Monday, April 13, 2009

வலிநிவாரணி


அச்சமாக இருக்கிறது
மின்னஞ்சல்களை வாசிக்க.
அச்சமாக இருக்கிறது
பத்திரிகை பக்கங்களைப் புரட்ட.
அச்சமாக இருக்கிறது
பூக்கள் நடத்தும்
புறநானூறு பாட.
அச்சமாக இருக்கிறது
உண்மையின் கோரமுகம்.

சீழ்வடியும்
காயங்களின் வலியுடன்
காலம்தள்ளுவது
கஷ்டம்தான்.
எப்படியோ
24 மணிநேரமும்
திரைப்படங்களையே
காட்டிக்கொண்டிருக்கும்
தொலைக்காட்சிகளின்
அவசியத்தை
இப்போதாவது
நாங்கள் பாராட்டித்தான்
ஆகவேண்டும்.!!

No comments:

Post a Comment