Thursday, January 15, 2015

கருப்புப் பணம் ஒழியுமா..?





கருப்பு பணம் எப்படி வருகிறது?
இதுகுறித்து 1947 முதல் மன்மோகன் சிங் அரசு 2012 மே மாதம்
கொண்டுவந்த வெள்ளை அறிக்கை வரை 40க்கும் மேற்பட்ட
குழுக்கள், ஆய்வுகள், பரிந்துரைகளுக்கு பஞ்சமில்லை.
ஆனால் கருப்பு பணத்தை ஒழிக்க முடியவில்லை.
1971ல் நம்  நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில்-
அதாவது  நம் அமைச்சர்கள் அடிக்கடி சொல்வார்களே
அந்த GDP யில் 7 விழுக்காடாக இருந்த கருப்பு பணம்
இன்றைக்கு 75 விழுக்காடாக வளர்ந்துவிட்டது..

இந்த கருப்பு பணம் எப்போது இப்படி வளர்ச்சியைக் கண்டது
என்றால், 1991ல் இந்திய அரசு உலகமயம், தாராளமயம்,
தனியார் மயம் ஆன பிறகு தான்.

க்டந்த 25 ஆண்டுகளாக துபாய், சிங்கப்பூர், வெர்ஜீன் தீவுகளில்
இந்தியர்கள் அதிக அளவில் கருப்பு பணத்தைக் குவித்து வைத்திருக்கிறார்கள்.
ஹாவாலா பணப் பரிமாற்றத்தின் தலைமை இடமாக துபாய் இருக்கிறது.
துபாயிலும் சிங்கப்பூரில் இருக்கும் அதிகமான கருப்பு பணத்தைப்
பற்றிய கவனத்தை திசைத் திருப்பவே சுவிட்சர்லாந்து வங்கியில்
இருக்கும் கருப்பு பணத்தைப் பற்றி மட்டுமே அனைத்து அரசியல்
கட்சிகளின் தலைவர்களும் பேசுகிறார்களோ என்று எழும் ஐயப்பாட்டில்
உண்மை இல்லாமல் இல்லை.


சரி, யாரிடம் இருக்கிறது, இந்தக் கருப்பு பணம்?
இந்த நாட்டின் செல்வத்தில் 75 விழுக்காடு வைத்திருக்கும்
10 விழுக்காடு மேல்தட்டு வர்க்கத்திடம் தான் இவ்வளவு
கருப்பு பணமும் இருக்கிறது.
இவர்கள் தான் ஒருவகையில் இந்த நாட்டை எந்தக் கட்சி
ஆட்சியைப் பிடித்தாலும் உண்மையில் ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.
கள்ளத்தனமாக பொருட்களைக் கடத்துவது, ஹவாலா பணப்பரிமாற்றம்,
சட்ட விரோத ஆயுத விறபனை, பாலியல் தொழில், போலி ஆவணங்கள் தயாரித்து
வங்கி, அரசு மற்றும் மக்களை ஏமாற்றுவது, சட்ட விரோத சுரங்கத்தொழில்,
காடுகளை அழித்தல், ஆள் கடத்தல், தங்கம் வைரம் கடத்தல், கள்ளச்சாராயம்
என்று பல்வேறு கருப்பு பணத்திற்கு ஊற்றுக்கண் இருந்தாலும்
இப்போது புதிதாக சேர்ந்திருக்கும் ஏஜண்டுகளில் மிக
முக்கியமானவர்கள்,
கல்வித் தந்தைகள் (தனியார் கல்வி நிறுவனங்கள்),மற்றும்
சினிமாக்காரர்கள்..
ஒவ்வொரு ஆண்டும் கல்வி வணிகத்தில் மட்டும் 50,000 கோடி
கருப்பு பணம் உருவாகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

1 comment: