Friday, October 8, 2021

TATA (AirINdia) & corporate social RESPONSIBILITY

 


68 ஆண்டுகளுக்குப் பின் 18000 கோடியில்

மீண்டும் ஆகாயத்தை வசப்படுத்தி இருக்கிறது
ஏர் இந்தியா மகாராஜா. இனி “ஏர் இந்தியா”
என்பது கடந்தகாலமாகிவிடும்.
இப்போதைக்கு ஒரு சின்ன ஆறுதல்
மகாராஜாவை மீண்டும் டாடா நிறுவனமே
வாங்கி இருக்கிறது என்பதும்
வேறு எந்த வெளி நாட்டு நிறுவனத்திடமும்
விற்கப்படவில்லை என்பதும் தான்!
அரசுக்கு இனி இராணுவ விமானங்கள் தவிர
வேறு விமானங்களும் இல்லை.
*அயல்தேசத்தில் போர்க்கால நடவடிக்கையாக
தன் தேசத்து மக்களை பத்திரமாக கொண்டுவருவதற்கு

இனி ஏர் இந்தியா மகாராஜா இருக்கமாட்டார்.
*இயற்கைப் பேரிடர் காலங்களில் கொரொனா போன்ற
பெருந்தொற்று காலங்களில் இந்திய மக்களின் நலனுக்காக
தொலைதூரங்கள் பறந்து கொண்டிருந்த
விமானச்சேவை இனி இருக்காது.
*ஏர் இந்தியாவில் வேலைப்பார்த்துக்கொண்டிருக்கும்
பணியாளர்களின் எதிர்காலம் ? விற்பனை ஒப்பந்தப்படி
இன்னும் ஓராண்டுக்கு அவர்கள் டாடா ஏர்லைன்ஸில்
இருக்கலாம். அதன் பின் அவர்களுக்கு விருப்ப ஓய்வு
கொடுக்கப்படும்.
(கார்ப்பரேட் அகராதியில் விருப்ப ஓய்வு என்பது
விரும்பி எடுப்பதல்ல!
GET OUT என்பதன் சுருக்கம் VRS)
*ஓராண்டுக்குப் பிறகும் ஏர் இந்தியா பணியாளர்களை
வைத்திருப்பதும் வெளியேற்றுவதும் முழுக்க முழுக்க
டாடா நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது.
அதாவது அரசு / நீதிமன்றம் /தொழிற்ச்சங்கம்
தலையிடமுடியாது.
*ஏர் இந்தியா இனி, ஏர் இந்தியா இல்லை என்பதால்
ஏர் இந்தியா இதுவரை வழங்கிவந்த சலுகைகள்
மற்றும் பணியாளர்களுக்கு வழங்கிவந்த
சில சலுகைகள், ஓய்வு பெற்றவர்களுக்கு
கொடுத்திருக்கும் சில ஒப்பந்த உரிமைகள்
அனைத்தும் இனி செல்லாக்காசாகிவிடுகிறது. !
Corporate social responsibility என்று இன்றும்
மக்களாட்சியும் மக்கள் நல அரசும் நம்புகின்ற
முதலாளித்துவ சமூகப் பொறுப்பை “டாடா”
கைவிட்டிருக்க மாட்டார் என்ற நம்பிக்கை
இருக்கிறது. டாடா மகாராஜா இன்றைய
தனியார் விமானங்களுக்கு நடுவில்
தன் தனித்துவத்தைக் காப்பாற்றுவாரா?!!
ஜன்னலைத் திறந்து ஆகாயத்தைப்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்.. வெண்புறாக்கள்
எப்போதும் போல பறந்து கொண்டிருக்கின்றன...



No comments:

Post a Comment