடியாது.
இதுதான் நிலவரம்..
ஒரு நாட்டின் சட்டம் அமுலுக்கு வரும்போது 
அதற்கு முன் இருந்த அனைத்து சட்டவிதிகளும் 
நீக்கப்பட்டு புதிய அரசியல் நிர்ணய சட்டங்கள் 
அரசின் சட்டங்களாகின்றன என்பதுதான் 
பொதுவான நம்பிக்கை.
ஆனால் இந்தியாவில் அது நடக்கவில்லை.
அரசியல் நிர்ணய சட்டத்தைக் கொண்டுவரும் போது 
அக்குழுவின் தலைவராக இருந்த அண்ணல் அம்பேத்கர்
 “, that all the laws which were in force till date of adoption of the 
Indian constitution will stand abolished என்ற
சரியான திருத்தத்தைக் கொண்டுவர எவ்வளவோ 
முயற்சி செய்தும் நடக்கவில்லை. அதாவது இந்தியச் சட்டம் 
மட்டும் நம் நீதிமன்றங்களில்இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் , இந்திய சட்டம் எழுதப்படுவதற்கு முன்பே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைமுறையில் இருந்த 
சட்டங்கள் இன்றும் எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்பு
 சட்டத்தை ஓவர் ரூல் செய்து கொண்டிருக்கின்றன.
அதனால் இங்கே யாரும் எதுவும் ஆணியைப் 
பிடுங்கிட முடியாது! இதுதான் நிலவரம்.
 
Customs, usuage, religious faith இத்தியாதி வார்த்தைகள் 
நம் நீதிமன்ற தீர்ப்புகளில் எப்படி எல்லாம் தீர்ப்பு சொல்லும்
 என்பது இன்னும் புரியாதப் புதிர் நிறைந்த தீர்ப்புகளாகவே 
தொடர்கின்றன.
சுயமரியாதை திருமணம் சட்டப்படி ஏற்றுக்
 கொள்ளப்பட்டதை தந்தை பெரியாரின் வெற்றியாக 
திராவிட அரசியலின் வெற்றியாக நான் உட்பட 
கொண்டாடிக்கொண்டு வருகிறோம்.
ஆனால் இதன் இன்னொரு பக்கம்:
 
1)இது இந்து திருமணச் சட்டத்தின் 7ஏ உள்பிரிவாக உள்ளது.
2)தமிழகம் என்கிற பிராந்தியம் (அ) பகுதியில் மட்டும் 
இது செல்லும்.
3) இந்தியா முழுவதிலும் உள்ள இந்துக்கள் இப்படித்
 திருமணம் செய்துகொள்ள முடியாது. ஏனெனில் இச்சட்டம்
 இந்துச் சட்டத்தின் அடிப்படையை மாற்ற வில்லை; 
அப்படி மாற்ற முடியாது; அதற்கு மாநில அரசுக்கு 
அதிகாரம் இல்லை. 
(ஆதாரம். வே ஆனைமுத்து, சிந்தனையாளன், டிச 2015)
 
இத்திருமணத்திற்கு தடை எழுந்தப்போது
 தந்தை பெரியார் “எதை ஆதாரமாக கொண்டு 
இதை தடை செய்கிறார்களோ அதையே தான் அவரும் ஆதாரமாக முன்வைத்தார். அதாவது,
““தமிழ்நாட்டில் நீண்டகாலமாக இந்தத் திருமண முறை 
ஒரு வழக்கமாக இருக் கிறது” 
என்று இந்திய அரசுக்கு எழுதும் படி, 
ஆலோசனை கூறி அனுப்பினார், பெரியார்.
இது எங்கள் வழக்கம், பல காலமாக கடைப்பிடிக்கிறோம்
 என்பதைவைத்துக்கொண்டுதான் சுயமரியாதை திருமண சட்டம் 
இந்து திருமண சட்டத்தில் சிறப்பு பிரிவாக சேர்க்கப்பட்டிருக்கிறது.
அதனாலே…
யாரும் ஆணியைப் பிடுங்க முடியாது!
சும்மா.. அப்பப்போ.. கொஞ்சம் சத்தமா எதாவது
கோஷம் போடுவதுடன் முடிந்துவிடுகிறது..
சீர்திருத்தங்கள்!
இதில ஒன்னுதான் பல்லக்கும்
பல்லக்கு தூக்கிகளும்.
 
சரவணா...
மக்களாகவே திருந்தனும்
நம்பிக்கைகள் மாறனும்.
பழக்கம் வழக்கம் என்பதை
மதங்கள் தங்கள் வசதிக்கேற்ப
வளைத்துக்கொள்கின்றன
பாவம் .. கடவுளும் தான் என்ன செய்வார்??!!


No comments:

Post a Comment