Friday, July 13, 2012

இப்படியும் ஓர் உண்ணாவிரதம்!

உண்ணாநிலையில் வடக்கிருந்து உயிர்விட்டது ஒரு காலம்.
காந்தியின் மிக வலிமையான ஆயுதம் உண்ணாவிரதம் என்று
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு  எழுதப்பட்டிருக்கிறது.
பெண்டிர் மடலேறுவது இல்லை என்று தொல்காப்பியம் சொல்வதை 
அதெல்லாம் அந்தக்காலமய்யா என்று சொல்லியிருக்கிறது சில நிகழ்கால
செய்திகள்.
காதலித்தவன் ஏமாற்றி விட்டால் "விட்டேனா பார்" என்று அவன் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருந்து திருமணம் செய்துக்கொண்ட சில
வீரக்காதலியரை அண்மைக்கால பத்திரிகை செய்திகள் மூலம்
அறிந்து பெருமிதம் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இந்த உண்ணாவிரதங்கள் அனைத்தையும் தூக்கிச்சாப்பிட்டுவிட்டது...
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் இராஜஸ்தானைச் சார்ந்த ஓம் சாந்தி சர்மா என்ற பெண்மணியின் உண்ணாவிரதம்.


செய்தி இதுதான்:


ஓம் சாந்தி சர்மா, புதன்கிழமை, 11 ஜூலை 2012 முதல் புதுடில்லி , ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கிறார். அவருடைய கோரிக்கை, இந்தியாவின் (இளவரசர் )ராகுல்காந்தி அவருக்கு மருமகனாக
வரவேண்டுமாம். அதற்காக 15 கோடி வரதட்சனை கொடுக்கவும் தயாராக
இருக்கிறாராம். தன் மகளுக்கு ராகுல்காந்தியை விட மிகச்சிறந்த வரன்
வேறு எவரும் இருக்க முடியாது என்று நினைக்கிறாராம்.
இதைப் பற்றி காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று
தெரியவில்லை. டிசிபி  கே சி திரிவேதி "பாவம், இந்தப் பிரச்சனை காரணமாக
 மவுனவிரதம் இருப்பதாக கேள்வி.


பாவம்..இந்தியத்தாய்.. 

No comments:

Post a Comment