Sunday, November 15, 2020

WALKING WITH THE COMRADES

 

லால் சலாம்…
மசே வை பேசவிடுங்கள்.
(WALKING WITH THE COMRADES)
அவள் காலடி நிலம் .. அந்த 60,000 சதுர கி.மீட்டர் வனம்
நம் இந்திய மண்ணின் ஆன்மா. ஜீவன்.
அதன் கழுத்தை நெறிக்கும் கரங்கள் எவராக இருந்தாலும் எத்துனை அதிகாரம் வலிமையுடன் வந்தாலும் மசே எதிர்கொண்டு போராட துணிகிறாள்.
அவளுக்குத் தெரியும்..
இந்தப் போராட்ட த்தில் அவளும் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு அவள் அன்னையும் சகோதரிகளும் தோழியரும் விதைக்கப்பட்ட மண்ணில் .. வீசப்படுவாள்,
அவளுக்குத் தெரியும்..
அவளுக்காக காத்திருக்கும் காக்கி உடைகளும்
துப்பாக்கி ரவைகளும்
.மசே….
அவளைப் பேச விடுங்கள்,
அவள் அந்த வனங்களின் யட்சி.
அவளைப் பேசவிடுங்கள்,
செவ்வணக்கம் காம்ரேட்
பூமி வெப்பமடைதலை குளிர்ச்சாதன அடுக்குமாடியில்
கணினி முன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்
அறிவுஜீவிகளுக்கு வன ங்களின் வாழ்க்கையை யார் தான் சொல்லுவது?
மசே வை பேசவிடுங்கள்.
வாகன ங்களை எரிப்பது வன்முறை தான்.
ஆனால் அந்த வன்முறையின் ஊடாக காந்திய துப்பாக்கியை எடுக்கவும் வனத்தை அழிப்பவரைக் கடுமையாக தண்டிக்கவும்...
மசே வின் பயணம்.. கரடுமுரடானது.
அவளுடன் சமவெளிகள் பயணிக்க முடியாது.
சமவெளிகளின் முன்னேற்றம் என்பதற்குப் பின்னால்
நடக்கும் OPERATION GREEN HUNT …யார்?
யாருக்காக இதெல்லாம் நடக்கிறது!
வனத்தடியில் புதைந்திருக்கும் கனிம வளங்கள்
தோண்டி எடுத்து வனங்களை அழித்த
நம்மிடம் அவள் கேட்கிறாள்!
இந்த முன்னேற்றம் என்ற பெயரில்
யார் முன்னேறி இருக்கிறார்கள் என்று!
அவள் கேள்விகளை நாம் எதிர்கொள்ள
அச்சப்படுகிறோம்.
இந்தியா விற்பனைக்கா!
என்ற இன்னொரு பக்கமாக அது விரிவது
நமக்கு விருப்பமில்லை.
நமக்கு நாம் விரும்பிய காட்சிகளுடனேயே
கதைகள் தேவைப்படுகிறது.
மசே.. வனத்தின் அழகு,
FAIR AND LOVELY அழகியல் மசே அறியாதவை.
அறிந்தாலும் அதை அவள் கரிய கால்தடம் மண்ணுக்குள்
புதைத்துவிடும் என்று விளம்பரங்கள் பயப்படுகின்றன.
நமக்கு விளம்பரங்களும் அதில் வரும் தேவதைகளும்
ரொம்பவும் முக்கியம்.
அதனால் தான் மசே…
மசேவை பேசவிட்டால்..
சத்யமேவ ஜெயதே..
வாக்குப்பலித்து விடலாம்.
மசே.. உன் குரல்வலையை
நெருக்கும் சமவெளியின் அதிகாரம்
பூமி நடுங்க ..
லால் சலாம் லால் சலாம்..
மசே வை பேச விடுங்கள்.
மசே.. மாவோயிஸ்டுகள்…
அருந்ததி ராய்
இந்திய அரசாங்கம் மவோயிஸ்டுகளின் தலைமையின்
தலையைத் துண்டித்துவிட்டால்
இந்த வன்முறையை நிறுத்திவிடலாம் என நினைத்தால்
அது பெரும் தவறாகிவிடும். மாறாக வன்முறை இன்னும்
பரவும், உக்கிரமடையும். அரசாங்கத்திடம் பேசு வார்த்தை
நட த்த யாரும் இருக்க மாட்டார்கள்” (பக் 93)
பெரிய அணைகள் நவீன இந்தியாவின் கோவில்கள்
என்று தப்பு தப்பாக அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தோம்.
அப்படித்தான் கற்பித்தீர்கள்,,
மசே .. உங்கள் கருத்தாக்கத்தை உடைத்தாள்,
இப்போது அவள் குரல்வலையைத் துண்டிக்க
நினைக்கின்றீர்கள்.
வேண்டாம்…
மசே.. நம் வனத்தின் யட்சி.
இந்திய மண்ணின் ஜீவன்.
மசே வை பேசவிடுங்கள்.
லால் சலாம் லால் சலாம்..
மசே…
தன் வனத்துடன் சமவெளியிலும் பள்ளத்தாக்குகளிலும்
இறங்கி நியாயம் கேட்கிறாள்.
அவளைப் பேசவிடுங்கள்.
மசே .. நம் வனத்தின் யட்சியைப் பேசவிடுங்கள்.

லால் சலாம்.
சத்யமேவ ஜெயதே.

பிகு:
இப்புத்தகம் கல்லூரிப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருப்பது புத்தகத்தை எழுதிய அருந்ததி ராய்க்கு தெரியாது. பொது ஜன வாசகர்களுக்கும் தெரியாது. தடை செய்யப்பட்டதன் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பரவலாக வாசிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணமாக இருந்த கல்லூரி நிர்வாகத்திற்கும் தடை கோரிய அமைப்பிற்கும் மிக்க நன்றி

2 comments:

  1. உண்மை. தடை செய்ததின் மூலம் வெகுமக்களுக்கு மேலும் சென்றடைந்துள்ளார். அருந்ததி ராயின் எழுத்துகள் வாசிக்கப்பட வேண்டியவை. நானும் வாசிக்கிறேன்.

    ReplyDelete
  2. Thamizh Iyalan சிறப்பு .. அருமையான பதிவு

    ReplyDelete