Friday, November 22, 2019

சாதி கெட்டப்பயலே

சாதிகெட்டப்பயலே.
இது ஏன் வசைச்சொல் ஆனது?!
.சாதிக்கெட்டவன்.. ஆஹா..
அவன் சாதியற்றவன் தானே.
.சாதி கெடுவது சாதியால் கட்டமைக்கப்
பட்டிருக்கும் சமூகத்தின் ஆகச்சிறந்த புரட்சி தானே!
அப்படியானால் “சாதி கெட்டப்பயலே “என்று
ஒருவரைத் திட்டும் போது ஏன் ஆத்திரப்படுகிறோம்?
ஏன் சினம் வருகிறது?
சாதி கெட்டவன்/ சாதியற்றவன் என்பதன்
இன்னொரு பக்கம் என்னவாக இருக்கிறது?
அவன் தந்தை பெயர் அறியாதவன் என்பதும்
தந்தையின் பெயர் அறியாமல்/ அல்லது அறிவிக்கப்
படாமல் ஒரு குழந்தையைப் பெற்ற பெண்ணின்
கற்பு ஒழுக்கம் சார்ந்த சமூக ஒழுக்கத்தின்
பார்வையில் அப்பெண் குற்றவாளி/ இழி நிலையாள்
என்றெல்லாம் விரிகிறது சாதி கெட்டவன்
என்பதன் முகம்.
அதாவது ஒழுக்கமற்றவளுக்குப் பிறந்தவன்,
அப்பன் பெயர் தெரியாதவன் மட்டுமே 
சாதி கெட்டவனாக/ சாதி அடையாளம் அற்றவனாக 
கருதப்படுகிறான்.
சாதி என்ற நூலிழை என்ன மாதிரி எல்லாம்
வாழ்வில் ஊடாடி பாய்ந்திருக்கிறது என்பது
கவனிக்கத்தக்கது.
இதன் இன்னொரு புரிதலாக
 பெண்ணின் கருப்பைக்கு பெண்ணின் யோனிக்கு 
சாதி உண்டா கிடையாதா என்ற கேள்வியும் எழுகிறது.
பெற்றவளை மட்டும் வைத்து கொண்டு சாதி
அடையாளத்தை தக்க வைத்து கொள்வதை
 இச்சமூகம் ஏற்கவில்லை. 
சாதி அடையாளம், சாதி கட்டுமானம், 
சாதி காப்பாற்றுவது இத்தியாதி
சாதி சார்ந்த அனைத்தும் 
ஆண் மைய கட்டுப்பாட்டுக்குள் இருந்தாக வேண்டும்,
அந்தக் கட்டுப்பாட்டின் இறுக்கம் தளராமல் இருக்க
பெண்ணை எப்படி வைத்திருக்க வேண்டுமோ
அப்படி வைத்திருப்பதில்
 சட்டம், சமூக ஒழுக்க விதிகள், ஏன் கலை இலக்கியம் கூட பெரும்பாங்காற்றுகின்றன.
Image result for konark temple images"

(தோழர் திருமாவளவன் கோவில் சிலைகள் பற்றி
பேசியது தவறா சரியா என்பதெல்லாம் இருக்கட்டும்.
ஏற்கனவே இது பற்றி நான் எழுதி – திருமாவுக்கு
நெருக்கமானவர்களின் கோபத்திற்கு ஆளானதும்
அது ஒருபக்கம்…)
கோவில் சிலைகளில் பெண் கூட்டுக்கலவியில்
 ஈடுபடுவதைக் காட்டும் சிற்பங்கள்
இருக்கின்றன.
இந்துமதம் / இந்து மதக்காவலர்கள்
இதை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?
பெண்ணுடலின் கட்டற்ற காமத்தின் உரிமையாக
இதை எடுத்துக் கொள்ள முடியுமா?
எப்படி ..?
எப்படி இதற்கெல்லாம் நாம் வியாக்கியானம்
செய்யப்போகிறோம்? த த்துவங்கள் கிடக்கட்டும்.
பொது ஜன உளவியல் இக்காட்சிகளை எப்படி
புரிந்து கொள்ளும்?
கட்டற்ற உடலுறவு இருந்த காலக்கட்ட த்தின்
பிரதிபலிப்பு என்பதற்கு அப்பால் இதைப் பற்றி
வேறு என்ன சொல்ல முடியும்?
இதை எல்லாம் தாண் டி தான் கோபுரக் கலசங்கள்!
கடந்து வந்த பாதையில் இன்னும் எத்தனையோ
உண்டுதானே…
சாதி கெடுவதைக் கூட வசையாக்கி அவமானமாக்கி
இருக்கும் சமூகத்தில்..
சாதி அற்று வாழ்வது பெரும்பாடாகத்தான் இருக்கிறது ..

6 comments:



  1. சாதி கெடுவதைக் கூட வசையாக்கி அவமானமாக்கி
    இருக்கும் சமூகத்தில்..
    சாதி அற்று வாழ்வது பெரும்பாடாகத்தான் இருக்கிறது ..//

    நிதர்சனமான உண்மை.


    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி

      Delete
  2. அருமையான கட்டுரை படித்து சிலிர்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நட்பே.

      Delete
  3. சிந்திக்க வைக்கிறது
    சாதிச் சிக்கலைக் போக்கினால்
    தமிழர் முன்னேறலாம்...
    சிறந்த பதிவு

    ReplyDelete