Wednesday, August 17, 2016

தமிழக சட்டசபைக்கு அறிவிப்பது என்னவென்றால்...




தமிழக சட்டசபைக்கு அறிவிப்பது என்னவென்றால்...

அதாகப்பட்டது..
அவைக்குறிப்பில் என்ன இருந்தால் என்ன?
என்ற முடிவுக்கு பொதுஜனங்கள் வந்துவிட்டோம்.

எதிர்காலத்தில் அவைக் குறிப்பை வைத்துக்கொண்டு
இன்னார் இதைப் பேசினார், அன்னார் அதைப் பேசினார்,
இவருக்கு இவர் பதில் சொன்னார்
இவர் இந்தக் கட்சியில் இருந்தார்  இப்படியான
பல்வேறு செயுதிகள் பதிவாகிவிடும்.
பதிவானவை வரலாறாகிவிடும்.


அப்படி எல்லாமா நம்ம தமிழ்ச் சமூகம் உண்மை வரலாற்றைத்
தோண்டி எடுத்து மண்டையைப் பிளக்கப்போகிறார்கள்??
நேற்று நடந்த தேர்தலில் சொன்னதை இன்று மறந்து 
உங்களை எல்லாம் தலைவ்ர்களாக
தங்கள் தொகுதி வேட்பாளர்களாக தேர்ந்தெடுத்து
அனுப்பி இருக்கும் எங்களை எல்லாம் பார்த்தா
இன்னும் அப்படியா தோனுது..?!!!
சரி,... விட்டுத்தள்ளுங்கள்..
இந்தப் பிரச்சனைக்ள் அனைத்துக்கும் ஒரே ஒரு முடிவுதான்
உண்டு.
இதனால் அற்விப்பது என்னவென்றால்...
டும் டும் டும்..

இனிமேல் தமிழக சட்டசபையில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி
உதிரிக்கட்சி, மைனாரிட்டி கட்சி, இப்படியாக யார் என்ன பேசினாலும்
அவர்கள் பேசியது எல்லாமே அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும்.!
டும் டும் டும்.

அப்பாடா...
ஒரு வழியா பிரச்சனைக்கு தீர்வு கண்டாச்சு..

No comments:

Post a Comment