Tuesday, June 18, 2019

தமிழில் உறுதிமொழி எடுத்தால்... ??

நூறுகோடி முகமுடையாள்..
செப்புமொழி பல உடையாள்..
இந்தியாவின் பன்முகத் தன்மையை உறுதிப்படுத்தி இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எம் நன்றியும் வாழ்த்துகளும்.
இந்தி மொழி தவிர பிற இந்திய மொழிகளிலும்
உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள் நம்
நாடாளுமனற உறுப்பினர்கள்.
>பிஜேபி வேட்பாளர்கள் சதான்ந்த கெளடா & பிரகலாட் ஜோஷி
இருவரும் கன்னட மொழியில்

>மத்திய அமைச்சர் ஹரிசிம்ரன் கவுர் பாதல் – பஞ்சாபி மொழியில்.

>மத்திய அமைச்சர் அரவிந்த் கண்பட் சாவந்த் &
>ராவ்சாகிப் படில் டன்பெ இருவரும் – மராத்தி மொழியில்.

>ஜிதேந்திர சிங்க் – பிஜேபி வேட்பாளர் – டோங்க்ரி மொழியில்.

>பீகார் கோபால் ஜி தாகுர் & அசோக்குமார் யாதாவ் – மைதிலி மொழியில்

>காங்கிரசு தலைவர் ராகுல் காந்தியும் பிஜேபி வேட்பாளர் பாபுல் சுப்ரியோ இருவரும் – ஆங்கிலத்தில்.

> ராமேஷ்வர் டெலி பிஜேபி வேட்பாளர் – அசாமி மொழியில்

> தீபஸ்ரீ சவுத்ரி – பங்க்லா மொழியில்

>கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரசு எம்பி 
கொடிக்குன்னில் சுரேஷ் மலையாளத்திலோ ஆங்கிலத்திலோ 
உறுதிமொழி எடுக்காமல் இந்தியில் உறுதிமொழி எடுத்தார்.

>ஆந்திர எம் பிக்கள் சிலர் ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுத்தார்கள்.

>பிஜேபி எம்பி ஜனார்தன் சிங்க் சிக்ரிவால் போஜ்புரி மொழியில்
 உறுதிமொழி எடுக்க முன்வந்தார். ஆனால் அவர் விருப்பம் நிறைவேறவில்லை. காரணம்
போஜ்புரி மொழி இந்திய அரசியல் சட்ட த்தில் \
தேசிய மொழிகளில் ஒன்றாக இன்னும் இடம் பெறவில்லை.
இவை அனைத்துடனும் சேர்த்து வாசிக்க வேண்டிய செய்தி
 (முக நூல் அன்பர்கள் கவனிக்க... )
தமிழகத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்மொழியில்
உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள் என்பது.
அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகள்.

இதற்கு முன்பும் தாய்மொழியில் உறுதிமொழி 
எடுத்துக் கொண்டது உண்டு. 
எனவே என்னவோ இப்போது தான் நடைபெற்றது போல
 பொங்குவது தேவை தானா

1 comment:

  1. //தமிழகத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்மொழியில்
    உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள் என்பது.
    அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகள்.

    இதற்கு முன்பும் தாய்மொழியில் உறுதிமொழி
    எடுத்துக் கொண்டது உண்டு.
    எனவே என்னவோ இப்போது தான் நடைபெற்றது போல
    பொங்குவது தேவை தானா//
    தனது சொந்த தாய்மொழி தமிழ்மொழியில் எது செய்தாலும் மட்டமானது என்றும் ஆங்கிலத்தில் பேசி எது செய்தாலும் உயர்வானது என்ற நம்பிக்கை தமிழர்களிடம் ஆழமாக உள்ளது.அப்படியான தமிழகத்து நிலைமையில் தமிழகத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தாய் தமிழ்மொழியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டதிற்கு பொங்கி மகிழ்கிறார்கள்.

    ReplyDelete