Saturday, February 25, 2017

சிவலிங்க நாயகனே!



ஒளிப் பிழம்பாய்
மழைத் துளியாய்
ஆகாயத்தை எரிக்கிறது
உன் நெற்றிக்கண்ணின்
ஒற்றைத்துளி.

கருகி சாம்பலாகி
காற்றில் கலக்கிறது
நினைவுச் சுருள்
மீன் கொத்திப் பறவையின்
றக்கையிலிருந்து உதிர்கின்றன
காதல் கடிதங்கள்.

சாட்சியங்கள் ஒவ்வொன்றாக
ஆணுறைகள் நிரம்பி வழியும்
குப்பைத்தொட்டிக்குள் விழுகின்றன.

இருளைத் தின்று செரித்த
பெருநகரப் பிசாசுகள்
வெளிச்சத்தை வன்புணர்வு செய்கின்றன.

நதி ஒன்று
சாக்கடைக்குள் விழுந்து
மரணித்துவிடுகிறது.

ஹே சென்னி மல்லிகார்ஜுனா
சிவலிங்க நாயகா
திருவண்ணாமலையில்
சித்தர்கள் கிரிவலம் வரும் இரவில்
உன்  புதல்வி 
பூப்பெய்துவிட்டதற்காக
காமாட்டிப்புரத்தில்
விழா எடுக்கிறார்கள்.

No comments:

Post a Comment