Monday, January 1, 2018

கோரெகாவ் பீமா வெற்றித்தூண்

Bhima Koregaon க்கான பட முடிவு

கோரெகாவ் பீமா வெற்றித்தூண்
நேற்று  (01 /01/2018) புனேயில்  நடந்தக் கலவரத்தின் பின்னணியில்
இன்றும் வெளிப்படையாக தன்னைக் காட்டிக் கொள்கிறது
இந்திய தேசியத்தின் சாதி முகம்.
இது...வெறும்
200 ஆண்டு கால யுத்தம் அல்ல.
2000 ஆண்டுக்கு மேலாக  தொடரும் யுத்தம்.

கோரெகாவ் பீமா வெற்றித்தூண் ஒடுக்கப்பட்ட மக்களின்
 வீரத்திற்கும் விவேகத்திற்கும் அடையாளம்.
200 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் பெற்ற வெற்றியின்
 அடையாளம்.
இந்த வெற்றித்தூண் 200 ஆண்டுகளுக்குப் பிறகும்
 ஏன் சிலருக்கு எரிச்சல் தருகிறது. ?
இந்திய மண்ணில் ஆங்கிலேயர்கள் சிற்றரசுகள்
மற்றும் பாளையக்காரர்களின் உதவியுடனும்
அவர்களைப் பிரித்தாண்ட சூழ்ச்சியிலும் வென்று
 இந்திய தேசத்தை உருவாக்கினார்கள் என்பது
வரலாறு.
  வெள்ளையனின் வெற்றியை ஏற்றுக்கொண்டவர்கள்
 இந்த ஒரு வெற்றியை மட்டும் ஏன்
 ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்?
இன்னும் ஒரு படி மேலே போய் இந்த வெற்றியே
வரலாற்றுப் பிழை என்று சொல்லத்
துணிவது ஏன்?
இப்படியான அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில்..
இந்த வெற்றி மகர் வீரர்களின் வெற்றி.
(The Koregaon celebration questions the dominant notion of nation and
their  nationalism. This is why anxious upper caste groups call it “anti-national”.)

மகர்களை தன் இராணுவத்தில் இணைத்து தன் காவற்கோட்டத்தில்
நிறுத்தியவன் ,  இவர்கள் கொண்டாடும் மராத்திய மண்ணின் ஒரே சக்கரவர்த்தி சத்ரபதி சிவாஜி என்ற வரலாற்றை மறைத்து,
தங்கள் வரலாற்றை ஆதிக்கசாதியின் ஆட்சிப்பீடத்தில்
இருந்த பேஷ்வாக்களின் அதிகாரத்தை தேசபக்தியாக்கும்
வரலாற்று துரோகம்.

500 மகர் படை வீரர்கள் கொண்ட படை ஆங்கிலேய தளபதியின்
 கீழ் தொடர்ந்து 42 மணிநேரம்  20,000 குதிரைப்படை, 8000 படைவீரர்களுக்கு எதிராக போரிட்டு பெற்ற வெற்றி என்பதால் தான்.
 இந்த வெற்றியின் அடையாளங்கள் இவர்களின்
 ஆதிக்கசாதி உளவியலை அச்சுறுத்துகிறது.
தங்கள் வீரமிகு வரலாற்றை மீட்டெடுக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள்
உ.பி, பீகார், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்த்தின்
 பிற பகுதிகளிலிருந்தும் ஒவ்வொரு ஆண்டும்  ஜனவரி 1 இலட்சக்கணக்கானவர்கள் கூடுகிறார்கள்.
இது கும்பமேளாவுக்கு கூடுகின்ற கூட்டமல்ல.
இதுதான் இன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு
அச்சம் ஊட்டுகிறது.
வெற்றியின் சமூக அரசியலை வரலாற்றை மறைத்து
 இந்த வெற்றியையும் மகர்களின் வீரத்தையும்
மறைப்பதற்கு நேற்று சொல்லப்பட்ட காரணம் கூட "தேசபக்தி"!!
இந்த தேசபக்தியாளர்கள் கைகளில் காவி நிறக்கொடி ஏந்தி
கோரெகாவ் பீமா நோக்கி பயணித்த வாகனங்கள் மீது கல்லெறிந்து
தீக்கிரையாக்கி தங்களின் தேசபக்தியைக் காட்டிக்
கொண்டார்கள்.
இவர்களின் தேசபக்தி தான் காந்தியைக் கொன்ற குண்டுகளிலும்
இருந்தது என்பதை இவர்கள் அடிக்கடி நினைவூட்டுகிறார்கள்.
இவர்களின் நோக்கம் வரலாறு நெடுகிலும்
எம் தடங்களை அழிப்பது மட்டும் தான்.
இது வெறும் 200 ஆண்டுகால யுத்தம் அல்ல.
2000 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் யுத்தம்.

1 comment: