Tuesday, April 29, 2008

குன்றக்குடி ஆதினத்தில் பாரதிதாசன்


1957ல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குன்றக்குடி வருகையின் போது
அவருக்கு பூரணக்கும்ப மரியாதை செய்யப்பட்டது. வழிபாட்டு மேடையில்
எரியும் விளக்குகளைப் பார்த்ததும் "விளக்கெல்லாம் எரிகிறதே.. விழாவா?" என்று
கேட்டார் கவிஞர்.
"அடிகளார் வழிபாடு செய்யும் இடம் " என்றார்கள்.
தன் தோளில் கிடந்தச் சால்வையைக் கையில் எடுத்துக் கொண்டு புரட்சிக்கவிஞர்
கோயில்முன் நின்றார். மடத்து ஓதுவார் ஏ.எம்.சம்பந்தமூர்த்தி அவர்கள்
'விண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதியவை.." திருவாசகப்பாடலை
ஓதினார். மகிழ்ந்த புரட்சிக்கவிஞர் "அய்யா, நல்லா பாடுறாங்க. இந்தத்
தமிழ்ப்பாட்டைத்தான் நான் விரும்புகிறேன். தமிழனை இழிவுப்படுத்தாத -
சாதியை வற்புறுத்தாத சைவத்தை யாரும் எதிர்க்க மாட்டாங்க. அது இல்லியே" என்று
வருத்தப்பட்டார்.

(நன்றி: யாதும் ஊரே, ஜூலை 2005 இதழ்)

புரட்சிக்கவிஞரின் வருத்தம் காலம் காலமாய், தலைமுறை தலைமுறையாய்
தொடர்வது தான் சாபக்கேடு.

1 comment:

  1. nice.you are a very aggressive writer and reader.

    ReplyDelete