Saturday, November 14, 2020

WHO KILLED SHASTRI?

 

இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் குறித்த சந்தேகங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கின்றன.
இதைச் சுற்றி சுற்றி பல்வேறு கேள்விகளுடனும்
உரத்த குரல்களுடனும் வெளிவந்திருக்கும் திரைப்படம்.
தி தாஷ்கண்ட் பைஃல்ஸ்
ரஷ்யாவில் தாஷ்கண்ட் நகரில் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு சாஸ்திரிக்கு மாரடைப்பு
வந்து திடீர் மரணம் சம்பவித்த தாக சொன்னார்கள். சொல்கிறார்கள்.
அப்போதும் சில கேள்விகள் எழுந்தன.
1) ஒரு நாட்டின் பிரதமர் திடீர் மரணம் அயல்தேசத்தில் நடக்கிறது. யாருக்கும் சந்தேகமே வரவில்லையே ! ஏன்?

2) சாஸ்திரியின் உடல் ஏன் சோதனைக்குட்படுத்தப்படவில்லை?
(போஸ்ட்மார்ட்டம்)
3) சாஸ்திரியின் உடல் நீலம் பாரித்திருந்த்தாக சொல்லப்படுவது உண்மையா?

4) சாஸ்திரியின் உடலில் வயிற்றுப்பகுதியிலும் கழுத்திலும் வெட்டுப்பட்டு இருந்த தும் அதிலிரிந்து ரத்தப்போக்கு இருந்த தும் சாஸ்திரி அணிந்திருந்த தொப்பியில் அந்த ரத்த த்தின் கறை இருந்த தும்
கவனிக்கப்படாமல் மறக்கடிக்கப்பட்ட து ஏன்?
5) சாஸ்திரியின் மரணத்தால் யாருக்கு இலாபம்?
6) INDIA FOR Sales … அச்சமூட்டுகிறது.
Who killed shastri? என்ற புத்தகத்தின் பக்கங்கள் திரையில் ஓடுகின்றன.
இம்மாதிரி திரைப்படங்கள்….
அதுவும் காங்கிரசை நேரடியாக
குற்றவாளிக்கூண்டில் ஏற்றும் திரைப்படங்கள்…
இப்போது மிக அதிகமாக திரைக்கு வருகின்றன.
வரலாற்று உண்மைகளுக்கும் அப்பால்..
இதுவும் ஒர் அரசியல் தான்
இதில் யாரும் விதிவிலக்கல்ல என்ற புரிதலுடனும்
பார்க்க வேண்டியதிருக்கிறது.

No comments:

Post a Comment