Wednesday, July 6, 2011

தமிழ் சிந்தனையாளர் சங்கமத்தின் எட்டாம் அமர்வில்

ஈழத்தமிழர் படுகொலை பற்றிய ஐநா அறிக்கை வெளிவந்தப் பின்
அது குறித்த கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், சொற்பொழிவுகள்,
கட்டுரைகள் என்று வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இச்சூழலில்
இவ்வறிக்கை குறித்த ஒரு தெளிவு மும்பை மக்களிடம் இருக்கிறதா
என்ற ஐயம் எங்களுக்கு ஏற்பட்டது. அப்போதுதான் தமிழ் சிந்தனையாளர்
சங்கமத்தின் எட்டாம் அமர்வில் 'இலங்கை தமிழர் படுகொலை பற்றிய
ஐநா அறிக்கை' என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்ற
திரு குமணராசன் - தமிழ் இலெமுரியா மாத இதழின் ஆசிரியர் அவர்களைக்
கேட்டுக் கொண்டோம்.







திரு குமணராசன் அவர்கள் திராவிட இயக்கப் பின்னணியில் வளர்ந்தவர்.
தந்தை பெரியாரின் கொள்கைகளைத் தன் வாழ்க்கையில் அனைத்து தளங்களிலும்
கடைப்பிடித்து வரும் ஒரு சிலரில் மிகவும் முக்கியமானவர். சிறந்தச் சிந்தனையாளர்,
பேச்சாளர், மும்பை புறந்கர் திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பை
ஈழத்தமிழர் பிரச்சனை குறித்த திமுக வின் நிலைப்பாடு காரணமாகத் துறந்தவர்.
ஈழத்தமிழர் பலருக்கு நன்கு அறிமுகமானவரும் கூட.

நவிமும்பை தமிழ்ச் சங்க அரங்கத்தில், 3/7/11 ஞாயிறு மாலை 7 மணிக்கு கூட்டம்
ஆரம்பமாகியது.
மும்பை மழையில் நனைந்துக் கொண்டு வந்தவர்களை அன்றைக்கு அவர்
பேச்சு சூடாக்கியது. அவர் பேச்சிலிருந்து சில துளிகள்..

>இந்த சூலை மாதம் ஈழத்தமிழர் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வுகள்
நடந்த மாதம். இப்படி ஒரு ஜூலை மாதத்தில் தான் குட்டிமணி வன்கொடுமை
செய்யப்பட்டார். பண்டாரநாயகாவுடன் இந்திய அரசு ஓர் ஒப்பந்தம் செய்ததே
அதுவும் இந்த ஜூலை மாதத்தில்தான், ஏன்.. ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே
ஒப்பந்தமும் ஜூலை 27 1987ல் தான்.
இன்றைக்கு அதே ஜூலை மாதத்தில் தான் அந்த நினைவுகளை எல்லாம் சுமந்துக்
கொண்டு உங்கள் முன் நான் நிற்கிறேன். தமிழனுக்கு எட்டாத உரிமைகளை
உங்கள் எட்டாவது அமர்வில் பேச என்னை அழைத்திருக்கின்றீர்கள்.

> தாயை இழந்த சேயிடம் பொம்மையைக் காட்டி ஏமாற்றுவது போல ஐநா
அறிக்கையும்.

> ஈழத்தமிழர் குறித்து எதற்கும் அசையாத தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி
இருக்கிறது.

> இலங்கையில் தமிழர் வரலாறு வந்தேறிகளின் வரலாறு மட்டுமல்ல, அந்த நிலத்தின்
மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் வரலாறும் கூடத்தான் என்பதைப்
பலர் புரிந்து கொள்வதில்லை. எனவே இலங்கை வரலாற்றைத் தொட்டுச்செல்வது
சிலரின் ஐயப்பாடுகளைத் தீர்த்து வைக்கும்.
(சரியாகவே தான் சொன்னார் என்று நினைத்துக் கொண்டேன். ஏனேனில் அங்கே
வேலைத்தேடிப் போனவா தனிநாடு கேட்டா சரியா? சொல்லுங்கோ..? என்று
ஒரு கல்லூரி பேராசிரியரே மும்பையில் பேசியது என் நினைவுக்கு வந்தது.!!)

> ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த , நிர்வாகக்காரணங்களுக்காக இந்தியா என்றும்
இலங்கை என்றும் ஒன்றுபட்ட தேசங்களின் சுதந்திர வரலாற்றுப் போரில்
தமிழனின் குரல் என்றுமே தனித்து ஒலிக்கவில்லையே. அவர்களின் அன்று
பெருந்தன்மையுடன் நடந்துக் கொண்டார்கள். அதனால் தான் ஒன்றுபட்ட
சுதந்திர இந்தியா, ஒன்றுபட்ட சுதந்திர இலங்கை என்று கொடி பறந்தது.

> ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை அடங்கி இருந்த சிங்களவர், சுதந்திரம்
கொடுக்கப்பட்டவுடன் தங்கள் கோரமுகத்தைக் காட்டியது ஏன்?
காரணம் ஈழத்தமிழனின் பொருளாதர, கல்வி ஆளுமை.

> அதன் பின் சிங்களவர்/ தமிழர்களுக்கு நடுவே தரப்படுத்துதல் என்ற கீறல்
விழுகிறது.
> 1954ல் ஆசியஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேரு ஒப்பந்தம் செய்து
கொள்கிறார். ஈழத்தமிழர்களின் நலனுக்காக அல்ல, தன்னை ஆசியஜோதி
என்று நிலைநிறுத்திக்கொள்ள. தங்கள் அரசியல் சுய லாபங்களுக்காக.




(அனைத்து தீர்மானங்களையும் குறித்து காலவரிசைப்படி அவர் பட்டியலிட்டார்.)

வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழீழம் அமைய இளைஞர்களே வாருங்கள் என்றழைப்பு
விட்டது.

> ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். தமிழர்கள் பல்வேறு தமிழீழ அமைப்புகளின்
மூலம் அமைதியான முறையில் எடுத்த எல்லா முடிவுகளும் தீர்மானங்களும்
சிதைக்கப்ட்டனவே, இதற்கெல்லாம் காரணம் யார்? ஈழத்தமிழர்களா?
இக்காலக்கட்டத்தில் புலிகள் இயக்கம் அப்போது பிறக்கவே இல்லை.
ஈழத்தமிழர் ஆயுதம் ஏந்தியதற்கு காரணம் புலிகள் , புலிகள் என்று
சொல்கிறவர்கள் யோசிக்க வேண்டும்.

> 1983, ஆகஸ்டு 04ல் இதே மும்பையில் ஈழத்தமிழர்களை ஆதரித்து 10 இலட்சம்
தமிழர்கள் திரண்டார்கள். தமிழர் பேரவையின் தலைவர் வரதராசனார் தலைமையில்.
அன்றைக்கு தமிழர்கள் பேரணியில் கலந்துக் கொள்ள வசதியாக அம்பர்நாத்திலிருந்து
ஒரு ரயில்வண்டியே முன்பதிவே செய்யப்பட்டது. இன்றைக்கு அந்தத் தமிழர்கள்
எல்லாம் எங்கே போய்விட்டார்கள்?

>கொத்துகொத்தாக ஈழத்தமிழர் செத்து மடியும் போது கள்ள மவுனம் சாதித்த
ஐநாவும் பான்கிமூனும் இன்றைக்கு மனித உரிமைகள் குறித்துப் பேசுகிறார்கள்

> இந்திய எல்லைப் போரில் எல்லாம் துடித்து எழுந்தவன் தெற்கே வாழ்ந்த தமிழன்.
வேற்றுமையில் ஒற்றுமை என்று இந்தியாவின் பதாகையைத் தூக்கிப் பிடித்திருக்கும்
கைகள் தமிழனின் கைகள். ஆனால் இந்தியா மட்டும் எப்போதும் தமிழனை
வேற்றுமைப் படுத்தியே பார்க்கிறது.
(ஆமாம்.. இந்தியா எங்களைக் காப்பாற்றும் என்கிறது இலங்கை அரசும்
ராஜபக்சேயும். இந்தியா எங்களைக் காப்பாற்றும் என்று கூறமுடியுமா
நம் தமிழக மீனவர்கள்? என்று அடுத்தக்கட்டத்திற்கு என் மனம் தாவியது)

> மேற்கு வங்க மாநிலத்தின் அன்றைய முதல்வர் ஜோதிபாசு சட்டமன்றத்தில்
நிறைவேற்றிய தீர்மானம், நடுவண் அரசு ஏற்காவிட்டால் மாநில அரசின்
கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் போலீஸ்படையைக் கொண்டு போராடத் தயங்க
மாட்டேன் என்று வெகுண்டெழுந்ததும் அதுவே பங்களாதேசம் என்று
இன்றைக்கு ஐநாவில் ஒரு தனிதேசக்கொடிப் பறக்க காரணமானதும்
வடக்கே சாத்தியப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடுவதற்கில்லை.

> இந்த அறிக்கையில் ஒரு வரியில் கூட இனப்படுகொலை என்ற சொல்
பயன்படுத்தப்படவில்லை.

> No Fire zone என்று அறிவித்துவிட்டு அங்கே தமிழர்களைக் குவித்து
குண்டு போட்டு அழித்ததைப் பதிவு செய்துள்ளது.

> கேம்ப் களில் ஸ்கீரின் சோதனை என்ற பெயரில் நம் தமிழ்ப்பெண்களின்
உடலைத் தொட்டுப் பார்த்ததையும் ஏன் நிர்வாணமாக்கியதையும்
பதிவு செய்துள்ளது.

திரு குமணராசன் அவர்கள் சற்றொப்ப இரண்டு மணிநேரம் பேசினார்.
அதன்பின் இலங்கையின் கொலைக்களம் என்ற சேனல்4 ல் வெளியான
ஆவணப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது.
கனத்த இதயத்துடன் ... நாங்கள்..ஒவ்வொருவரும்.

1 comment:

  1. From: aiya pillai (aiyapillai_2007@yahoo.co.in)
    Sent: 10 July 2011 12:28PM
    To: puthiyamaadhavi sankaran (puthiyamaadhavi@hotmail.com)


    Dear Com. Puthiyamaadhavi,




    Thank you for your greetings.






    Thank you very much for giving the summary of Com Kumanarajan’s 2 hours speech at Navi Mumbai Tamil Sangam on 03.07.2011.



    The stand of DMK relating to Srilanka Tamil changed not only Com. Kumanarajan but also so many DMK members in Tamil Nadu.

    That is why the DMK failed in the recent Assembly Election.



    right now Kumanarajan proved himself as a Periyarist.



    Your Meluguvarthi Kavitai is also good. Thank you for the same.





    Regards

    Gnana Aiyapillai

    ReplyDelete