Monday, November 6, 2017

ஊடறு பெண்நிலை சந்திப்பு

ஊடறு பெண்நிலை சந்திப்பு ... மும்பையில்...
தோழமை உறவுகளுக்கு ,
வணக்கம்.
இம்மாதம் மும்பையில் பன்னாட்டு பெண்கள் கருத்தரங்கம்
 நிகழ இருக்கிறது.
சுவிட்சர்லாந்திலிருந்து செயல்படும் "ஊடறு" பெண்கள்
 அமைப்புக்காக இக்கருத்தரங்கை மும்பையில்
 ஏற்பாடு செய்திருக்கிறோம்.
சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை,
 மலேசியா நாடுகளில் இருந்தும்
இந்தியாவில் டில்லி, சென்னை, மதுரை , மும்பை நகரிலிருந்தும் எழுத்தாளர்கள், களப்பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள்
கலந்து கொள்கிறார்கள்.
1)காரிக்கிழமை  25-11-17 காலை 10 முதல் மாலை 5 வரை
பெண்ணிய உரையாடல்கள்
பெண்களும் திருநங்கைகளும் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வு.

2) ஞாயிறுகிழமை 26-11-17 காலை 10 முதல் மாலை 6 வரை
பல்வேறு தலைப்புகளில் பெண்ணிய கருத்தாடல்கள்.
அனைவரும் கலந்து கொள்ளலாம்.
கருத்தரங்க தலைப்புகள் சார்ந்த விவாதங்களில் அனைவரும்
பங்கேற்கலாம்.

3) "ஈழப் பெண் போராளிகள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு
"பெயரிடாத நட்சத்திரங்கள்" இரண்டாம் பதிப்பு
நூல் வெளியீடும் அறிமுகக்கூட்டமும் நடைபெற இருக்கிறது.

4) கருத்தரங்க நிகழ்வை ஒட்டி பெங்களூரிலிருந்து
 புஸ்தகா அமைப்பினர் வருகை தர இருக்கிறார்கள்.
உங்களின் புத்தகங்களை  இலவசமாக மின்னூலாக்கி
உலகளாவிய வாசகர் தளத்தை உருவாக்கித் தர
 முன்வந்திருக்கிறார்கள்.
அச்சில் வெளிவந்த/ வெளிவராத உங்களின்
 தரமான படைப்புகளை யுனிக்கோட் எழுத்துருவிலோ
அல்லது புத்தகமாகவோ கொண்டுவரவும்.
இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்
 உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

இக்கருத்தரங்கையும் நிகழ்வுகளையும் நடத்த எம்முடன் கைகோர்த்திருப்பவர்கள்
1) திருவள்ளுவர் மன்றம், பாண்டூப்
2) பிரைட் உயர்நிலைப் பள்ளி, பாண்டூப்
3) தமிழ் இலெமுரியா அறக்கட்டளை, மும்பை
4) தமிழர் நலக்கூட்டமைப்பு - மும்பை
5) விழித்தெழு இயக்கம் - மும்பை
6) பகுத்தறிவாளர் கழகம் - மும்பை
7) ஸ்பேரோ - மும்பை
8) மகிழ்ச்சி பெண்கள் அமைப்பு - மும்பை
9) வணக்கம் மும்பை வார இதழ் - மும்பை
10) புஸ்தகா மின்னூல் அமைப்பு - பெங்களூர்.
முறையான நிகழ்ச்சி நிரல் ... விரைவில்.

அன்புடன்,
றஞ்சி - ஆழியாள்- புதியமாதவி.



6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நல்ல தகவல் உடனே எனது fb பக்கத்தில் பகிர்ந்து விட்டேன் நன்றி நண்பா .https://www.facebook.com/manickavelu.manickam அ மாணிக்கவேலு https://www.facebook.com/photo.php?fbid=470342510028292&set=a.135707006825179.1073741826.100011576414755&type=3

    ReplyDelete
  3. //பெண்ணிய உரையாடல்கள்
    பெண்களும் திருநங்கைகளும் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வு.//

    ???

    ReplyDelete
    Replies
    1. ஊடறு நடத்தும் பெண்கள் சந்திப்பில் எப்போதுமே முதல்நாள் நிகழ்வு முழுக்க முழுக்க பெண்நிலை உரையாடல்களும் கருத்துப்பரிமாற்றங்களும் தான். அதில் ஆண்கள் கலந்து கொள்ளும் போது சில விசயங்களை மனம் திறந்து பேசுவதில் இன்றும் பெண்களுக்கு தயக்கம் இருக்கிறது. அதனால் தான் முதல்நாள் நிகழ்வு பெண்களுக்கும் திருநங்கைகளுக்குமானதாக திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது. திருநங்கைகளை நங்கைகளாக ஏற்றுக்கொண்டு அவர்களின் பிரச்சனைகளையும் பெண்நிலையில் வைத்து அணுகும் முயற்சியாகவே இச்சந்திப்புகளை முன்னெடுத்து நடத்துகிறோம். மிக்க நன்றி. உங்கள் கேள்வியின் மூலம் இத்தகவலை எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மீண்டும் நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

      Delete