Tuesday, November 5, 2013

மன்மோகன்சிங்கை நம்புங்கள்!







மன்மோகன் சிங் நல்ல மனிதர்.
அமைதியானவர்.
ஆடம்பரம் இல்லாதவர்.

அவருக்கு இலங்கையில் முந்திரித் தோப்புகள் நிச்சயமாக இல்லை.

அவர் ரஜபக்சேவின் விருந்தில் கலந்து கொண்டு
தங்க ஒட்டியாணமோ அல்லது வைர நெக்லஸொ பரிசாக..
இல்லை... தங்க டர்பனோ கட்டிக்கொண்டு வரப்போவதில்லை.

எதையும் வாய்திறந்து பேசவெல்லாம் மாட்டார். அவரை நம்புங்கள்.
நம் இளவரசர் ராகுல்காந்தியாவது தீவிரவாதம், படுகொலை ,என் பாட்டி
அப்பா என்று ஏதாவது உளறிக்கொட்ட வாய்ப்பிருக்கிறது.
ஆனால் நம் மன்மோகன்சிங் அப்படி எல்லாம் எதுவும் உளறக்கூட
மாட்டார்.

சரி எதிலாவது கை எழுத்துப் போட்டுவிட்டு வந்துவிட்டால் என்ன
செய்வது? ஒட்டு மொத்த இந்தியாவின் தலைவர் ஆயிற்றே என்று
பயப்படுகின்றீர்களா..?

என்ன இவ்வளவு விவரம் கூட இல்லாமல் இருக்கின்றீர்கள்?
ஒப்பந்தங்களில் கை எழுத்து போடுவதே அதை மீறுவதற்குத் தான்!
அதிலும் இதில் உலக அரங்கில் முன்னணியில் நிற்கும் இந்திய-இலங்கை
ஒப்பந்தங்கள் பற்றி அறிந்தப் பின்னருமா கவலைப்படுகின்றீர்கள்?



பிறகென்ன...?

மன்மோகன்சிங் இலங்கை சென்றால் விபரீத விளைவுகளைச் சந்திக்க
வேண்டி வரும் என்று திமுக தலைவர் கலைஞர் வேறு பயமுறுத்துகிறார்.
கலைஞர் டிவியில் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளின் தாக்கம் இது
என்பது தெரியாமல் பாவம், மன்மோகன்சிங்  ரொம்பவும் பயந்துவிடப்
போகிறார். டில்லியின் வெள்ளை வேட்டியும் கலைஞரும் சேர்ந்து
இப்படி மன்மோகன்சிங்கை வைத்து காமெடி கலாட்டா செய்வதை
நிறுத்த வேண்டும் என்று நரேந்திரமோதியே கூட நாளை கண்டன
அறிக்கை வெளியிடலாம். பிறகென்ன... மன்மோகன்சிங் என்ன காங்கிரசு
மந்திரியா..?. இந்தப் பாரதநாட்டுக்கே பிரதம மந்திரியாயிற்றே!!



காங்கிரஸூ கோபண்ணா அவர்களின் தீவிர ரசிகர்கள்/ ரசிகைகளின்
கவனத்திற்கு:

அடுத்த முறை உங்கள் கோபண்ணா  அவர்கள்  டிவியில் நேர்ப்படவோ
நேர்ப்படாமலோ பேசும் போது மன்மோகன்சிங் போவதைக் குறித்து
யாரும் அதிகம் பயப்பட வேண்டியதில்லை என்பதைக் கட்டாயம் சொல்லும்படி
செய்தி அனுப்பி விடுங்கள்.




No comments:

Post a Comment