Wednesday, December 12, 2018

காற்றழுத்தம் தாழ்வு மண்டலத்தில் அரசியல்


தமிழக அரசியலில் இப்போது தான் உண்மையில்
வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வெற்றிடம்
திமுக வின் எதிர்காலத்தை நீர்த்துப் போகச்
செய்யும் ஆபத்துக்குரியது என்பதை திமுக
உணர்ந்திருக்கிறதா என்பது தெரியவில்லை!
அனைத்து ஊடகங்களும் திமுக வுக்கு வெற்றி
வாய்ப்பு இருப்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
அடுத்த முதல்வர் திரு ஸ்டாலின் தான் என்றும்
உறுதியாகிவிட்ட மாதிரியே இருக்கிறது.
அதாவது தமிழக சூழலில் திமுக வுக்கு எதிர்க்கட்சி
என்று போட்டிப்போட ஓர் அரசியல் கட்சி இல்லை!
இதை எழுதும் போது வானிலைச் செய்தி காதில்
விழுகிறது. காற்றழுத்தம் குறைவாக இருக்கும்..
கனமழைப் பெய்யக் கூடும் என்று. இது தான் இயற்கை.
அரசியல் சூழலிலும் காற்றழுத்தம் குறைவான இட த்தில்
கன மழைப் பெய்யலாம். ஏன் காஜா புயல் கூட வரலாம்.!!
வரவேண்டும்.. வருமா .. ..
சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா..
1)      ஆன்மீக அரசியலும் மய்ய அரசியலும் …
சினிமா நடிகர்கள் அரசியலுக்கு  வரக்கூடாது என்று
எவரும் சொல்ல முடியாது. சினிமா பிரபலம் என்பது
மட்டுமே அரசியல் வெற்றியாக முடியுமா? எல்லோரும்
எம் ஜி ஆர் ஆகமுடியாது. எம் ஜி ஆர் காலத்திலேயே
அரசியல் கட்சி தொடங்கிய சினிமா பிரபலங்கள் உண்டு.
ஆனால் அவர்களால் எம்.ஜி ஆர் ஆகமுடியவில்லை!
எம். ஜி. ஆர், அவருடைய தொலை நோக்கு அரசியல்
திட்டங்கள், அவரை முன்னிலைப் படுத்திய இயக்கம்,
திரையிசை.. இப்படியாக பல காரணிகள் உண்டு.

2)      பா.ம.க. மருத்துவர் வகையறா.. கட்சிக்கும்
சாதி அடையாளம் உண்டு. தென் தமிழகத்தில்
பா.ம.க வுக்கு செல்வாக்கு அதிகமில்லை.
3)      தொல்.திருமாவளவன் சிறந்த அரசியல்வாதி தான்
ஆனால் தமிழ்ச்சாதி மனம் அவரை சாதித்தலைவராக
மட்டுமே வைத்திருக்கிறது.
4)       வை.கோ… உறுதிமொழி எடுத்துவிட்டார்.
ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓய்வதில்லை என்று!
அதற்காக திமுக அவரைப் பாரட்டவில்லை என்றாலும்
நாம் பாராட்டலாம்..!
5) விஜயகாந்த் - தேதிமுக வைக் காணவில்லை. காணவில்லைனு போஸ்டர் கூட போடவில்லை!

                         இப்போது தமிழக அரசியலில் எஞ்சி இருப்பவர்கள் பொதுவுடமைக் கட்சியும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் மட்டும் தான். கொள்கை ரீதியாக
கோட்பாட்டு ரீதியாக நாம் பொதுவுடமைக்கார ர்களை ஏற்றுக்கொண்டாலும்
தமிழகத்தில் அவர்களின் அரசியல் இல்லை.
பக்கத்து மா நிலமான கேரளாவில் இருக்கிறது ஏன்
தமிழகத்தில் இல்லை என்று யோசிக்கும் போது
திராவிட அரசியல் அலை அதிலும் குறிப்பாக
அறிஞர் அண்ணா என்ற மேஜிக்.. தமிழ் மண்ணில்
பொதுவுடமைக் கட்சி காலூன்ற வேண்டிய பள்ளங்களில்
தன்னை இட்டு நிரப்பி அரசியல் செய்துவிட்ட து.
இது தமிழர்களுக்கு ஏற்பட்ட அவலமா
அல்லது அக்கட்சிக்கு ஏற்பட்ட சோகமா ..
இறுதியாக சீமானின் நாம் தமிழர் கட்சி…
இளைஞர்களின் கூட்டம் …
சீமான் முன்வைக்கும் சூழலியல் அரசியல்
இவை எல்லாம் குறைந்த து இன்றைய
வெற்றிட த்தை நிரப்பும் அலையாக
மாறும் வாய்ப்பு இருக்கிறது..
அலை அடிக்குமா.. மழைப் பொழியுமா?
சீமானின் பேச்சைக் கேட்கலாம்,
ஆனால் ஓட்டுப் போட மாட்டோம் என்று
முடிவு செய்யும் தமிழர்களின் மன நிலைக்கான
காரணத்தை சீமான் கண்டறிய வேண்டிய 
காலம் வந்துவிட்டது.

இந்தக் காற்றழுத்தம் தாழ்வான இத்தருணத்தைத்
தவறவிட்டால்… தமிழ் மண்ணில் மழை இல்லை.

ம்ம்ம்.. தமிழக அரசியலில் காங்கிரசு/ பிஜேபி
இரு கட்சிகளுக்கும் காற்றழுத்தம் குறையும்
நேரத்திலும் வாய்ப்புகள் இல்லை.
ஆனால் அவர்கள் இந்திரகாந்தி காலத்திலிருந்து
இன்றைய மோதி காலம் வரை…
புறவாசல் அரசியலில் கொடி கட்டிப் பறக்கிறார்கள்.

No comments:

Post a Comment