Wednesday, June 5, 2019

நிறங்களுக்கு அரசியல் உண்டா

Image result for பெரியார் கருஞ்சட்டை


நிறங்களுக்கு அர்த்தங்கள் உண்டா.
உண்டு .
நிறங்களுக்கு அரசியல் உண்டா.
உண்டு.
நிறங்களின் அரசியல் என்பது
அடையாள அரசியல்.
அடையாள அரசியல் என்பது எளிதானதாகவும்
பரப்புரைக்கு மிகவும் வசதியானதாகவும்
இருப்பதால் அடையாள அரசியல்
அரசியலின் ஓர் அங்கமாகவே
வளர்த்தெடுக்கப்பட்ட து.
ஆனால் இன்று அடையாள அரசியல்?
அரசியலின் கருத்து ரீதியான போதாமையை
மறைக்கவும் அசல் பிரச்சனகளின் மீது
சமூகத்தின் கவனம் திரும்பாமல் இருக்க
அரசியல்வாதிகள் பயன்படுத்தும் ஒரு வகையான
கஞ்சா வாகவும் இருக்கிறது.
கருஞ்சட்டை அணிந்தால் சு.ம. காரன்,
கருஞ்சட்டை அணிந்தால் பெரியாரு ஆளு.
திராவிடர் கட்சிக்காரங்க..
இது கறுப்பு என்ற நிறத்திற்கு கொடுக்கப்பட்ட
அரசியலின் அடையாளம்.
இதே அடையாளத்தை வைத்துக் கொண்டு
இதே அடையாளத்தை தனதாக்கியதன் மூலம்
அய்யப்ப பக்தர்கள் “சாமியே சரணம் அய்யப்போ”
என்றார்கள். கருப்பு என்ற அடையாள அரசியலின்
முகம் மாறியதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
அடையாள அரசியலை எடுத்துச் செல்வது
எவ்வளவு எளிதோ அதை விட எளிது
அடையாள அரசியலை அதே அடையாளத்தைக்
கொண்டு துடைத்து இல்லாமல் ஆக்குவதும்.
பெளத்த நெறியின் அடையாளங்கள்
வெள்ளை உடை, காவி உடை, மொட்டை அடித்தல்,
பிச்சைப்பாத்திரம், சிட்சைப் பெற்றதற்கு அடையாளமாக
பூணூல் அணிவது, நெற்றியில் பூசும் திரு நீறு…
இப்படியாக எண்ணற்ற அடையாளங்கள
இந்துமதம் தனக்கானதாக்கிக் கொண்ட து.
இன்னொரு வகையில் சொல்லப்போனால் பெளத்த
நெறிகளின் அடையாள அரசியலை த் தனதாக்கியதன் மூலம் பெளத்த த்தை
இந்தியாவிலிருந்து துடைத்து எடுத்து இல்லாமல்
ஆக்கியதில் ஆகச்சிறந்த வெற்றியைப் பெற்றது,
அடையாள அரசியலுக்குள் மட்டுமே சமூகத்தை
வைத்திருப்பதன் ஆபத்து இதுதான்.
அடையாள அரசியல் ஆரம்ப காலம் ,
தொடக்க நிலை.. அதைத்தாண்டிப் பயணிக்க
வேண்டும். அப்பயணம் கருத்தியல் ரீதியான
புரிதலுக்கு இட்டுச் செல்லும். அப்புரிதல் வசப்பட்டால்
அடையாள அரசியல் தேவைப்படாது என்பது மட்டுமல்ல
அடையாள அரசியலை வைத்துக் கொண்டு
மக்களைத் திசைத் திருப்புவதோ
அசல் பிரச்சனைகளைக் கண்டு கொள்ளாமல்
இருக்க அடையாள அரசியலைப் பயன்படுத்தும்
கேவலமான அற்பத்தனமான அரசியலோ எடுபடாது.
அடையாளங்களைப் புரிந்து கொள்வோம்.
புரிந்து கொண்டு அடுத்த நிலைக்கு கடந்து
பயணிப்போம்.

No comments:

Post a Comment