Monday, January 5, 2015

ஆபரேஷன் தியேட்டரில் பணம் தின்னும் பருந்துகள்

இப்படி எழுதுவதற்கு ரொம்பவும் வருத்தமாகத்தான் இருக்கிறது.
அண்மையில் நவிமும்பை நகரில் செயல்படும் "மெடி ஏஞ்சல்ஸ்"
(Medi Angels, a second opinion centre at navi mumbai)
நிறுவனம் நடத்திய கள ஆய்வில் சில அதிர்ச்சி தரும்
உண்மைகள் வெளியாகி இருக்கின்றன.
சென்ற ஆண்டு நடந்த அறுவைச்சிகிச்சையில் மட்டும்
47% அறுவைச் சிகிச்சைகள் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை,
அதாவது தேவையில்லாமல் நடந்த அறுவைச் சிகிச்சைகள்.
heart problems 55 %
knee replacements 48%
infertility 45%
தேவையில்லாமல் இதயநோயாளிகள் 55% , மூட்டுவலிக்கு 48%
குழந்தையின்மைக்கு 45% அறுவைச்சிகிச்சைகள் நடந்திருக்கின்றன.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு செய்தி,
அரசு வழங்கும் மருத்துவ உதவித்தொகையில்
பெரும்பங்கு இம்மாதிரி தேவையற்ற அறுவைச்சிகிச்சை
நடத்தும் தனியார் மருத்துவமனைக்குப் போய் சேர்வதுதான்.
தனியார் மருத்துவமனைகளில் டாக்டர்கள் தினக்கூலிகள் போல
என்பதை சில டாக்டர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். ஒரு டாக்டரை வைத்து அந்த மருத்துவமனைக்கு எவ்வளவு வருமானம் வருகிறதோ அந்தக் கணக்கில் தான அக்குறிப்பிட்ட டாக்டரின் வருமானம் தீர்மானிக்கப்படுகிறது. எனவே தேவை இருக்கிறதோ இல்லையோ
எவ்வளவு நோயாளிகளை ஆபரேஷன் தியேட்ட்ருக்கு அனுப்பலாம், பணம் சம்பாதிக்கலாம் என்பதிலேயே இன்றைய டாக்டர்கள் கவனம்
செலுத்துகிறார்கள்.
மிகச்சிறந்த டாக்டர்கள், திறமையானவர்கள் இருக்கிறார்கள்.
இல்லை என்று சொல்லவில்லை. ஆனால்
அவர்கள் சிறுபான்மையாகி வருவது மருத்துவ துறைக்கு
மட்டுமல்ல, ஒட்டு மொத்த சமூகத்திற்கும் ஆபத்தானது.

1 comment:

  1. மருத்துவத்துறை வணிகமயமாகி வெகுகாலம் ஆகிவிட்டது .
    நாம் தான் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்

    ReplyDelete