Sunday, January 1, 2017

அதிகாரமொழி

 நீ முழுவதுமாக அதிகாரத்தின் அடையாளமாகி
ஒலிக்குப்பைகளில் முழங்கிக்கொண்டிருக்கிறாய்
கவனிக்கப்படுவது என்பதையும் தாண்டி
யார் கவனிக்கிறார்கள்,
எதன் பொருட்டு கவனிக்கிறார்கள்
என்பதையும் சேர்த்து வாசித்தால்
கூவத்தின் நாற்றம்.. மித்தியின் தற்கொலை.
அடுக்குமாடியில் படிகள் இருந்தாலும்
இறங்கிவருவதும் தரையில் நடப்பதும்
மறந்துபோன கால்கள்
சக்கரநாற்காலியில் சுழலும் உலகம்
அழுகிப்போன கவுசிகன் உடலைத் தூக்கிச் சுமக்கும்
நளாயினி தேவியர் சூரிய அஸ்தமனத்தை 
நிரந்தரமாக்கிவிட்டார்கள்.
அனுசுயைக்கள் சொன்ன சொல் மந்திரமில்லை.
இருள் அடர்ந்த இருள்..
நாற்காலிகள் இன்னொரு ஒத்திகைக்காக
புறப்பட்டுவிட்டன.
பேயரசு செய்தால் பிணமெழுதும் ..
த்தூ

2 comments: