Tuesday, March 22, 2016

அரசியலில் இதெல்லாம் சகஜம்பா.. (1)


தேர்தல் அரசியலைக் கடுமையாக விமர்சித்த வன்னியர் சங்க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் . 16 ஜூலை 1989 சென்னை சீரணி அரங்கில் பாட்டாளி மக்கள் கட்சி என்ற அரசியல் குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தார்.
சமூகநீதி, ஜனநாயகம், சமத்துவம், மனிதநேயம் இந்த நான்கும் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் குறிக்கோள் என்று முழங்கினார். 
மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட , சிறுபான்மை
மக்களின் நல்வாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் பாடுபடுவது தான் தங்கள் இலட்சியம் என்று அறிவித்தார்.
தலைவர் பதவி வன்னியருக்கும் செயலாளர் பதவி
தாழ்த்தப்பட்டவருக்கும் வழங்கப்படும் என்பது அவர்
அறிவிப்பில் மிகவும் முக்கியமானது. அதன்படி
தலைவராக பேராசிரியர் தீரன், செயலாளராக எழில்மலை
(இந்த இருவருமே தற்போது அக்கட்சியில் இல்லை என்று
நினைக்கிறேன்.)
இலட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்த அன்றைய துவக்க விழாவில் அவர் கொடுத்த வாக்குறுதிகளின் முக்கிய சாராம்சங்கள்:
* நான் எக்காலத்திலும் சங்கத்திலோ கட்சியிலோ எந்த ஒரு பதவியையும் வகிக்க மாட்டேன்.
*என் வாழ்நாளில் தேரதலில் போட்டியிட மாட்டேன்.
என் கால்செருப்பு கூட சட்டமன்றத்திலோ/நாடாளுமன்றத்திலோ நுழையாது.
*பொதுக்கூட்டங்கள்/பொது நிகழ்ச்சிகளுக்கு சொந்தச் செலவில் வந்துப்போவேன்.முடியாதபோது
ஓய்வெடுத்துக்கொள்வேனே
தவிர அடுத்தவர் செலவில் வந்து போக மாட்டேன்.
*பிரதமர் பதவியைக் கொடுத்தாலும் சரி, சுவிஸ் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் என் பெயரில் போடுவதாக பேரம் பேசினாலும் சரி, இந்த ராமதாஸ் விலை போக மாட்டான்.
இது என் தாய்மீது சத்தியம்.
*என் வாரிசுகளோ , சந்ததியினரோ , யாரும் எக்காலத்திலும் சங்கத்திலோ கட்சியிலோ எந்த ஒரு பதவிக்கும் வரமாட்டார்கள்!!!!
*இவற்றை எல்லாம் உங்கள் டைரியில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்...
 (அவரு சொன்னாருனு நானும் எழுதி வைத்திருந்தேன்.. !)
என் தாய்மீது செய்து கொடுத்த சத்தியத்தை மீறி நான் நடந்தால் என்னை
நடுரோட்டில் நிறுத்தி வைத்து ச+++ல் அ++++ள். (எடிட்டிங் என்னுடையது)
----
காலம் எவ்வளவு மாறிவிட்டது, 
மருத்துவரை குறை சொல்ல முடியாதுதான்
அரசியலில் இதெல்லாம் சகஜம்பா...

No comments:

Post a Comment