Monday, August 15, 2016

மன்னிக்க வேண்டும் பிரதமர்ஜி

 

SMS from DZ-PMMODI

iNDEPENDENCE DAY GREETINGS TO YOU. WE SALUTE
OUR FREEDOM FIGHTERS. JAI HIND! YOU CAN HEAR MY
RED FORT ADDRESS HERE:


http://pmapp.nic.in/pmapp?300SMQFFEA

இப்படி எல்லாம் நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பியும் கூட நான்
உங்கள் செங்கோட்டை உரையைக் கேட்கவில்லை!,,
எனக்கு அச்சமாக இருக்கிறது... ஓர் இந்தியக்குடிமகனாக (ளாக)
இது தேசத்துரோகமாக ஆகிவிடக்கூடாதோ என்று.

நான் ஏன் உங்கள் உரையைக் கேட்கவில்லை என்பதை
வெளிப்படையாக இவ்விடத்து சொல்லிவிடுவது நல்லது
எனக்கு எதுவும் ஆபத்து வந்தால் என் முகநூல் நண்பர்கள்
என் உண்மை நிலையை எடுத்துக்காட்ட இதுவே ஆதரமாக
இருக்கும் என்பதால் இதை இவ்விடத்து
பதிவு செய்கிறேன்.

>இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதி கணம்  T S THAKUR
 அவர்கள் பிரதமரின் உரை ஏமாற்றம் அளிக்கிறது
என்று சொன்னதற்கும் நான் கேட்காமல் இருப்பதற்கும்
எவ்வித தொடர்பும் சத்தியமாக இல்லை..

> POK  பிரச்சனையை பேசிய நீங்கள் அத்துடன் சேர்ந்து
பலுசிஸ்தான் பிரச்சனையையும் பேசினீர்களாமே.
ஏற்கனவே  நம்ப தோஸ்த் பாகிஸ்தான் காரர்கள்
பலுசிஸ்தான் பிரச்சனையை உருவாக்கியது
நம்பள் தான் , இந்தியா தான் என்று சொல்லிக்கொண்டிருக்க
நீங்கள் செங்கோட்டையின் நின்று கொண்டு பலுசீஸ்தான்
பற்றி பேசி இருக்கிறீர்கள்! இது குறித்து முன்னாள் அயலுறவு
அமைச்சர் சல்மான் குருஷித் கருத்துடன் எனக்கு
உடன்பாடு என்றெல்லாம் நீங்கள் என்னை நினைத்துவிடக்கூடாது.!
சல்மான் குருஷித் கருத்துக்கு காங்கிரசே முழு ஆதரவு
தராத நிலையில் எங்களைப் போன்றவர்களின்
கருத்து உருவாக முடியாது. இடியாப்ப சிக்கல் போல
இருக்கும் இந்தியாவின் அயலுறவுக்கொள்கையுடன்
ஒரு சாதாரண இந்திய பிரஜைக்கு என்ன புரிதல்
இருக்க முடியும்? யெஸ் பிரதம்ர்ஜி..
எனக்கு இதெல்லாம் காரணமே அல்ல.

> உங்கள் உரையில் சில சொற்கள் எத்தனை முறை
நீங்கள் ப்யன்படுத்தினீர்கள் என்பதையும் சிலர்
கணக்கு வைத்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அதாவது,
COUNTRY - 73,
SISTERS 60,
GOVERNMENT 58,
INDIA 56
என்று. இந்த மாதிரி சிறுபிள்ளைத்தனமான காரணங்களைக்
காட்டி உங்கள் உரையை நான் நிராகரிக்கவில்லை
பிரதமர் ஜி. பாரதமாதா மீது சத்தியமாக இதைச் சொல்கிறேன்
நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

> இந்தப் பாருங்கள் மோடி ஜி...
2014ல் உங்கள் முதல் செங்கோட்டை முழக்கம் 65 நிமிடங்கள்.,
கேட்டேன். அதில் நீங்கள் சொன்னதை எல்லாம் நிறைவேற்றி
விட்டீகளா என்று எதிர்க்கட்சி மாதிரி நான் கேட்கப்போவதில்லை.
2015, ஆக 15ல் 88 நிமிடம் பேசினார்கள்.
சமையல் செய்துக்கொண்டே கேட்டேன். கொஞ்சம் விட்டுவிட்டு
................ விட்டு.-------
இந்த ஆண்டு 2016ல் 94 நிமிடம் பேசி இருக்கிறீர்களாமே
பிரதமர் ஜி... அடேங்க்கப்பா....
இப்போதைக்கு எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது.
சப்பாத்திக்கு மாவு பிசைவதிலிருந்து கழிவறை கழுவதுவது
வரை ... தலைக்கு மேலே வேலை...
டிஜிட்டல் இந்தியாவில் இதற்கெல்லாம் இன்னும்
விடிவு பிறக்கவில்லை.  என்னை மன்னிக்க வேண்டும்
பிரதம்ர் ஜி...
இந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே உங்கள்
உரையை இந்த ஆண்டு கேட்கமுடியாத நிலை...

மற்றபடி உங்கள் டிரெஸ்... உங்கள் போஸ்.. எல்லாம்
சூப்பர்,..
ஜெய் ஹிந்த்!1



No comments:

Post a Comment