Tuesday, April 29, 2008

பெரியாரும் விபூதியும்


1956ல் குன்றக்குடி அடிகளாரும் தந்தை பெரியாரும் ஈரோட்டில் சந்திக்கிறார்கள்.
தந்தை பெரியாரின் 78ஆவது பிறந்தநாள் விழா குன்றக்குடி அடிகளார் தலைமையில்
திருச்சி பொன்மலையில் கொண்டாடப்படுகிறது.
அதன் பின் 05-9-1958ல் பெரியார் குன்றக்குடிக்கு வருகைத் தரும்போது அவருக்கு
பூரணகும்ப மரியாதை செய்கிறார்கள். அப்போது பெரியார் நெற்றியில் ஆதினத்தைச்
சேர்ந்தவர்கள் விபூதி பூசினர். பெரியார் அதைப் பவ்வியமாக ஏற்றுக் கொண்டார்.

பெரியாரின் இச்செயல் மிகவும் சர்ச்சைக்குள்ளானது.
அப்போது அவர்களுக்குப் பெரியார் சொன்ன பதில்:

" நான் எங்கே பூசிக் கொண்டேன்? அடிகளார் பூசிவிட்டார். அவ்வளவு பெரியவர்
இதை எனக்குச் செய்யும் மரியாதையாகக் கருதுகிறார். அந்த நேரத்தில் நான்
தலையைத் திருப்பிக் கொள்வது அவரை அவமதிப்பது போல ஆகாதா?"
( நன்றி: யாதும் ஊரே -இதழ் 2005, ஜூலை)

மனிதர்களை மதிப்பது மட்டுமே கடவுளை விடவும்
மதங்களை விடவும் மதங்கள் எழுதி வைத்திருக்கும்
வேதங்களை விடவும் மேன்மையானது என்று
தன் செயல் மூலம் வாழ்ந்துக் காட்டிய மனிதர்,
மாமனிதர் தந்தை பெரியார்.

No comments:

Post a Comment