Sunday, November 23, 2014

வங்கிகளைக் கொள்ளையடிக்கும் முகமூடி இல்லாத திருடர்கள்


(amount in crores)






பிள்ளைங்க மேற்படிப்பு படிப்பதற்கு கடன் வாங்கும் நம்மிடம்,
இடிந்து கிடக்கும் வீட்டைக் கட்டி முடிக்க கடன் வாங்கும் நம்மிடம்,
ஏதோ நாமும் காரில் போனால் என்ன? என்று ஒரு பழைய காரை
வாங்க ஆசைப்பட்ட காரணத்திற்காக அலைக்கழிக்கப்பட்ட நம்மிடம்,
குமரு கரையேத்த கடன் வாங்கும் நம்மிடம்,
கிணறு தூரு வாரினால் ஏதோ தக்காளியும் மிளகாயும் பயிர் வச்சிடலாமா,
அதனாலே நாலு காசு சேர்ந்திடாதா என்ற கனவில் கடன் வாங்கும்
நம்மிடம்... கடன் வாங்கும் முன் தன் பொண்டாட்டியைத் தவிர
பிற அசையும் அசையா , உயிருள்ள உயிரற்ற அனைத்தையும்
அடமானமாக எழுதி வாங்கி கடன் கொடுக்கும் வங்கிகள்
கீழக்கண்ட பெரிய மனிதர்களுக்கு எப்படி கடன் கொடுத்தன?
எதை அடமானமாக வைத்து கடன் கொடுத்தன?

வங்கிகளின் வருமானம் பெரும்பாலும் அவர்கள் கொடுத்திருக்கும்
கடனுக்கான வட்டியிலிருந்து வருவது தான். இன்று பல வங்கிகளில்
வட்டி மட்டுமல்ல, முதலுக்கே மோசம் செய்திருக்க்கிறார்கள்
சில முகமூடி அணியாத பகற் கொள்ளைக்காரர்கள்.
இந்தப் பகற்கொள்ளைக்கு காரணம் அந்தக் குறிப்பிட்ட
வங்கியில் பணி புரிபவர்களோ அல்லது ஏன் அந்தக் குறிப்பிட்ட
வங்கியின் மேனேஜரா அல்ல என்பது தான் இன்னும் கூடுதலான
அதிர்ச்சி தரும் உண்மை

தாஜ், ஒபேரா நட்சத்திர ஹோட்டல்களில்
கான்பரன்ஸ் என்ற பெயரில் நடக்கும் விருந்துகளில்
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் டைரக்கடர்கள்
ஒப்புதலுடன்(வற்புறுத்தலுடன்) வங்கியின் சேர்மன்
முன்னிலையில் இப்பகற்கொள்ளை நடக்கிறது.


கடந்த நிதி ஆண்டு முடிவுடன் ஒப்பிடும் போது
 மொத்த வாராக்கடன் 63,386 கோடி ரூபாய்
அதிகரித்திருக்கிறது.
 இந்த தகவலை என்.பி.ஏ.சோர்ஸ் டாட் காம் தெரிவித்திருக்கிறது.

SBI - march 2014. INR. 51,189 crores. 3RD QTR 2014. INR  67,799. CRORES.

UBI - march2014   INR    2,963. crores 3RD QTR 2014  INR   8,546. CRORES.

IDBI- march2014   INR    6,450  crores 3RD QTR 2014  INR 10,012. CRORES.

BOB-march 2014  INR   7,983   crors   3RD QTR 2014  INR 11,926  CRORES

மொத்த வாராக்கடன் இந்த 9 மாதங்களில் மொத்தம் 49 விழுக்காடு
அதிகரித்திருக்கிறது. 4வது காலண்டில் இது இன்னும் மோசமடையும்!

வங்கிகளின் வாராக்கடனில் இரும்பு–உருக்கு, உள்கட்டமைப்பு,
விமானச் சேவை, ஜவுளி மற்றும் சுரங்கம் ஆகிய ஐந்து துறைகளின்
 பங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்த ஐந்து துறைகளும்
மிக முக்கிய பங்கினைக் கொண்டுள்ளன என்றும் நாட்டின்
பொருளாதர வளர்ச்சிக்கு ஏற்ப இத்துறைகளின் வளர்ச்சியும்
இருக்கும் . இதை  அடிக்கடி நம் நிதித்துறை அமைச்சர்கள்
நமக்குப் புரியாத கணக்குகளைச் சொல்லி விளக்கம்
சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இதில் உள்கட்டமைப்பு,
சுரங்க தொழில் துறைகளில் இருக்கும் ஊழல்களை
நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

இந்த வாரக்கடனில் முக்கியமானவை மொத்தத்தில் 30க்குள்
இருக்கும். வாராக்கடனில் 80 விழுக்காடு இந்த குறிப்பிட்ட
30 பெரும்புள்ளிகளின் கடனுக்குள் அடக்கம்.
மாதிரிக்கு சிலரின் பெயர்களும் கடன் விவரமும்.
அட்டவனையில் உள்ளது.

இந்தப்பட்டியல் தவிர நம் அரசியல்வாதிகள், அமைச்சர்கள்,
அவர்களின் உறவினர் என்று இருக்கும் பட்டியல் தனிப்பட்டியல்.

வாராக்கடன் வசூலிக்கும் முறை, சட்டதிட்டங்கள், ரிசர்வ் வங்கியின்
நடவடிக்கை, இதை எல்லாம் கண்காணிக்கும் குழு... இப்படி
இந்த வாராக்கடனுக்கு பல்வேறு செலவினங்கள் வேறு
தொடர்ந்து கொண்டிருக்கிறது.





குறிப்பு:

http://www.arcil.co.in/data/news/DNA_MUM_20_11_14.png

http://firstbiz.firstpost.com/corporate/bank-union-puts-out-npa-list-kingfisher-top-defaulter-47383.html

1 comment:

  1. ஏழைகள் மீது வழக்குப் போட்டு வசூலிக்கும் வங்கிகள், பணக்காரர்களிடம் அவ்வாறு செய்வதில்லைதான்

    ReplyDelete