Sunday, June 30, 2019

Tottaa Petaaka Item Mall

Tottaa Pataaka Item Maal Movie - Sakshitottaa petaaka item mall..
எப்போது வேண்டுமானாலும் பாலியல் வன்புணர்வு
செய்யப்படலாம் என்ற அச்சத்திலேயே வாழும் பெண்கள்.
இரவு எட்டு மணி ஆகிவிட்டால்.. இந்த அச்சம் அவர்களைத் 
துரத்திக் கொண்டே இருக்கிறது..இதை அந்தப் பெண்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்…
4 பெண்கள். ஒருத்தி கார் வாங்கி ஓட்டுகிறாள்.
கல்லூரி மாணவிப் பருவத்தில் பெண்கள் அச்சமின்றி
பயணிக்க பெண் ஓட்டுனர்கள் தேவை என்று நினைக்கிறாள். 
பெண்கள் மட்டும் டாக்ஸி சர்வீஸ் ஆரம்பிக்கிறாள். அவள் காரில்
பெண் போலீஸ், கராத்தே கறுப்பு பெல்ட் வாங்கியவள், 
சமூக வலைத்தளம் சார்ந்த மீடியாவில் வேலைப்பார்ப்பவள்
 இவர்கள் மூவரும் பெண்கள் மட்டும் டாக்ஸியில் ஏறுகிறார்கள்.
முன் பின் அறிமுகமில்லாதப் பெண்கள்…
உரையாடல்கள் தொடர்கின்றன.
ஆணுடல் எப்போதும் பெண்ணை அச்சுறுத்துவது ஏன் 
என்ற கேள்விக்கு பதில் தேடி அலைகிறார்கள். 
அவர்களில் கராத்தே பெண்ணுக்கு நேரடி
அனுபவம், மீடியாவில் வேலை செய்பவள் தன் தங்கையை 
இதனால் இழந்தவள்.. இவர்கள் தங்கள் பயணத்தில் 
பெண்ணைச் சீண்டிப்பார்க்கும் ஒருவனைச் சந்திக்கிறார்கள். 

எது ஓர் ஆணை இதெல்லாம் செய்ய தூண்டுகிறது?
பெண்ணுடலை எப்போதும் அச்சத்திலேயே
வைத்திருப்பதால் ஆண் தன் மேலாதிக்கத்தை
எவ்வித தடையுமில்லாமல் அனுபவிக்கின்றானா?
பெண்ணுடலை ஆண்கள் பாலியல் பலாத்காரம்
செய்துவிடுவார்கள் என்ற அச்சம் தானே ஒவ்வொரு
பெண்ணையும் எப்போதும் அச்சத்தில் வைத்திருக்கிறது.
ஆணுக்கு பெண்ணுடல் அனுபவிக்கும் அந்த அச்சத்தின்
 துளி அனுபவம் கூட கிடையாதா?

பெண்கள் ஆணுடலைப் பாலியல் பலாத்காரம் செய்ய முடியாது
 என்றும் செய்யமாட்டார்கள் என்றும் ஆண்கள் காலம் காலமாக நம்பிக்கொண்டிருப்பதால் தான் பெண்ணுடல் எப்போதும் அச்சத்தில்…
இதையே அவனுக்கு உணர்த்தினால்…

விளைவு.., அவனைக் கட த்திக் கொண்டு போய்
அடைத்து வைக்கிறார்கள்.
சமையல் வேலை துப்பரவு வேலை செய்யச் சொல்கிறார்கள்.
பெண்ணைப் போல அவனுக்கு ப்ரா போட்டுவிட்டு
குட்டையான ஸ்கர்ட் போட்டுவிட்டு ஹைஹீல்ஸ் அணிந்து 
ஆடச் சொல்லுகிறார்கள். அவன் வாயில் மதுவை ஊற்றி 
அவனை ஆட வைக்கிறார்கள்..
நிர்வாணப்படுத்துகிறார்கள்.
இரும்பு கம்பியை எடுத்து வந்து அவன் பிட்ட த்திற்கு
அருகில் கொண்டு வருகிறார்கள். அவன் துடி துடிக்கிறான்
.
நீ செய்த தை நாங்களும் செய்துவிட முடியும் என்பது தான் 
அந்தப் பெண்கள் பிற ஆண்களுக்குச் சொல்லவரும் செய்தியாக .. ..

இந்தியாவின் மகள் .. நிருபயாவின் பக்கமிருந்து

திமிறி எழுந்து திருப்பி அடிக்கும் பெண்ணுடல் 
என்று தான் பார்க்க வேண்டும். 
இயக்குநர் ஆதித்ய கிருபளானி இப்படம் குறித்து
நிறைய பேசி இருக்கிறார். 
கொஞ்சம் வித்தியாசமான திரைப்படம் தான்.

1 comment: