"வெள்ளை யானை என்பது
எங்களின் புதிய உலகம்" டும்.
மயான காண்டம்
இது அரிச்சந்திரனின் மயானம் அல்ல.
மயானத்தில் அசலாக வாழும் மனிதர்களின்
மயான காண்டம்.
ஞா. கோபி எழுதிய நவீன நாடகம்.( மாற்று நாடகம்.)
வாசிக்கும் போதே ..
இந்த நாடகப் பிரதி
நம்மை
வெள்ளை யானையில்
பயணிக்க வைக்கிறது.
" வெள்ளை யானை என்பது
எங்களின் புதிய உலகம்" டும்.
🔥🔥🔥🔥🔥
ஆயிரம் சாம்பான் மாண்ட கதை அறிந்தவன் நான்.
டும்
போதும் இந்த மரணக் கதைகள்.
டும்
இனி ஒடுக்குதலுக்கு எதிராய் நான் நிற்பேன்
டும்
மனிதனை மனிதன் ஒடுக்கும் சாதி
டும்
அதுவே இங்கு வேதங்கள் சொல்லும் நீதி
டும்
ஆணவக் கொலையில்
மாண்டவர் கோடி
டும்
கோடியில் அத்தனையும் மறைக்கப்பட்ட நீதி
டும்
இனியும் பொறுப்பது அழகில்லை மனிதருக்கு
டும்
இப்போ எல்லாம் யாரு சாதி பாக்கிறா
டும்
அவனிடம் கேளு...
உன் ஊரில் மலக்குழியில் அடைப்பெடுக்க நீயே இறங்குவாயா என்று
டும்.
இறுதியில் எதுவும் கொண்டு போவதில்லை என்பானே அவனிடம் கேளு
டும்
செத்தும் உன் பிணம் எரிக்க சாதிக்கு ஒரு இடமும் எரிக்கும் தணலில் நின்று வேலை செய்ய ஒருவனை ஒதுக்கினீரே அது ஏன் என்று
டும்
மறக்காதீர் செத்ததும் மாறும் பேய் கதையை போல
சுடுகாட்டிலும் சாதிப்பேய் அலையுது காண்பீர்
டும்
🔥🔥🔥🔥
என் மாடனே சொல்கிறேன் கேளும்
இனி முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன்
என் கேள்விக்கு விடை கிட்டும் வரையில்
தன்உரிமையை நான் எதிலும் விட்டுத் தர மாட்டேன்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
அந்த வழியதுவே நான் போகும் சமத்துவப் பாதை
🔥🔥🔥🔥
உனக்கு அந்த அதிகாரம் செய்ததை
டும்
நீ யாருக்கும் செய்திடாதே
டும்
மனிதர் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்ட
ஆயிரம் சான்று உண்டு
வெள்ளை யானை வரும்
அதில் நீ நம்பிக்கையாய் அமர வேணும்
டும்
எல்லோருக்கும் ஓர் வானம்
எல்லோருக்கும் ஓர் பூமி
டும்
உன் தொழிலை உணவை வாழ்வை நீ இனி முடிவு செய்.
டும்
அதிகாரமே வழிய விடு
டும்.
வெள்ளை யானை எங்களின் புதிய கற்பனை
டும்
வெள்ளை யானை எங்களின் புதிய உலகம்.
டும்.
🔥🔥🔥
வாழ்த்துகள்: 💐💐 நாடக ஆசிரியர் ஞா. கோபி 💐 Gopi Puducherry.
நன்றி : காவ்யா காலாண்டிதழ்🙏
மலர் 14 இதழ் 1
No comments:
Post a Comment