Friday, November 25, 2011

காந்தியின் அரிஜன் யார்?




இந்திய தேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் தன் பிள்ளைகளில் மூன்றில் ஒரு பங்கினருக்கு அதாவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 'ஹரிஜன்' என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார். எப்போது இந்தப் பெயர் சூட்டினார்? ஏன்? அவர் சொல்வது போல கடவுளின் குழுந்தைகள் என்ற பொருள்படும் காரணத்தினாலேயே மட்டுமே இந்தப் பெயரைச் சூட்டினார் என்றால் இந்திய தேசத்தின் தந்தையைப் பாராட்டுவது அப்படி ஒன்றும் குற்றமில்லை!

சிவஜன், விஷ்ணுஜன் என்றெல்லாம் அழைக்கவில்லை. சரி அவருக்கு மட்டுமல்ல வடக்கே வர வர கைலாச மலையில் சிவன் பார்வதியுடன் வசிப்பதாக கதை இருந்தாலும் கூட சிவனுக்கு வடக்கே மவுசு இல்லை. அதனால் தானோ என்னவோ சிவபிரானின் 64 அவதாரங்களும் நம்ம தமிழ்நாட்டைச் சுற்றியே நடந்திருக்கிறது!

காந்தியும் ஹேராமும் மரணத்தில் கூடப் பிரிக்க முடியாதவர்கள் என்று ஒரு கதை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கற்பனையும் நம்மிடம் உண்டு. (காந்தி குண்டடிப் பட்டவுடன் 'ஹேராம்' என்றெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை என்கிறார் காந்தியின் உதவியாளர். ஆனால் உண்மையை விட இந்த கற்பனை சுகமாக இருப்பதால் அப்படியே வரலாறும் எழுதப்பட்டுவிட்டது!!) அந்தளவுக்கு ஹேராமுடன் கலந்து கரைந்துபோனவர் காந்தி. அதற்காகவாவது "ஹேராம் ஜன் அல்லது ஸ்ரீராம் ஜன்" என்றாவது பெயர் சூட்டி இருக்கலாமே! அபபடி பெயர் சூட்டி இருந்தால் கூட அவர் சொல்லியிருப்பது போல உண்மையாகவே ஒடுக்கப்பட்ட மக்களை கடவுளின் குழந்தைகளாகவே நினைத்திருப்பார் என்று அவர் பற்றிய பிற விமர்சனங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நாமும் ஏற்றுக்கொள்ளலாம்!

இன்னும் சிலர் விஷ்ணுஜன், ஹேராம் ஜன், ஸ்ரீராம் ஜன் என்றாலும் ஹரிஜன் என்றாலும் ஒன்றுதான்! திருமாலின் திருநாமங்கள் விஷ்ணு, ஸ்ரீராம், ஹரி என்று ரொம்பவும் அறிவுஜீவித்தனமாக பதில் சொல்லக் கூடும்! அவர்களிடம் எல்லாம் ஒரே ஒரு கோரிக்கை தான். இனிமேல் ஹரிஜன் என்று சொல்லாமல் ஸ்ரீராம் ஜன் என்று தான் அழைக்கவேண்டும் என்று சொல்லிப் பாருங்களேன்! அவ்வளவு தான்... அவர்களுக்கு கோபம் வரும். ...

ஆனால் இதை எல்லாம் விட்டுவிட்டு 'ஹரிஜன்' என்று பெயர் வைத்தார் பாருங்கள்... அங்கே தான் உதைக்கிறது! அதுவும் அவர் அந்தப் பெயரை வைத்த காலமும் சூழலும்.

24-09-1932ல் புனா ஒப்பந்தத்திற்குப் பின் இதைச் செய்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் இரட்சகனாக தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டும் அதே நேரத்தில் ... "என்னை எதிர்த்தாயா... இரு இரு நீ யார் தெரியுமா?" என்று ஒடுக்கப்பட்டவனின் முகத்தில் அடிக்கிறமாதிரி அவனுக்கு உரைக்கிற மாதிரி சொல்ல வேண்டும் என்ற ஆதிக்க சாதி மனோபாவம்!

30-09-1932 அகில இந்திய தீண்டத்தாகதவர்கள் சங்கத்தை ஆரம்பித்தார். பின் அந்தச் சங்கத்தின் பெயரை 'தீண்டத்தகாதவர்களின் சேவகன்'என்று அழைத்தார். மீண்டும் அதே சங்கத்தை "ஹரிஜன் சேவா சங்க்" என்றழைக்கத் தொடங்கினார். 11-02-1933ல் 'ஹரிஜன்' என்ற பெயரில் வாத இதழ் ஒன்றையும் ஆரம்பித்தார்.

காந்தி ஹரிஜன் என்ற சொல்லை நரசிங் மேக்த்தா பாடல்களிலிருந்து தான் எடுத்துக்கொண்டார் என்பதும் காந்தி நரசிங் மேத்தாவின் பக்திப்பாடல்கள் மிகுந்த ஈடுபாடுக்கொண்டவர் என்பதும் திரிவேதி, சச்சின்கேட்கர் போன்ற பல்வேறு எழுத்தாளர்களின் பதிவுகள் மூலம் தெரியவருகிறது. காந்தியும் அதை மறுக்கவில்லை. அவரே அதை ஏற்றுக்கொள்கிறார்.

"குஜராத்தின் புகழ்பெற்ற கவிஞர் தன் பாடலில் பயன்படுத்திய இச்சொல் தலித்துகளுக்குப் பொருத்தமானதாக இருப்பதாக தான் கருதுவதால் பயன்படுத்தியதாகவும் ஒத்துக்கொள்கிறார். (on the strength of its having been used by the first known poet saint of gujarat, i felt it to be acceptable and started using it)

பக்தி இலக்கிய வரலாற்றில் வட இந்தியாவில் அதிலும் குறிப்பாக காந்தியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மிகவும் முக்கியமானவர் நரசிங்மேக்த்தா. சாதி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களிடமும் தன் பக்திப் பாடல்களைப் பாடித்திரிந்தவர். வறுமையில் வாழ்ந்தவர். அவர் பயணத்தில் ஒருநாள் ஜூனாகாட் (junagadh) பகுதியில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் /நாகர்கள் அவரை நிந்தித்து இகழ்ந்து பேசி திருப்பி அனுப்பிவிட்டார்கள். ஆனால் கிர்நார் மலையடிவாரத்திலிருக்கும் தாமோதர் கோவிலுக்கு அவர் சென்றபோது அங்கிருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் கிருஷ்ணாவின் மீது பாடல்கள் பாடும்படி அவரிடம் கேட்டுக்கொண்டார்கள். மிகுந்த மகிழ்ச்சி அடைந்த நரசிங்மேக்த்தா அவர்களுக்காக தன் பஜன் பக்திப் பாடல்களைப் பாடினார். அதைக் கேட்ட அம்மக்கள்,

"ஓ மேக்த்தா..
நீ அற்புதமான மனிதன்..
சாதிகளைக் கடந்தவன்
பணத்திற்கு மயங்காதவன்
உயர்வு தாழ்வு உனக்கில்லை"

என்று போற்றினார்கள்.

அப்போதுதான் அவர் தன் பாடலில் ஹரிஜன் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். சாதியத்தை முன்னிறுத்தி வாழும் தன் சாதி மக்களைக் கேலியும் கிண்டலுமாக

"ஆமாம்.. நாங்கள் அப்படித்தான்...
நாங்கள் அப்படித்தான்
நாங்கள் கெட்டவர்கள், கேடுகெட்டவர்கள்..
நாங்கள் இழிந்தவர்கள்,
உலகில் இழிவினும் இழிவானவர்கள்
ஓ நாங்கள் அப்படித்தான் .. நாங்கள் அப்படித்தான்
நீங்கள் சொல்வது போல
நாங்கள் அப்படித்தான்!

ஹரிஜனை விலக்கி வைக்கும் பிறவிகள்
பிறப்பின் பலனை எல்லாம் இழந்தவர்கள்
நாங்கள் அப்படித்தான்
நீங்கள் சொல்வதுபோல
நாங்கள் அப்படித்தான்"

(who ever distance themselves from harijans
have wasted their births!
we are like that - yes we are like what you say!)

இந்தப் பாடலில் ஹரிஜன் என்ற சொல்லை நரசிங் புதிதாக உருவாக்கினார் என்று சொல்வதற்கில்லை. ஏனெனில் அவருக்கு முன்பே சமூகத்தில் ஹரிஜன் என்ற சொல் வழக்கில் இருந்தது. அதுவும் குறிப்பாக தகப்பன் பெயர் அறியாத தேவதாசிகள் பெற்ற குழந்தைகளைச் சுட்டும் சொல்லாக இருந்தது.

எல்லம்மா கோவிலில் கடவுளுக்கு நேர்ந்துவிடும் பெண்குழந்தைகள்/தேவதாசிகள் பெற்றெடுக்கும் குழந்தைகள் ஹரிஜன் என்றழைக்கப்பட்டார்கள். எனக்குத் தெரிந்து கர்நாடகம், மராத்திய மாநிலம் பகுதிகளில் இன்றும் எல்லம்மா வழிபாடும் பெண் குழந்தைகளை நேர்ச்சியாக தேவதாசிகளாக விடும் வழக்கம் ஒடுக்கப்பட்ட சாதி சமூகத்தில் மட்டுமே இருக்கிறது.

ஹரிஜன் என்ற சொல்லை காந்தி தெரிவு செய்தவுடன் அப்போதே அதற்கு சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் 'என்னைப் பொறுத்தவரை அந்தச் சொல் மற்றவர்கள் நினைப்பதை எல்லாம் விட மிகவும் ஆழமானக் கருத்தைத் தருகிறது" என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார். (யங் இந்தியா 06 ஆக 1931)

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை மிகவும் உறுதியாக வெளிப்படுத்திய சூழலில் தற்செயலாக ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது "தீண்டாத்தகாதவர்களை கடவுளின் குழந்தைகள், ஹரிஜன் என்றழைப்பது என் இலட்சியம். அதற்காகவே மற்றவர்களும் அப்படித்தான் அழைக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை" என்று சொல்லியிருப்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது.

(incidently in responding to a question, Gandhiji said that it was his ambition to call the untouchables as Harijans but he added that there was no compulsion on others to call them so> ref: CWMG Vol.LVII pg 42/44)

காந்தி ஹரிஜன்களுக்கு சேவை செய்வதாக பேசியதும் எழுதியதும் எம்மாதிரியான தொண்டுள்ளத்தின் வெளிப்பாடு என்பதை அறிந்திருந்த போதிலும் காந்தி ஆரம்பித்த ஹரிஜன் சேவா சங்கத்தில் அம்பேத்கரும் ஓர் உறுப்பினராக சொற்ப காலம் இருந்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை.

பல்வேறு சூழல்களில் காந்தியுடன் விவாதங்களையும் போட்டிகளையும் அம்பேத்கர் தவிர்க்கவே முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அதற்கான வாய்ப்புகளை எப்போதும் இந்துமதமும் அதன் காவலர்களும் கதவைச் சாத்தி மறுத்திருக்கிறார்கள். அதாவது, காந்திக்கு அவர் தன்னளவில் ஒரு வாய்ப்பைக் கொடுத்தார் என்றுதான் சொல்லவேண்டும்.

அச்சேவா சங்கத்தின் மீது அம்பேத்கர் கொண்டிருந்த கருத்துகள் அதன் செயல்பாடுகளின் மூலம் உறுதியான சூழலில் சங்கத்திலிருந்து விலகினார். அம்பேத்கருடன் மேலும் பல ஒடுக்கப்ட்ட மக்கள் ஹரிஜன் சேவா சங்கத்திலிருந்து வெளியேறினார்கள். கொஞ்ச கால்த்திற்குப் பின் ஹரிஹன் சேவா சங்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் உறுப்பினராக அனுமதிக்கப்படவில்லை! அதற்கு காந்தி சொன்ன விளக்கம்

"சாதி இந்துக்களின்/உயர்சாதி மக்களின் மனநிலையை மாற்றுவதே ஹரிஜன் சேவா சங்கத்தின் நோக்கம்" என்றார்.

அம்பேத்கர் சொன்னது போல அச்சேவா சங்கமும் காந்தியால் ஹரிஜன்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் மேலோட்டமான சேவைகளை மட்டுமே செய்தது. அதாவது சேரிகளைத் தூய்மைப்படுத்துதல், சேரிக்குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, சேரி மக்களுக்கு தனிக் கிணறு, சாலை, தனிக்கோவில், தனி சுடுகாடு ஆகிய வசதிகளைச் செய்து கொடுத்தல், சேரிக்குழந்தைகளுக்கு பஜன் பாடல்களைக் கற்றுக்கொடுத்தல் இத்தியாதி..

அதாவது ஒடுக்கப்பட்ட மக்கள் எப்போதும் இந்தமத அடையாளத்தை, இந்து சமூகத்தை விட்டு விலக முடியாத பந்தத்தை காந்தி தன் ஹரிஜன் என்ற பெயர் சூட்டலின் மூலம் கட்டமைத்துக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.

ஹரிஜன்களுக்கான சமூக உரிமைகள் குறித்தோ சமவாய்ப்புகள் குறித்தோ அவர் நம்பிய வர்ணாசிரம இந்துமதக் கொள்கையிலிருந்து பேசுவதோ யோசிப்பதோ சாத்தியமில்லை. இதைச் சுட்டிக்காட்டிய தருணங்களில் எல்லாம் காந்தி அதற்கான நியாயங்களையொ யதார்தங்களையோ உணர்ந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை.

"அடுத்தப் பிறவி என்ற ஒன்று இருந்தால் நான் ஹரிஜனாக பிறக்க விரும்புகிறேன்" என்று காந்தி சொன்னதைத் தலையில் வைத்துக் கொண்டாடினார்கள் காந்தியவாதிகள். அது ஏன் அடுத்த பிறவி? இந்தப் பிறவியில் மகாத்மா ஹரிஜனாக முடியாது என்பது காந்திக்கே தெரியும். அவருடைய காந்திய தேசத்தின் ஹரிஜன்கள், பிறப்பின் மூலமே அந்த அடையாளத்தைப் பெறுகிறார்கள் என்பது.

ஹரிஜன் என்ற சொல்லின் பயன்பாடு இந்தியாவில் உத்திரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அதிக அளவில் இருந்தது. பகுஜன் சமாஜ்வாடி அரசியல் கட்சியின் வளர்ச்சிப்பாதையில் ஹரிஜன் என்ற சொல் வழக்கொழிந்து தலித் என்ற சொல் இடம்பெறலாயிற்று.

இந்திய சட்டமைப்பிலும் ஹரிஜன் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. Scheduled caste, scheduled tribes என்ற சொற்கள் மட்டுமே இடம் பெறுகின்றன. அதனால் தான் ராஜஸ்தானில் தலித் மனித உரிமை மையத்தைச் சார்ந்த மிம்ரோத் என்பவர் பத்திரிகைகளில் தலித்துகளை இழிவுபடுத்தும் நோக்கில் வழக்கிலிருந்த ஹரிஜன் என்ற சொல்லை ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தக் கூடாது என்று என்று ராஜஸ்தான் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவருக்கு கோரிக்கை வைத்தார்.

பலவருடங்கள் கழித்து உள்துறை அமைச்சகம் "ஹரிஜன்" என்ற சொல்லைப் அரசு துறைகளில் பயன்படுத்தக் கூடாது என்று எல்லா அரசு அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.

தமிழ்நாட்டில் ஹரிஜன் சேவா சங்கம் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டது. ராஜாஜி போன்றவர்கள் இதில் சேர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள். காந்தியின் தாக்கம் தமிழ்நாட்டில் அதிகம் என்றாலும் கூட இந்த ஹரிஜன் என்ற சொல் தாழ்த்தப்பட்ட மக்களிடம் எவ்விதமான செல்வாக்கையும் பெறவில்லை. காந்தியவாதிகள் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களை ஹரிஜன் என்று சொல்வதில் ஒருவிதமான மகிழ்ச்சியை அனுபவித்தார்கள் எனலாம்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மற்றவர்கள் கொடுத்த அடையாளங்கள் எல்லாம் அவர்களைக் கடவுளின் குழ்ந்தைகளாக்கியதே தவிர அவர்களை ஒத்த சமவாய்ப்புகளும் சம உரிமைகளும் கொண்ட சகமனிதர்களாக பார்க்கவே மறுத்தது. இந்த வரலாறுகளை எல்லாம் அறிந்து கொள்ளும்போதுதான் அயோத்திதாசர் பண்டிதர் தன் பத்திரிகைக்கு பள்ளன், பறையன், அருந்ததியன், ஒடுக்கப்பட்டவர்ன், தாழ்த்தப்பட்டவன், கீழ்சாதி, அடிமை இத்தியாதி எந்தப் பெயர்களையும் வைக்காமல் "தமிழன்" என்று பெயர் வைத்ததன் உன்னதம் புரிகிறது. சாதிய எதிர்ப்பு தங்களைச் சாதி கடந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டதுடன் தாங்கள் யார் என்ற தேடலுக்கு வழிவகுத்தது. அதனால் தான் அயோத்திதாசர் ஆங்கிலேய அரசு ஒடுக்கப்ப்ட்ட மக்களை டிப்ரஸ்டு க்ளாஸ் என்றழைப்பதை எதிர்த்து 1911ல் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 'இந்தியன் புத்திஸ்டு' என்று பதிவு செய்யும்படி எழுதுகிறார். திராவிட பவுத்தம் என்ற புதிய சொல் தொடரை உருவாக்கினார்..

திராவிட பவுத்தர், தமிழ் பவுத்தர் என்ற அடையாளங்கள், இந்திய சாதியவாதிகளுக்கு மாறான பிரதிநிதித்துவம், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள், அதன் பின் தந்தை பெரியாரின் பங்களிப்பு என்ற தமிழ்நாட்டு சூழலில் காந்தியின் ஹரிஜன் எடுபடவில்லை!

Thursday, October 27, 2011

ஈழத் தமிழச்சிகளின் வீர வாழ்க்கை –





பெயரிடாத நட்சத்திரங்கள் : பெண் போராளிகளின் கவிதைகள் இலத்தீனமெரிக்க-ஆப்ரிக்க பெண் போராளிகளின் கவிதைத் தொகுதிகள் உலக மொழிகளில் நிறைய வெளியாகி இருக்கின்றன. மிகச் சிறு வட்டங்களில், குறுகிய சுற்றில் மட்டுமே இதுவரை இருந்துவந்த ஈழவிடுதலைப் பெண் போராளிகளின் கவிதைகள் முதன் முதலாக ஒரே தொகுப்பாக வெளியாகி இருக்கிறது. 160 பக்கங்களில் பெண்ணிய இணைய சஞ்சிகையான ஊடறுவும், தமிழகத்தின் புகழ்வாய்ந்த பதிப்பகமான விடியலும் இணைந்து பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் பெயரில் இந்நூலினைப் பதிப்பித்திருக்கிறார்கள். சொல்லாத சேதிகள் துவங்கி பெயரிடாத நட்சத்திரங்கள் வரை ஈழக் கவிதைகளின் பன்முகத் தோற்றங்களும் வளர்ச்சியும் குறித்ததாக 21.1011 அன்று www.gtbc.fm வானொலியில் இடம்பெற்ற நிலாச்சோறு நிகழ்ச்சி அமைந்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்த யமுனா ராஜேந்திரன் – கருத்தாளர்களாக பங்கு கொண்ட றஞ்சி – ஆழியாள் – புதியமாதவி ஆகியோரின் குரல்களை கேட்க இங்கே அழுத்துங்கள்.

http://www.youtube.com/watch?v=NCGj891pMVU

http://www.youtube.com/watch?v=z4UPpiFnYxI

http://www.gtntv.net/?p=6825

Sunday, October 23, 2011

ஒரு வானம்பாடியின் கதை(கவிஞர் சிற்பியை முன்வைத்து)





பூமி உருண்டையைப் புரட்டிப்போடும் நெம்புகோல் கவிதையை வானம்பாடிகள் பாடிவிட்டதாக கல்லூரிவாசல்களில் கவிதைகளுடன் அலைந்துக்கொண்டிருந்தக் காலக்கட்டத்தில் மீராவுடன் சேர்ந்து அறிமுகமான கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் சிற்பி.

பிற்காலத்தில் தேடலை நோக்கிய பயணத்தில் வானம்பாடிக் கவிஞர்களின் அபரிதமான ஒலிச்சேர்க்கை நெருடலாகிப் போனது. அப்போது வானம்பாடிக் கவிஞர்களும் எங்கள் விமர்சனங்களுக்கு தப்பவில்லை. எனினும் சிற்பி என்ற கிராமத்து நதி விளை நிலங்களை நோக்கி தன் பயணத்தை மாற்றிக்கொண்டதும் எண்ணற்ற கிளைநதிகளை தன்னுடன் இணைத்துக்கொண்டு ஒரு பிரமாண்டமான ஜீவநதியாக வற்றாத நீருடன் இலக்கிய உலகில் வளம் சேர்த்துக்கொண்டிருப்பதும் தமிழ் இலக்கிய வரலாற்றில் பெருமைச் சேர்க்கும் உன்னதச் சரித்திரம்.

அண்மையில் சிற்பியின் பவளவிழா (ஜூலை 2011) மிகச்சிறப்பாக கோவையில் கொண்டாடப்பட்டிருக்கிறது. விழாவை ஒட்டி நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கவிஞர் சிற்பி பவளவிழா மலர், கவிஞர் சிற்பி பவளவிழா நிகழ்வுகள் பதிவுகள், சிற்பி அகமும் புறமும், சிற்பியின் நெஞ்சம் என்று மிக நேர்த்தியான புத்தகவடிவில். புத்தகங்களைப் புரட்டியுவுடன் கவிஞர் சிற்பி மீது ஏற்கனவே இருந்த பிரமிப்பு இரட்டிப்பானது என்றுதான் சொல்ல வேண்டும்.

கவிஞர் சிற்பின் படைப்புகள் அனைத்தையும் வாசித்திருக்கிறேன் என்றோ கவிஞர் சிற்பியுடன் எனக்கு இலக்கிய வட்டத்தில் தொடர்புகள் இருக்கிறது என்றோ சொல்லிக்கொள்ளும் படி எதுவுமில்லை. 2006ல் என் கவிதை தொகுப்பு நூல் ‘நிழல்களைத் தேடி’ சிற்பி கவிதைச் சிறப்பு பரிசு பெற்றது. அப்போது விருதை நேரில் சென்று வாங்கும்படியாக எனக்கு வேண்டிய நண்பர்கள் அறிவுரை சொன்னார்கள். நானும் என் வருகையை கவிஞர் சிற்பியுடன் தொலைபேசியில் உறுதி செய்தேன்.

விருது வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றதும் சிற்பியுடன் சேர்ந்து சிற்பியின் குடும்பத்தாரின் விருந்தோம்பலும் வாழ்நாளில் மறக்க முடியாத ஓர் இனிய அனுபவமாக அமைந்தது. அதன்பின் சிற்பியின் அந்தப் பிரமாண்டம் மேற்கொண்டு சிற்பியுடன் தொடர்பு கொள்வதற்கு ஒரு தடையாக இருந்ததோ என்று இப்போதும் நினைக்கிறேன்.! சிற்பியை அன்னாந்துப் பார்த்து அதிசயிக்கும் ஒரு குழந்தையாக மட்டுமே … இப்போதும் நான்…

மகாகவி பாரதிக்கு கிடைக்காத வாய்ப்பும் வசதியும் சிற்பிக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். வானம்பாடிக் கவிஞர்களின் கனவுகளை எட்டிப்பிடித்த நட்சத்திரம் சிற்பி. இதெல்லாம் அடையவும் அடைந்ததை தக்கவைத்துக்கொள்வதும் சமூக சூழலில் அவ்வளவு எளிதான விஷயமல்ல. அரிதினும் அரிதான அந்த வானத்தை வசப்படுத்திய ஆற்றல் இந்த வானம்பாடியின் வெற்றியின் ரகசியமா? சாதிக்க முடியாத அனைத்தையும் சாதித்துக் காட்டும் வல்லமை சிற்பிக்கு மட்டும் எப்படி சாத்தியமானது?

சிற்பியைப் பற்றிய சிலரின் பதிவுகள் இக்கேள்விகளுக்கான பதில்களாய் அமைந்திருக்கின்றன.

கோவையில் நான் மிகவும் மதிக்கும் இரு எழுத்தாளர்களின் சிற்பி குறித்து சில உண்மை சம்பவங்களை வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்கள்.

கோவை ஞானி:
——————
மார்க்சியவாதியான எழுத்தாளர் ஞானி தனக்கும் சிற்பிக்குமான கருத்து வேறுபாடுகளைப் பற்றிய பதிவில்

‘கவிஞர் சிற்பி அவர்களும் கவிதைக்கும் கவித்துவத்திற்கும் முதன்மை தரும் நோக்கில் மார்க்சியத்தை ஓரத்திற்கு ஒதுக்கியதோடு மார்க்சியப்பார்வையிலிருந்து கவித்துவத்தை மேலெடுக்க முடியாது என்பது போல கருதினார் ‘ என்கிறார். சிற்பியின் கருத்து சரிதான் என்பதை (அறிந்தோ/அறியாமலோ?) அய்யா ஞானி அவர்களின் அடுத்த வரிகள் உறுதி செய்கின்றன.

“வானம்பாடி இயக்கக் காலத்தில் கவிஞர் சிற்பி அவர்கள் எழுதிய கவிதைகளைவிட வானம்பாடி இயக்கச் செயல்பாடு நின்ற பிறகு சூரியநிழல் தொடங்கி கிராமத்து நதி முதலிய தொகுப்பில் உள்ள கவிதைகளை அவர் இயற்றிய காலத்தில் அவரது கவித்துவ ஆற்றல் சிறப்பாகவும் மேலோங்கியும் வெளிப்பட்டதை என்னால் உணர முடிந்தது. தமிழ்ச் சூழலில் மார்க்சியமும் இருத்தலியலும் எங்கோ ஓரிடத்தில் இணைந்தன் விளைவாக பிரபஞ்ச இயக்கம் தொடங்கி மனித வாழ்வியல் பற்றித் தீவிரமான கேள்விகள் நமக்குள் எழுந்தன என்பதையே இதற்குக் காரணமாகக் கூறமுடியும். இவ்வகைக் கவிதைகள் கவிதைக்குத் தேவையான அழகியல் என்பதையும் கடந்து மெய்யியல் தளத்தை உள்வாங்குவதன் விளைவாக கவிஞர்களுக்குள் கவித்துவம் உச்சம் பெறுகிறது” என்கிறார்.

இக்கருத்து மார்க்சியவாதிகளுக்கு மட்டுமானதல்ல. இயக்கம் சார்ந்த இசம் சார்ந்த தளத்தில் இயங்கும் அனைத்துப் படைப்பாளருக்குள்ளும் நிகழும் ஒரு மாற்றம் என்பதை மறுப்பதற்கில்லை. அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ப்வர்களும் அதை நோக்கிய தங்கள் அடுத்தக் கட்ட பயணத்தைத் தேடும் படைப்பாளர்களின் தேடல் உன்னதமான படைப்புகளுக்கான முகவரிகளாக மாறுகின்றன.

மனிதர்களைக் கையாளுவது என்பது ஒரு கடினமான செயல். அதற்கான பயிற்சி வகுப்புகள் நான் வேலைப்பார்த்த பன்னாட்டு வங்கியில் எங்களுக்கு அடிக்கடி நடத்தப்படும். அவர்கள் சொல்லும் ஒரு கருத்து ‘வின் வின் பாலிஸி’ WIN WIN POLICY யாருக்கும் ஏமாற்றமோ தோல்வியோ கிடையாது இந்த ஆட்டத்தில் என்பது தான் மிகவும் முக்கியம். இலக்கிய வட்டத்தில் இந்த சூத்திரத்தை காண்பது மிகவும் அரிது. ஆனால் சிற்பி இந்த சூத்திரத்தின் சூத்திரதாரியாக இருக்கிறார் என்பதை பலரின் பதிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

எனினும் மதக்குருமார்கள், முதலாளிகளுடன் வானம்பாடி சிற்பியும் என்பது நெருடலாகதான்
இருக்கிறது என்பதை மறுப்பதற்க்கு இல்லை.


எழுத்தாளர் ஞானி அவர்கள் சொல்வது போல “எத்தனையோ தளங்களில் சிற்பி தொடர்ந்து இயங்கியிருக்கிறார். எந்த ஒரு கருத்தரங்கிலும் சிற்பியின் நீண்ட அழகிய இனிய உரை அனைவரது மரியாதைக்கும் உரியதாகவே இருக்கும். இதனால் பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் ஆய்வுநிறுவனங்களும் சிற்பியை விரும்பி அழைக்கின்றன. சிற்பி தமிழ்ச்சமூகத்தின் அனைத்துவகை மனிதர்களோடும் பெரியவர்களோடும் நெருக்கமான உறவு கொண்டிருக்கிறார். சைவமதத் துறவியரும் அவரை மதிக்கின்றனர். முதலாளிகளோடும் அவருக்கு முரண்பாடு இல்லை. மார்க்கியக் கட்சியனரும் அவ்ரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். சிற்பி அவர்களோடு சில காரணங்களுக்காக நான் மாறுபட்ட போதிலும் கோவை வட்டாரத்தில் எந்த ஒரு தமிழயக்கத்தையும் மையத்தில் சிற்பி இல்லாமல் நடத்த இயலாது” என்ற பதிவு இக்கருத்தை உறுதி செய்கிறது.

நாஞ்சில் நாடன்:
——————-

இன்னொரு முக்கியமான பதிவாக நாஞ்சில் நாடன் அவர்களின் கருத்து. தமிழ் இலக்கிய வட்டத்தில் நடக்கும் குடுமிப்பிடி சண்டைகள், டாஸ்மார்க் கடையிலிருந்து நேரடியாக விழா மேடைக்கு வந்து சண்டை போடத் தயாராக இருப்பவர்கள், குழுச்சண்டைகள், வாக்குவாதங்கள், இலக்கிய விமர்சனங்கள் தனிமனித வாழ்க்கையின் அவதூறுகளாக மாறும் அவலம்…. இத்தியாதி நிறைய கேள்விபட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் சின்னதாக ஓர் அற்ப சந்தோஷம் ஏற்படும். அம்மாதிரியான சூழலிலிருந்து ஒதுங்கி ஒதுக்கப்பட்டு வாழும் வாழ்க்கை.

இச்சூழலில் வாழும் சிற்பியின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்றாக ‘சிறியன சிந்தியாதான்” என்பதை விளக்க வரும் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் எழுதுகிறார்…”சாகித்திய அகாதமியின் தமிழ்ப்பிரிவின் செயல்பாடுகளை என்னைவிடக் கடுமையாக விமர்சனம் செய்த இன்னொரு படைப்பாளி தமிழில் இல்லை. சுந்தரரமாசாமி மறைவுக்குப் பின் தமிழ்நாட்டில் நடந்த முதல் இரங்கல் கூட்டம் கோவை விஜயா பதிப்பகம் நடத்தியது. அன்று சிற்பியுடன் நானும் மேடையில் இருந்தேன். உணர்ச்சி வயப்பட்ட நிலையில் அன்று நான் கரை கடந்து பேசினேன். சிற்பி காயப்படும்படியாகவும் என்னுடைய ஆதங்கம், சுந்தரராமசாமிக்கு சாகித்திய அகதெமி விருது வழங்கப்படவில்லை என்பது.
அது போல விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் கோவையில் ஆ.மாதவனுக்கு விருதளித்தபோது நான் பேசியதும் தொடர்ந்து எனக்கு விருது அறிவிக்கப்பட்ட பின்பு நான் பேசிய மேடைகளும், அளித்த செவ்விகளும் என் இயல்புப்படிக் காட்டமானவை. சிற்பி ஒரு முறைக்கூட என்னிடம் முகம் கறுத்துப் பேசியதில்லை, எது குறித்தும்.
மேலும் எனக்கு வலிக்காமல் அடிக்கவும் தெரியாது. நண்பர் வேனிலிடம், சிற்பின் எதிர்வினை, “நாஞ்சில் அப்படித்தானயா பேசுவாரு… அப்படிப் பேசலேன்னா
அது நாஞ்சில் இல்லே..!”

சிற்பி…. உங்களைச் சுற்றி இருக்கும் பால்வீதியின் ரகசியம் இப்போது புரிகிறது
எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாக…!

சூரியநிழல்:
————–

சிற்பி உங்கள் கவிதைகளில் சூரியநிழல் என்னை விடாமல் துரத்திக்கொண்டிருந்தது.

உங்கள் சூரியநிழல் கவிதையில்..

“யாருடைய
நிழல் நான் ?
அப்பா.. தாத்தா
என் முப்பாட்டனார்/
எண்ணத் தொலையாத
என் மூதாதையரின்
முனை முறியாச் சங்கிலி?

யாருடைய நிழல் நான்?
என் கிராமத்து புழுதி?
ஏகாந்தத் தவமிருக்கும்
ஒற்றைப் பூவரசு?
தலை தெறிக்க ஓடி
நுரை கக்கும் ஆறு?
சில் வண்டு ரீங்கரிக்கும்
மகாவிருட்ச வனங்கள்?
காடுகளின் சங்கீதமான
அருவிகள்?

யாருடைய நிழல் நான்?

உங்கள் கவிதை வெளிவந்தது 90களில் நான் வாசித்தது 95களில்.
என் கவிதை நிழல்களைத் தேடி (2006) தொகுப்பில் 10 கவிதைகள்
சூரிய நிழலின் தொடர்ச்சியாகவே என்னையும் அறியாமல்
எழுதப்பட்டிருந்ததும் அந்தப் புத்தகத்திற்கே சிற்பியின் பரிசு
கிடைத்ததும் ரொம்பவும் தற்செயலாக நடந்ததை என்னவென்று
சொல்லட்டும்?!

என் கவிதையிலிருந்து சில வரிகள்:

என்னுடன் பிறந்ததா என் நிழல்?
என் தாயின் கருவறையில்
என்னைத் தாங்கியிருந்த
பனிக்குடமா என் நிழல்?
…..

நிழல்
என் சாயலில்லாத என் நிழல்
நிழல்
எனக்குச் சொந்தமில்லாத என் நிழல்

நிஜமிலலாமல் வாழ்ந்துவிட முடிகிறது
நிழலில்லாமல் வாழ்வது மட்டும்
நிழல்களுக்கும் சாத்தியமில்லை.
நிஜங்கள் களைத்துக் கண்மூடித் தூங்கும்
நிழல்கள் எப்போதும் விழித்தே இருக்கும்
நிஜங்களைக் காக்கும் காவலனாய்
நிஜங்களுடன் வாழ்க்கை நடத்தும் காதலனாய்.
….

நிஜங்களுக்குத்தான்
ஆடைகள், அணிகள், அலங்காரங்கள்
நிழல் எப்போதும் உண்மையாய்
அலங்காரமில்லாமல்
நிர்வாணமாய்க் கடைசிவரை
நிஜங்களின் இருத்தலை
நிச்சயப்படுத்திக்கொண்டு…

என்று காலமெல்லாம் நிழலை ரசிக்கவும் நிழலுடன் வாழவும்
நிழலுடன் நிழல் யுத்தம் நடத்தவும் எனக்கும் வழிகாட்டிய
உங்கள் சூரியநிழலுக்கு நன்றியுடன்…….

(நன்றி : திண்ணை)

Monday, October 10, 2011

தாழ்த்தப்பட்ட மக்களை காந்தி அரிஜன் என்று அழைத்து சரிதானே?



தோழர் மதிமாறனுக்கு என் விளக்கங்கள்


அல்லாஜன் – இயேசுஜன் என்று அழைக்காமல் ‘ஹரிஜன்’ என்று ஏன் அழைத்தார் காந்தி?





காந்தி குறித்த மேற்கண்ட பதிவை அண்மையில் வாசித்தேன்.
தோழர் மதிமாறனின் பதில் ஒரு வகையில் சரியானது தான் என்றாலும்
அந்தப் பெயரின் பின்னால் இருக்கும் வரலாற்றையும் காந்தி திட்டமிட்டே
நன்கு அறிந்தே தலித்துகளை இழிவுப்படுத்தும் ஒரு அடையாளப்பெயரைக்
கொடுத்தார். சிவஜன், விஷ்ணுஜன் என்ற வாதங்களை எல்லாம் தாண்டி
அவர் உண்மையில் என்ன செய்தார்? என்பதை வெளிக்கொண்டுவருவது
கணம் மதிப்பிற்குரிய மகாத்மா அவர்களின் அடையாளத்தை எல்லோரும்
புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

24-09-1932ல் புனா ஒப்பந்தத்திற்குப் பின் இதைச் செய்திருக்கிறார்.
இந்தக் காலகட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் இரட்சகனாக தன்னைக்
காட்டிக்கொள்ள வேண்டும் அதே நேரத்தில் ... "என்னை எதிர்த்தாயா...
இரு இரு உன்னை உன் மக்களை என்ன செய்கிறேன் பார்!" என்ற
மகாத்மாவின் ஆணவம்... இந்தப் பெயரை வேண்டுமென்றே அவர்
தேர்ந்தெடுக்க காரணமாக இருந்திருக்க வேண்டும்!
30-09-1932 அகில இந்திய தீண்டத்தாகதவர்கள் சங்கத்தை ஆரம்பித்தார்.
பின் அந்தச் சங்கத்தின் பெயரை 'தீண்டத்தகாதவர்களின் சேவகன் 'என்று
அழைத்தார். மீண்டும் அதே சங்கத்தை "ஹரிஜன் சேவா சங்க்"
என்றழைக்கத் தொடங்கினார். 11-02-1933ல் 'ஹரிஜன்' என்ற
பெயரில் வாத இதழ் ஒன்றையும் ஆரம்பித்தார்.

எங்கிருந்து இந்தப் பெயரைக் காந்தி தேர்ந்தெடுத்தார்? அவர் அடிமனதில்
தாழ்த்தப்பட்டவர்கள் கடவுளின் குழந்தைகள்/ விஷ்ணுஜன் என்ற
எண்ணம் உண்டாகியது என்றால் உண்மையிலேயே அதற்காக காந்தியைப்
பாராட்டுவதில் அப்படி ஒன்றும் பெரிய குற்றமில்லை.
அவர் ஏன் சிவஜன், அல்லாஜன், ஏசுஜன் என்றெல்லாம் அழைக்கவில்லை
என்பதைக்கூட மன்னித்துவிடலாம் தான்!
ஆனால் தன் சொந்த மாநிலமான குஜராத்தில் வாழ்ந்த இந்து மதத்துறவி
பார்ப்பன சமூகத்தைச் சார்ந்ட நர்ஸி மேத்தா தன் பாடலில் இச்சொல்லை
முதன்முதலில் கையாளுகிறார். இந்துக்கோவிலின் பிராமண பூசாரிக்கு
தேவதாசிகள் மூலமாகப் பிறந்தக் குழந்தைகளுக்கு இந்து சமூகம்
தந்தையின் அடையாளத்தைக் கொடுப்பதில்லை. அவர்களைத்தான்
நர்ஸி மேத்தா தன் பாடலில் "ஹரிஜன்" என்ற சொல்லால் அடையாளப்படுத்தினார்.
அந்தச் சொல்லைத்தான் தலித்துகளை அடையாளப்படுத்த காந்தி தேர்ந்த்தெடுத்துக்கொண்டார்.
இப்போது புரிகிறதா... அவர் தலித்துகளுக்கு மட்டும் இந்தப் பெயரைக் கொடுத்ததன்
காரணம்?!!!
இந்த வரலாறெல்லாம் காந்திக்குத் தெரியாது என்றெல்லாம் சொல்வதற்கில்லை.
அவரே சத்தியவாக்குமூலமும் கொடுத்திருக்கிறார்!
"குஜராத்தின் புகழ்பெற்ற கவிஞர் தன் பாடலில் பயன்படுத்திய இச்சொல்
தலித்துகளுக்குப் பொருத்தமானதாக இருப்பதாக தான் கருதுவதால் பயன்படுத்தியதாகவும்
ஒத்துக்கொள்கிறார். (on the strength of its having been used by the first known poet
saint of gujarat, i felt it to be acceptable and started using it)

இந்துக்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு காந்திக் கொடுத்த அடையாளம் இது.
இந்த வரலாற்றை அம்பேத்கரியக்க வாதிகள் வெளிச்சப்படுத்த வேண்டும்.
தலித்துகள் கடவுளின் குழந்தைகள் என்றால் தலித் அல்லாதவர்கள் எல்லாம்
சைத்தானின் குழந்தைகளா? என்று எதிர் கேள்வி கேட்க வேண்டும்.

Ref.:

DHANANJAY KEER, AMBEDKAR 'LIFE AND MISSION ' ps 301-302
P. MOHAN LARBEER ' AMBEDKAR ON RELIGION' p 130
Dr. MURUGU DORAI, "Ambethkar Kaappiyam",
Epic of Dr Babasaheb Ambedkar's Biography (in Tamil), Part 3. ps 497-501

Saturday, October 8, 2011

தேவபிரசன்ன ராஜ்யம்






தடுக்கி விழுந்தால் தங்கச் சுரங்கங்கள், ஓடைகள் எங்கும் வைரக்கற்கள்
என்று எங்குப் பார்த்தாலும் செல்வம் கொட்டிக்கிடக்கும் ராஜ்யம் தான்
தேவபிரசன்ன ராஜ்யம். அந்த ராஜ்யத்தில் தான் உலகிலேயே
அதிகமாக எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். கல்வி அறிவில்லாதவர்களே
கிடையாது என்பது ராஜ்யத்தின் இன்னொரு சிறப்பு.
ராஜ்யத்தின் பெண்கள் ரொம்பவும் அழகானவர்கள்.
கனத்த முலைகளுடன் இறுகக்கட்டிய கச்சை.மாராப்பு அணியாத
தாமரைக்கூட்டங்கள் அந்தப் பெண்கள். இதுவே ராஜ்யத்தின்
பெண்களுக்கான தேசிய உடை. கணினி, அது இது என்று பல்வேறு ராஜ்யங்களுடன்
ஏற்பட்ட தொடர்புகளால் இப்போதெல்லாம் பெண்கள் ராஜ்யத்தின் தேசிய
உடைகளை எப்போதும் அணிவதில்லை.

ராஜாங்க காரியங்கள், விசேஷங்கள், கோவில் விழாக்கள், திருமண வைபவங்கள்
தவிர மற்ற நாட்களில் எல்லாம் மாராப்பு போட்டு மறைத்துக் கொள்ளும்
உடைகளையே மற்ற ராஜ்யத்தின் பெண்களைப் போல அணிகிறார்கள்.
இதனால் தான் இப்போது பெண்ணியம் சார்ந்த பலப் பிரச்சனைகள் வந்துவிட்டதாக
சில சமூகவியாலார் கண்டுபிடித்து எழுதி இருக்கிறார்கள்.\
அந்தக் காலத்தில் பெண்டுகள் மாராப்பு அணிவதில்லை என்பதால் அவர்களை
நேரில் சந்திக்கும் எவரின் பார்வையும் நேரடியாக அந்த இடத்தில் தான் விழும்.
பிறகென்ன..? வேறு எங்கும், மேலும் கீழும் பார்வை பயணிக்க சந்தர்ப்பமே
இருக்காது. 'தோள்கண்டார் தோளே கண்டார் மார்பு கண்டார் மார்பே கண்டார்'
என்று அந்தப் பெண்டிரிடம் கண்டதைத் தான் பிற்காலத்தில் காவியங்களில்
எழுதி வைத்திருக்கிறார்கள். அது தெரியாமல் இப்போது மாராப்பு போட்டதால்
உடம்பில் மற்ற அங்கங்களுக்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம்
வந்துவிட்டது. அதனால் ஜிம், முகத்தை வசீகரமாகக் காட்டும் அழகுச் சாதானங்கள்:
என்று என்னவெல்லாமோ வந்துவிட்டது என்றும் இதுவும் உலகமயமாதலின்
தாக்கம் என்றும் மின்னிதழில் ஒருவர் எழுதி இருந்தார்.

முதலில் ராஜ்யத்துக்கு ஏன் தேவபிரசன்ன ராஜ்யம் என்ற பெயர் வந்தது?
என்பது ரொம்பவும் சுவராஸ்யமானக் கதை. தேவபிரசன்னம் என்பது கோவிலில்
சாமியின் முன்னால் குறிபார்த்து சொல்வது. அதாவது சோழி, வெற்றிலை, கண்ணாடி
போன்றவற்றைப் பயன்படுத்தி கோவிலின் கிழக்கு வாசலில் கோவிலின் தந்திரி
ராஜாங்கத்தின் பிரபலமான ஜோதிடர்கள் முன்னிலையில் சோழியை உருட்டி பார்ப்பார்கள்.
இது ஒருவகையில் எண் ஜோதிடம், கிளி ஜோதிடம் மாதிரிதான். இதிலிருந்து தான்
இன்றைக்கு மேனாட்டினர் பெருமையாகப் பேசும் TAROT CARD READING ஜோதிடமெல்லாம்
வந்தது என்பது உண்மைதான்.

ராஜியத்தின் எல்லா முடிவுகளையும் தீர்மானிப்பது மக்கள் தேர்ந்தெடுத்திருக்கும்
மந்திரிசபையோ அல்லது நீதிபதியோ அல்ல. அவர்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரம்
தேவபிரசன்னத்திற்கு உண்டு. மந்திரிமார்கள், கனம் நீதிபதிகள், கல்வியாளர்கள்,
பத்திரிகை மேதாவிகள் எவராலும் தீர்த்து வைக்க முடியாத பிரச்சனைகளையும்
ராஜாங்கத்தில் தேவபிரச்சன்னம் பார்த்து தீர்த்துக் கொள்வார்கள். .
எதற்கெடுத்தாலும் போராட்டம், பேரணி, கதவடைப்பு என்று கலகக்குரல் கொடுக்கும்
"காசே தூங் ' கட்சிக்காரர்கள் கூட தேவபிரச்சன்னம் என்று சொல்லிவிட்டால்
போதும் கப்சிப். அப்புறம் அவர்களின் ஆ ஓ எல்லாம் புஸ்வானமாகிவிடும்.
அந்த விசயத்தை விட்டுவிட்டு வேறு எதையாவது கையில் எடுத்துக் கொண்டு
கூட்டம் போட ஆரம்பித்துவிடுவார்கள்.

இப்படித்தான் ராஜாங்கத்தின் கடற்கரையில் சுனாமி வந்து ரொம்பவும் சேதம் அடைந்துவிட்டது.
ராஜ்யத்திற்கு ஏகப்பட்ட நஷ்டம். தேவபிரசன்னம் பார்த்ததில் பழைய ஏடு பக்கம் 888ல்
பார்க்கும் படி வந்தது. பழைய ஏடு முழுசாக யாரிடமும் இல்லை. இருப்பதும் கிழிந்து
நைந்துப்போய் தொட்டால் அப்படியே பொடிப்பொடியாகிவிடும் நிலையில் இருந்தது.
கணினி மேதாவிகள் நிறைந்த அந்த தேசத்தில் அதை அப்படியே ஒளித்தகடாக
மாற்றிவிடலாம் என்று சொல்லிப்பார்த்தார்கள். ஆனால் பழைய ஏட்டின் முதல் பக்கத்திலேயே
அதை நகல் எடுக்கவோ பிரதிகள் செய்யவோ கூடாது, மீறினால் என்று பத்துப் பக்கத்திற்கு
எழுதி வைத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது என்ன செய்வது?
அதுவும் 888 ஆம் பக்கம் என்றால் பழைய ஏட்டில் கடைசி அத்தியாயமாக இருக்கும்
என்றார் வயதான கோவில் தந்திரி.
ராஜாங்கத்தில் பெரிய குழப்பமே வந்துவிட்டது. தேவபிரசன்னம் பார்த்துவிட்டால்
அதில் வருகிறபடி கட்டாயம் செய்தாக வேண்டும். இல்லை என்றால் அதுவே
ராஜாங்கத்திற்கு சாபமாகிவிடும் என்று எல்லோரும் கவலைப்பட்டார்கள்.
இதையே சாக்காகப் பயன்படுத்தி இம்மாதிரியான காரியங்களுக்கு தேவபிரசன்னம்
பார்ப்பது சரியாகுமா? என்று 'காசே துங்' கட்சிக் காரர்கள் வரிந்து கட்டிக்கொண்டு
எழுதவும் பேசவும் ஆரம்பித்துவிட்டார்கள்.
வலைத்தளங்கள், மின்னிதழ்கள், ஃபேஸ்புக், ட்விட்டர், மை ஸ்பேஸ்,ஆர்க்குட் என்று உலகம்
பூரா இந்தச் செய்திப் பரவியது.
எப்படியொ இலண்டனில் இருக்கும் ஒரு ஆய்வு மாணவர் பழைய ஏட்டின் 888 ஆம்
பக்கத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுப்பிடித்து மை ஸ்பேஸில்
போட்டுவிட்டார். இலண்டன் லைப்பரரியில் அவர் வாசித்ததையும் பழைய ஏட்டின்
ஒரு பிரதி அங்கிருப்பதையும் அந்த ராஜாங்கத்தினரும் ஒத்துக்கொண்டார்கள்.

மை ஸ்பேஸ் என்ற கணினி சமூக தளம் பெரும் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
அதில் வேலைப்பார்த்தப் பலர் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
மை ஸ்பேஸின் எதிர்காலம் என்ன? என்று அமெரிக்காவில் எல்லா பத்திரிகைகளும்
எழுதிக்கொண்டிருந்தன. இந்த பழைய ஏட்டின் செய்தி மை ஸ்பேஸ் மூலமாகப்
பரவியதிலிருந்து ஏகப்பட்ட ஜனங்கள் மை ஸ்பேஸில் புழங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்தக் கம்பேனி இந்தியாவுக்கு அனுப்பிய சாஃப்ட்வேர் எஞ்சினியர்களை எல்லாம்
திருப்பிக்கூப்பிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

அப்படி அந்த 888ஆம் பக்கத்தில் சொல்லப்பட்டிருந்தப் பரிகாரம் என்ன?
தீயர், சாணார், முக்குலர் இனத்தைச் சார்ந்த தலைப்பிள்ளையாகப் பிறந்த
குழந்தைகள் 2 வய்து முதல் 5 வயதுக்குள் இருக்கும் பால்குடி மாறாதக்
குழந்தைகள் 15 பேரின் கழுத்தில் அமாவாசை அன்று பூஜையில் வைத்திருந்த
மாந்திரித்த செப்பேடுகளைக் கட்டி தேசத்தின் நான்கு திசைகளிலும் திசைக்கு
4 வீதம் உயிருடன் புதைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்துவிட வேண்டும்.
15வது குழந்தையை ராஜாங்கத்தின் ராஜ்ய காரியங்கள் நடக்கும் ராஜதானி
வாசலின் முன்னால் புதைக்க வேண்டும். இப்படி செய்தால் ராஜாங்கத்திற்கு
ஏற்பட்டிருக்கும் ஜலகண்டம் நிவர்த்தி அடையும். பத்து நூறு வருடங்களுக்கு
ராஜாங்கத்திற்கு எவ்விதமான தண்ணீரால் ஏற்படும் அழிவும் வராது
என்று எழுதப்பட்டிருந்தது. 1746ல் பூத்தாண்ட கர்மாவின் ஆட்சியில்
பெருமழைப் பொழிந்து ஏரிகள் எல்லாம் உடைந்து பேரழிவு வந்தப்போது
இந்தப் பரிகாரம் செய்யப்பட்டது என்று பழைய சரித்திரத்திலிருந்து
பலர் ஆதாரங்களுடன் எழுதினார்கள். இப்போது இந்தப் பரிகாரத்தைச் செய்தார்களா?
என்பது தெரியவில்லை.
ஆனால் பல்வேறு கிராமங்களில் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில்
அதிகமாகக் காணாமல் போனதாகச் செய்திகள் வந்ததைத் தயவுச்செய்து
யாரும் இத்துடன் தொடர்புப் படுத்திப் பார்க்க வேண்டாம்.
அது வேறு இது வேறு ... என்று காவல்துறை ரொம்பவும் கறாராக
சொல்லிவிட்டது. இந்த மாதிரி எல்லாம் யோசிப்பதும் எழுதுவதும்
தீவிரவாதத்தை வளர்க்கும் என்று மந்திரிசபையும் கொஞ்சம் கடுமையாக
பேசியதால் டிவிக்காரர்கள் அமைதியாகிவிட்டார்கள்.

தேவபிரசன்னம் என்று ராஜாங்க காரியங்களுக்குப் பார்ப்பது போலவே தான்
அந்த ராஜியத்தில் மற்ற காரியங்களுக்கும் பிரசன்னம் பார்ப்பார்கள்.
அஸ்தமங்கள பிரசன்ன ஜோதிடம் என்று சொல்லுவார்கள்.
பிறந்த ஜாதகமெல்லாம் தேவையில்லை. அஸ்த என்றால் எட்டு. மங்கள என்றால்
மங்களகரமானப் பொருட்கள். குங்குமம், கண்ணாடி, தங்கம். மலர்கள், நெல் அல்லது அரிசி,
பழவகைகள், வெற்றிலை, தேங்காய் என்ற எட்டு மங்களகரமான பொருட்களைக்
கொண்டு சொல்லும் ஜோதிடம்.
இதன் கிளைகளாக தாம்பூல பிரசன்னம், நிமித்திக பிரசன்னம், பூ பிரசன்னம்
இத்தியாதிகள் வந்தது. இப்படித்தான் அந்த ராஜியத்தில் பிரசன்னங்கள் பிரசித்திப்
பெற்றன. எல்லாவற்றிலும் பிரசன்னம் பார்த்து செயல்படுவது அவர்களுக்கு
நம்பிக்கை என்று சொல்வதை விட அதுவே வாழ்க்கையாக இருந்தது.

ராஜாங்கத்தில் கணினி வல்லுநர்கள் அமெரிக்காவில் எல்லாம் போய் நிறைய சாதித்தார்கள்.
நாட்டில் நல்ல பணப்புழக்கம் இருந்தது. அவர்கள் எதற்கும் பிரசன்னம் பார்த்து செய்வது தான்
இதற்கெல்லாம் காரணமாக இருக்கலாம் என்று மற்றவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக
நம்ப ஆரம்பித்தார்கள். அமெரிக்காவின் நாசாவில் கூட தேவபிரசன்ன ராஜாங்கத்தின்
விஞ்ஞானிகள் அதிகமாக இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது.
ராக்கெட்டை அனுப்புவதற்கு முன் அந்த டீமிலிருந்து நம்பிக்கையான ஒருவர்
ரொம்பவும் ரகசியமாக தங்கள் ராஜ்யத்திற்கு வந்து அஷ்ட மங்கள பிரசன்னம் பார்த்து
ராசியான காரியவெற்றி தரும் நேரத்தைக் கணித்துவிட்டு போவாராம்.

தேவபிரசன்ன ராஜாங்கத்தின் இந்தப் பெருமையை அறிந்த இந்தியர்கள்
அதிலும் நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம், ஒலிம்பிக்
விளையாட்டில் மல்மாடி செய்த கசமாலம், பூதர்ஷவழக்கில் மாட்டிக்கொண்ட
ஆளும்கட்சி, சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம்
இத்தியாதியான பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண தேவபிரசன்னம்
பார்த்தால் என்ன? என்று ஒரு பட்டிமன்றமே நடந்துக் கொண்டிருக்கிறது.
டுடா, ரம்பானி எல்லாரும் இதற்கு ஒத்துக்கொண்டாலும் அது என்னவோ
சிறையில் இருக்கும் காஜா மட்டும் இதற்கு ஒத்துக்கொள்வாரா என்று
மக்கீரன், கீபோர்ட் வகையாறாக்கள் அவரவர் ஊகங்களை எழுதிக்
கொண்டிருந்தார்கள். அப்படியே தேவபிரசன்னம் நடந்து பழமொழி
வெளியில் வந்துவிட்டால் "சிறையில் ஒரு தேவிபிரசன்னம்"
என்று தான் சிறையில் எழுதிய கவிதைகளை தலைப்பிட்டு வெளியிடலாம்.



தேவபிரசன்ன ராஜாங்க வனப்பகுதி ரொம்பவும் அடர்த்தியானது. அங்கிருக்கும்
ஆதிவாசிகள் ராஜாங்க தேவபிரசன்னம் நடக்கும் போது மட்டும் வருவார்கள்.
பூவும் பழமும் தேங்காயும் புதுநெல்லும் வெற்றிலையும் அவர்கள்தான்
எடுத்துவந்து தேவபிரசன்னத்திற்கு வைப்பார்கள். காலம் காலமாய் இதுதான்
வழக்கம். தேவபிரசன்ன வனப்பகுதியில் பாக்சைடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உலகத்திலேயே அதிகமான பாக்சைடு இந்த வனப்பகுதியில் தான் இருக்கிறது
என்று சொன்னார்கள். வல்லரசுகள் எல்லாம் போட்டிப்போட்டுக்கொண்டு
தேவபிரசன்ன ராஜாங்கத்துடன் தொழில் வளர்ச்சி ஒப்பந்தங்கள் செய்யப்
போட்டா போட்டி போட்டுக்கொண்டு ஓடி வந்தன.
எந்த தேசத்துடன் ஒப்பந்தம் செய்துக் கொள்வது என்று ராஜாங்கம் ரொம்பவும்
குழம்பிப்போனது. வழக்கம்போல தேவபிரசன்னம் பார்ப்பது என்று முடிவு செய்தார்கள்.

"நீங்கள் தூங்கும் போது விழித்திருக்கும் ஓரு வல்லரசு ராஜ்யம் ஒரு பெண்ணை
உங்களுடன் பேச அனுப்புவார்கள். அந்தப் பெண் பெயர் ர, ரா, ரி, ரீ என்ற
ஏதாவது ஓர் எழுத்தில் முடியும். அவர்களுடன் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு
ஒப்பந்தம் செய்யலாம்" என்று கணித்து சொன்னார்கள்.

தேவபிரசன்னம் இதில் அப்படியே பலித்துவிட்டது. தேவபிரசன்ன ராஜியத்தில்
இரவு என்றால் அமெரிக்காவில் பகல். அங்கிருந்து ஹிரல்ராரிரீ என்ற பெண்மணி
வந்தார். தேவபிரசன்னத்தில் சொல்லிய எல்லாம் அவருக்கு மட்டுமே
ஒத்துப்போனதால் மேள தாளங்கள் முழங்க வெண்கொற்றக்குடைப் பிடித்து
பெண்கள் எல்லாம் மராப்பு போடாத தேசிய உடை அணிந்து வரிசையாக
நின்று மலர்த்தூவி யானைகளின் அணிவரிசை முன்னே செல்ல
நிமித்திகர் அஸ்த மங்கல பிரசன்னம் ஜோதிடம் கணித்த ஒரு நல்ல நேரத்தில்
ஒப்பந்தத்தில் கை எழுத்திட்டார்கள்.

இதுதான் தேவபிரசன்ன ராஜாங்கத்தின் சரித்திரம்..
இப்போது இந்த ராஜாங்கம் வறண்ட நிலமாக இருக்கிறது. மக்களுக்கெல்லாம்
பெயர் தெரியாத வியாதிகள் வேறு. என்ன குற்றம் என்று தெரியவில்லை.
சரி பரிகாரம் கண்டுப்பிடிக்க தேவபிரசன்னம் பார்க்கலாம் என்றால்
பழங்களோ, பூக்களோ, வெற்றிலையோ, சந்தணமோ, தேங்காயோ எதுவுமே
அந்த ராஜாங்கத்தில் இப்போது கிடைப்பதில்லை. அதாவது விளைவதில்லை.
இதெல்லாம் இல்லாமல் எப்படி பிரசன்னம் பார்ப்பது?
லண்டன் லைப்ரரியில் இருக்கும் அவர்களின் பழைய ஏட்டில் இதெல்லாம்
இல்லாமல் தேவபிரசன்னம் பார்க்கும் வழி ஏதாவது சொல்லப்பட்டிருந்தால்
தயவுச் செய்து தெரியப்படுத்தவும்.

-----------------------



கதைக்கான சில பின்புலங்கள்:

*1746ல் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சியில் மேற்கண்ட 15 குழந்தைகளைப்
பலியிட்ட சம்பவம் உண்மையான வரலாறு.

*தங்கம், வைரம் இருந்தவரை வல்லரசுகள் ஆட்கொள்ளாத ராஜியத்தை
பாக்சைடு இருப்பது தெரிந்தவுடன் ஆட்கொண்டதும் அழிப்பதும்
நடக்கப்போகும் வரலாறு.
*இந்திய மண்ணில் பாக்சைடு கண்டுபிடிக்கப்பட்ட வனப்பகுதிகள் தான்
இன்றைக்கு இந்திய தீவிரவாதிகள் என்று சித்தரிக்கும் மாவோயிஸ்டுகளின் போராட்டக்களம்.

Saturday, September 17, 2011

தமிழ்த் தேசியமும் தலித்தியமும்







பரமக்குடி, மதுரை ஆகிய இடங்களில் அண்மையில் நடந்திருக்கும் சாதிக்கலவரம்
மீண்டும் சில தவிர்க்க முடியாத ஐயப்பாடுகளை என் போன்றவர்களுக்கு
ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மையில் மரண தண்டனைக்கு எதிரான எழுச்சியில் அனைத்து தமிழர்களும்
ஒன்றாகக் குரல் கொடுத்ததும் தமிழக அரசும் அதற்கேற்ப இசைவாக நடந்த
சூழலில் தான் இச்சாதிக்கலவரம் குறித்த ஒரு மூன்றாவது பார்வையும் தேவைப்படுகிறது
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் அக்னிக்குஞ்சாக வளர்த்தெடுக்கப்பட்ட தமிழர் உணர்வு
இம்மரண தண்டனைக்கு எதிரான அணிவகுப்பில் திரண்டு நின்ற போதுதான்
தயிர்க்கடையும் போது தாழி உடைந்தது போல இக்கலவரம் திட்டமிடப்பட்டே
வளர்த்தெடுக்கப்பட்டுள்ளதோ என்ற ஐயப்பாடு எழுகிறது.

சாதியம் தமிழ் மண்ணில் இல்லை, தமிழர்களிடன் இப்போதெல்லாம்
சாதி வெறி இல்லை என்று கற்பனையில் கூட எழுத முடியாத யதார்த்தம்
முகத்தில் எச்சிலைத் துப்பிக்கொண்டே தான் இருக்கிறது என்றாலும்
அதையும் தாண்டி துடைத்துக்கொண்டு அணிவகுத்தால் எங்கேயோ
யாருக்கோ அந்த அணிவகுப்பு உகந்ததாக இருப்பதில்லை.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழனின் அணிவகுப்பை
வெகு எளிதாக உடைப்பதற்கு ஒவ்வொரு தமிழனிடமும்
சாவுக்குப் பிறகும் தொடரும் சாதி கொடிய ஆயுதமாக அவனை
வெட்டி வீழ்த்திவிடுகிறது..

மூவரின் மரண தண்டனைக்காக நேற்றுவரை ஒரே அணியில் நின்றவர்கள்
இன்று எதிரெதிர் அணியில், பகைவர்களாக.. !
தமிழ்த்தேசியம் தலித்துகளுக்கு பகைவனா நண்பனா?
தமிழ்த் தேசியத்திற்கும் தலித்தியத்திற்குமான உறவு நட்பு முரணா? பகை முரணா?

ஆதிதிராவிடன் தாழ்ந்தவன் என்றால்
மீதிதிராவிடன் உயர்ந்தவனா????

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தமிழ்த்தேசியவாதிகள் மட்டுமே தங்கள்
வார்த்தைகளால் அல்ல, வாழ்க்கையால் தங்கள் அடையாளத்தை
உறுதிப்படுத்தியே ஆகவேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவே நினைக்கிறேன்.
நாணயத்தின் இன்னொரு பக்கம் போல
தமிழன் என்ற அடையாளத்தின் இன்னொரு பக்கம் சாதி தான் என்றால்
தலித்துகளுக்கு தமிழனாக இருந்தால் என்ன? இந்தியனாக இருந்தால் தான் என்ன
குடி முழுகிப்போய்விடும்?!

ஊர்த்தட்டிப் பறித்திட
உயர்சாதி என்பார் இஃதை
மார்தட்டிச் சொல்வேனடி - சகியே
மார்தட்டிச் சொல்வேனடி!

சாதி ஒழிந்திடல் ஒன்று - நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால் - மற்ற
பாதி துலங்குவதில்லை

சாதிக் களைந்திட்ட ஏரி- நல்ல
தண்டமிழ் நீரினை ஏற்கும்
சாதிப்பிணிப்பற்ற தோளே-நல்ல
தண்டமிழ் வாளினைத் தூக்கும்-
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

Saturday, September 3, 2011

இந்தியாவை உண்மையில் ஆட்சி செய்வது யார்?




உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, மக்களாட்சியின் மகத்துவத்தை இந்த மண்ணில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் பாரத பூமி. மக்கள் தீர்ப்பே இங்கே மகேசன் தீர்ப்பு. இப்படியாக இந்திய மக்களாட்சியை பற்றி ஊதித் தள்ளி, அதையே உண்மை என்ற பிம்பத்தைக் கட்டமைத்ததில் நம் ஊடகங்களின் பங்கு பெரும்பங்கு. வாழ்க நம் ஊடகங்கள்!



இதை எல்லாம் அப்படியே நம்பிக்கொண்டிருப்பதால்தான் நடுத்தர வர்க்கம் இங்கே அன்னா ஹசராவேயின் ஜன்லோக்பால் மசோதா நிறைவேறிவிட்டால், அப்படியே பாலாறும் தேனாறும் பாய்ந்தோடும் என்று நம்பிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் மக்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாராளுமன்றத்தைவிட வலிமையானது கார்ப்பரேட் ராஜ்யம். பண முதலைகளின் பன்னாட்டு கருப்புப்பணப் பேரரசு. இந்தக் கார்ப்பரேட் ராஜ்யம் பண்டித ஜவஹர்லால் நேருவின் காலத்திலேயே இலைவிட்டது என்று சொல்லலாம். உண்மையில் இதன் வளர்ச்சி இன்னொரு ராஜ்யமாகி இந்திய அரசுக்கே ஆப்பு வைக்கும் என்கிற கலக்கம் நேருவுக்கு இருந்தது என்றே சொல்லலாம். அதனால்தான் நேரு இங்கிலாந்தின் பொருளாதர நிபுணர் நிக்கலோஸ் கால்டரின் தலைமையில் ஓர் ஆய்வுக்குழுவை ஏற்படுத்தினார். பெரும்பணக்காரர்களின் ஆண்டு உயர் வருமானத்தில் 75 விழுக்காடு நேரடியாக வருமானவரியாக வசூலிக்க வேண்டும் என்ற பரிந்துரையை அரசு ஏற்றது. 1956-ஆம் ஆண்டில் செல்வவரி, நன்கொடை வரி, இறப்பு வரி, செலவு வரி, மூலதன இலாப வரி (Wealth tax, gift tax, expenditure tax, capital gains tax) என்ற துணைவரிகளை விதித்து வரி ஏய்ப்பைத் தடுக்கலாம் என்று கால்டர் குழு வலியுறுத்தியது.


ஆனால் காலப்போக்கில் இந்த வரிகளில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. உலகமயமாதல், தாராளமயமாதல், தனியார்மயமாதல் என்று இந்தியாவின் பாதை திரும்பிய காலக்கட்டத்தில் நடுவண் அரசு பல்வேறு வரிச்சலுகைகளை அள்ளி அள்ளி வழங்கி இருக்கிறது. மத்திய அரசின் தணிக்கை அறிக்கையின்படி, 2010-ஆம் ஆண்டில் மட்டும் நிறுவன வரிக்கு வழங்கபட்ட சலுகையால் அரசிற்கு ஏற்பட்ட நிதியிழப்பு ரூபாய் 35,000 கோடி. 1990 முதல் 2010 வரை மத்திய அரசு வழங்கியுள்ள வரிச்சலுகை 100 இலட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. மேற்கண்ட அபரிதமான வரிச்சலுகைகளைப் பெற்றவர்களுக்கும் அதாவது தனியார்மய ஜாம்பவான்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையே எந்த சக்திகளாலும் உடைக்க முடியாத பிரிக்க முடியாத ஓர் உறவு இருக்கிறது. அதாவது கள்ளத்தனமான உறவு வலுவாக இருக்கிறது. இந்த secretive society தான் இந்தியாவை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆண்டு கொண்டிருக்கிறது. அரசின் கோட்பாடுகளை, விதிகளைத் தீர்மானிக்கும் சக்தி வாய்ந்தவர்களாக பெருமுதலாளியக் குழுமங்கள் இருக்கின்றன. எந்தக் கட்சியும் இங்கே விதிவிலக்கல்ல! விகிதாச்சாரங்கள் மட்டுமே வேறுபடலாம்.

திரைப்படம், ஊடகம், மத நிறுவனங்கள், இங்கெல்லாம் இவர்களின் பெரும்பணம் புகுந்து விளையாடிக்கொண்டிருக்கிறது. தேன் வழியும்போது புறங்கையை நக்குவது மாதிரிதான்
இந்தக் காரியங்களில் அரசு அதிகாரிகளின் நிலை. வெளிப்படையாகத் தெரிவதெல்லாம் இந்த புறங்கைகளை மட்டும்தான். இந்தியாவின் படித்த நடுத்தர வர்க்கம் இன்றைக்கு பல ஆயிரங்களில் மாத ஊதியம் பெறுகின்ற பெரும் பேற்றை அடைந்திருப்பதும் இந்த தேனடையிலிருந்து சொட்டும் சிறுதுளி தேன்தான். இந்தியாவை இன்றைக்கு ஆண்டு கொண்டிருக்கும் இந்த secretive society யின் ஆணிவேரைப் பிடித்து அசைக்கின்ற நோக்கமும் வலிமையும் ஏற்படாதவரை போராட்டங்களும் ஊர்வலங்களும் ஊடகங்களுக்கு மட்டுமே பெருந்தீனியாக இருக்க முடியும்.

Wednesday, August 24, 2011

அடா அன்னா..! இவுங்களுமா..?






அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நம்ம ஊரு சூப்பர் ஸ்டார் முதல்
இந்த ஊரு சூப்பர் ஸ்டார் வரை குரல் கொடுத்திருக்கிறார்கள்.
யார் தான் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை?
கொஞ்சம் ஒதுங்கி இருந்தவர்கள் கூட "நாமும் ஆதரவு
தெரிவிக்கவிட்டால்... லஞ்சம் ஊழல் பட்டியலில் இடம் பெற்றுவிடுவோமே!'
என்று பயந்து தூக்க கலக்கம் தெளியாமல் அப்படியே ஓடி வந்து உட்கார்ந்து
இருக்கிறார்கள்.
அவர்களின் திரைப்பட உலகத்தில் புழங்கும் கருப்புபணம் எவ்வளவு?
அவர்கள் வாங்கும் சம்பளத்தில் வெள்ளையும் கருப்பும் எவ்வளவு?
வாங்குகிற வெள்ளைப்பணத்திற்கு ஒழுங்காக வருமான வரி
கட்டி இருப்பவர்கள் எத்தனைப் பேர்?
இதுவரை ஏதோ தெரியாத்தனமா வாங்கிட்டேன்!
அன்னா ஹசாரே மேல் சத்தியமா இனிமே கருப்பு பணம் வாங்கப்போவதே
இல்லை! என்று அவர்களில் எத்தனைப் பேர் சொல்லுவார்கள்?

டாட்டா, மிட்டல், அம்பானி சகோதரர்கள் அனைவரும்
நீரா ராடியாக்கள் புடைசூழ ராமலீலா மைதானத்திற்கு வந்து
அன்னா ஹசாரேவின் உண்ணாநிலை மேடையில் உட்கார்ந்தாலும்
ஆச்சரியப்பட என்ன இருக்கிறது!

சிறையில் இருக்கும் எனதருமை சகோதரி கனிமொழியும், சகோதரர் ராஜாவும் கூட
இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஒரு நாளாவது அடையாள
உண்ணாவிரதம் இருந்தால் நல்லது என்பது கருத்து.
யாராவது இந்தக் கருத்தை அவர்கள் காதில் போடுங்கள்!



Saturday, August 20, 2011

காக்கைகள்






விழித்திருக்கும் போதும்
தூக்கத்திலும்
என்னைத் துரத்துகின்றன
காக்கைகள்.
தனியாகவோ கூட்டமாகவோ.

விழித்திருக்கும் போது
சிறகுகளை விரித்து
என்னைச் சிறைப்பிடிக்க வருகின்றன.
தூக்கத்திலோ என் கபாளத்தைப் பிளந்து
நினைவுகளின்
ஒவ்வொரு ரகசிய அறைக்குள்ளும்
பூட்டுகளை உடைத்துக் கொண்டு
புகுந்துவிடுகின்றன.
அணுஅணுவாய்க் கொத்திக் குதறி
சிடுக்களை மேலும் சிடுக்குகளாக்கி
நரம்பு மண்டலத்தை நாசப்படுத்திவிடுகின்றன.
என் செயல்பாடுகள் என் கட்டுப்பாடுகளை
இழந்துவிடும் அச்சத்தில்
கனவுகளை விலக்கி வைக்க நினைத்து
தோற்றுப் போகிறேன்.
என் தோல்வியைத்
தன் வெற்றிக்கு அடையாளமாக்கி
விழா எடுக்கின்றன காக்கைகள்.

என் முப்பாட்டி காக்கைப்பாடினிக்கு
விருந்தினர் வருகையை
அறிவித்தக் காக்கைகள்
ம்ம் ம்ம்...
மாறியது மனிதர்கள் மட்டுமல்ல
காக்கைகளும்தான்.

Sunday, August 14, 2011

ஆகஸ்டு 15.. மூவண்ணக் கொடியா... ? கறுப்புக்கொடியா..?



நாளை விடிந்தால் இந்தியா சுதந்திர தினக்கொண்டாட்டம்.
குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் துப்பாக்கி ஏந்திய
கருப்பு பூனைகளின் காவலுடன் பத்திரமாக நம் பாரதப் பிரதமர்
சுதந்திரநாள் உரையாற்றுவார். வெளிநாட்டு உள்நாட்டு பிரபலங்கள்
கைத்தட்டுவார்கள்.
எல்லா தொலைக்காட்சிகளிலும் திரைப்பட நட்சத்திரங்கள் வந்துப் போய்க்
கொண்டிருப்பார்கள். அவர்கள் இந்திய சுதந்திர வீரர்கள் குறித்தோ
விடுதலைப் போராட்டம் குறித்தோ எதாவது பேசித்தான் ஆகவேண்டும்
என்பதெல்லாம் இல்லை. சில நல்ல படங்களும் சில ஓடாதப் படங்களும்
டிவி திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும். செய்தி வாசிப்பவர்கள் கொஞ்சம்
தூக்கலாக மேக்-அப் போட்டிருப்பார்கள்.

இந்தியாவில் ஒரிசா என்றொடு மாநிலம் இருக்கிறது. அந்த மாநிலத்தில்
ராயக்கடா மாவட்டத்தில் குச்சைய்படர் கிராமத்தில் ஆகஸ்டு 15ல் கறுப்புக்கொடி
ஏற்றுகிறார்கள். டிசம்பர் 2000ல் ஹிண்டல்கோ கம்பேனியை (Hindalco - Birla grp)
எதிர்த்து (Prakrat Sampad Suraksha Parisad - PSSP) இயற்கை வளங்களைப்
பாதுகாக்கும் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். ஒரிசாவில்
அதிகமாக இருக்கும் பாக்சைடு தான் ஹிண்டல்கோ , மிட்டல், டாடா, ஜிண்டால்,
எஸ்ஸார், பாஸ்கோ, ரியோ டிண்டோ, வேதாந்தா என்று பல முதலாளித்துவ
முதலைகளின் பசிக்கு ஒரிசாவைத் தீனியாக்க துடித்தது. இந்திய அரசும் வழக்கம்போல
பெருமுதலைகளின் பசி ஆற்றவே முன்வந்தது. 15 டிசம்பர் 2000ல் வெளியூரிலிருந்து
லாரிகளில் ஆட்களைக் கொண்டு வந்து பாக்ஸைடு சுரங்கங்களுக்கு ஆதரவாக
குரல் எழுப்பியது பணமுதலைகள். அங்கிருந்த ஆதிவாசிகள் அவர்களை விரட்டி
அடித்தனர். ஆயுதம் தாங்கிய சிறப்புக் காவல்படை வந்திறங்கியது,.
3 ஆதிவாசிகள் காவல்படையின் துப்பாக்கிச் சூட்டில் பலியானர்கள்.
அவர்களின் நினைவாக இன்றும் குச்சைய்படர் (Kuchaipadar) கிராமத்தில்
ஆகஸ்டு 15, ஜனவரி 26 ல் கறுப்புக்கொடி ஏற்றப்படுகிறது.

தமிழனுக்கு இந்த ஆகஸ்டு 15ல் கறுப்புக்கொடி ஏற்ற எண்ணிலடங்கா
காரணங்கள் , ரத்தம் காயாத மண்ணில் ...
ஈரமாக இருக்கத்தான் செய்கின்றன.


Friday, July 15, 2011

பெண்பால் ஒவ்வாமை



பசுவுக்குப் பூஜை
பெண்சிசுவுக்கு கள்ளிப்பால்
தொல்காப்பியன் அறியாத
பால்வேற்றுமை



என்று 11 வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கவிதை இப்போது நினைவுக்கு வருகிறது. 26 ஜூன் 2011 ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான பெண்பால் அழித்தல், பால் மாற்று அறுவைச்சிகிக்சை என்ற அதிர்ச்சிதரும் செய்தியும் அச்செய்தி குறித்து வந்துக் கொண்டிருக்கும் எதிர்வினைகளும் மறுவினைகளும் மருத்துவ துறை மீது நமக்கிருக்கும் ஒரு சில நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்துகிறது. இந்தச் செய்தி தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள் தரும் செய்திகள் ஒரு மாஃபிய கும்பலின் அதிகார வளையத்திற்குள் மருத்துவமும் சிக்கிக்கொண்டு விட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

சொத்துடமை சமுதாயம் ஒவ்வொரு ஆணுக்கும் தன் உதிரத்தில் உதித்த வாரிசுகளுக்கு மட்டுமே சொத்துடமையாக வேண்டும் என்ற எண்ணத்தில் திருமண உறவு, பெண்ணுக்கு கற்பொழுக்கம் என்று சில சமூகக்கட்டுப்பாடுகளை ஏற்படுத்திய போதும் கூட பெண்பால் ஒவ்வாமை வளர்த்தெடுக்கப்படவில்லை. போரில் ஆண்களை இழப்பதும் சிசு மரணங்களும் மிகவும் அதிகமாக இருந்தக் காலத்தில் ஒரு பெண் ஆண்குழந்தையைப் பெற்றெடுப்பது அவளுக்கான கட்டாயமாக மட்டுமல்ல சமூகத்தின் தேவையாகவும் இருந்திருக்க முடியும். அதிலும் குறிப்பாக அதிகார வர்க்கத்தில், அரச குடும்பங்களில் ஆண்வாரிசைப் பெற்றெடுக்கும் கட்டாயம் அரசிக்கு இருந்திருக்கும். இதுவே கூட அரசனின் மனைவியரின் அந்தஸ்த்தை நிர்ணயித்திருக்கும்.

பால் அழித்தல் என்பதும் பால் மாற்று அறுவைச்சிகிச்சையும் இக்கருத்துகளின் பின்புலத்தில் நடந்தேறி இருக்கின்றன. குறிப்பாக சீனத்தில் இப்பழக்கம் குறித்த வரலாற்று பதிவு கி.மு. 8ஆம் நூற்றாண்டுவரைப் பின்னோக்கிப் போகிறது. அதற்கும் முன்னரே இப்பழக்கம் வழக்கில் இருந்திருக்க வேண்டும் என்றே அப்பதிவு காட்டுகிறது. இவர்கள் நபுஞ்சகர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். ஆண்பால் அழித்தல்/ அறுவைச்சிகிக்கை மூலம் ஆண்பால் உறுப்புகளை அகற்றப்பட்டவர்கள் தான் நபுஞ்சகர்கள்.

தாய்மையடையக்கூடிய பெண்கள் இருக்கும் அரசனின் அரண்மனையில் வேறு எந்த ஆணுடைய விந்தும் விழுந்து எந்தப் பெண்ணின் கருமுட்டையிலும் கலந்து துளிர்த்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே நபுஞ்சகர்கள் உருவாக்கப்பட்டார்கள். அதையும் மீறி சிநேகங்கள் உருவான கதைகள் பல உண்டு. ஆனாலும் கரு உருவாக முடியாது என்பதால் அரசனின் வாரிசு தூய்மை பேணப்பட்டது எனலாம்.

மிங்க் முடியாட்சியில் மட்டும் 70,000 ஆண் குழந்தைகளுக்கு பால் அழிப்பை அறுவைச்சிகிச்சை மூலம் செய்திருக்கிறார்கள்! இந்த அறுவை நிபுணர்கள் அறுவைச்சிகிச்சையை பரம்பரை பரம்பரையாக குடும்பத்தொழிலாகவே செய்துவந்திருக்கிறார்கள். நரம்புகளை மரக்க வைக்கும் மூலிகைக் கஷாயங்கள் கொடுத்து உறுப்புகளை மிளகுக்கலந்த சுடுநீரால் கழுவுவார்களாம். ஆணுறுப்பை முழுக்க அறுத்தெறிவது ஒரு வகை, பீஜக்கொட்டை மட்டும் அகற்றப்படுவது இன்னொரு வகை என்று இரண்டு வகையான அறுவைச்சிகிச்சை முறைகள் நடைமுறையில் இருந்திருக்கின்றன. இந்த அறுவையின் போது நிறையபேர் இறந்தும் போயிருக்கிறார்கள். இதெல்லாமே ஆண் தன் சொத்துடமைக்கு வாரிசாக தன் உதிர வழி வாரிசு மட்டுமே இருந்தாக வேண்டும் என்ற எண்ணத்தின் உச்சக்கட்டம்! அரண்மனையில் மற்ற வேலைகள் செய்ய ஆண்களும் வேண்டும் அதே நேரத்தில் எங்காவது அந்த இருட்டில் ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சத்தின் விளைவு தான் ஆண்பால் அழித்த நபுஞ்சர்களின் வரலாறு. 19 ஆம் நூற்றாண்டில் சீனத்தில் போய் வசித்த ஆங்கிலேயர் மூலம் தான் வெளியுலகுக்கு சீனாவின் இந்த வழக்கம் தெரியவந்தது.

ஆண்பால் அழிப்பு அன்று நடந்ததற்கு எப்படி சொத்துடமை வாரிசுடமை காரணமாக இருந்ததோ அதன் இன்னொரு பக்கம் தான் பெண் சிசுக்கொலை, பெண்கருவை அழித்தல், அண்மையில் கழிவோடையில் கண்டெடுக்கப்பட்ட பெண்கரு அழிப்புக்குவியல்கள், இப்போது ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் பெண் குழந்தைகளை அறுவை மூலம் ஆண்குழந்தைகளாக மாற்றும் அசிங்கம், அருவெறுப்பு…

மத்திய பிரதேசத்தில் இந்தூரில் இதற்கெனவே புகழ்ப்பெற்ற 7 அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்கள் . ஓராண்டுக்கு இதுவரை 200 முதல் 300 வரை இம்மாதிரி அறுவைச்சிகிச்சைகள் நடந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக மும்பை, டில்லி போன்ற பெருநகரங்களிலிருந்து இதற்காக செல்லும் பெற்றோர்களின் எண்ணிக்கை 8 விழுக்காடு. இதற்காகும் செலவு 1.5 இலட்சம். ஒரு பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்கி திருமணத்திற்கு சீர்வரிசையாகக் கொட்டிக்கொடுக்கும் செலவுடன் ஒப்பிட்டால் இந்த அறுவைச்சிகிச்சைக்கு ஆகும் செலவு மிகவும் குறைவு என்றும் அந்தச் செய்தி பதிவு செய்துள்ளது.

இச்செய்தி வெளிவந்தவுடன் குழந்தைகள் நலன் காக்கும் பிரதமரின் அலுவலகம், இந்திய மருத்துவக் கழகம், மத்திய பிரதேசம் அனைத்தும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றன. பெண் குழந்தைகளை அறுவை மூலம் ஆணாக மாற்றும் போது அப்படி மாற்றப்பட்ட ஆண், ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியாது என்றும் சொல்லப்படுகிறது. இக்கருத்து இன்னொரு சந்தேகத்தையும் நமக்கு ஏற்படுத்துகிறது. பெற்றோர்கள் ஆண்வாரிசை விரும்புவதன் அடிப்படை நோக்கம் தன் வம்சாவளி விருத்தியும் அது தொடர வேண்டும் என்ற ஆசையிலும்தான்.

செயற்கை குழாய்வழி குழந்தை ஜனிக்கும் இன்றைய காலக்கட்டத்திலும் பெண் வழி வாரிசுகளை தங்கள் வாரிசுகளாக ஏற்றுக்கொள்ள அறிவார்ந்த சமூகமும் முன்வரவில்லை . எனவே பெண் குழந்தையை ஆண் குழந்தையாக்கி தங்கள் வாரிசுரிமையை நிலைநாட்டத்துடிக்கும் பெற்றோர்கள் அப்படி மாற்றப்பட்ட ஆண் வாரிசால் தன் வம்சம் தளைக்கும் வாய்ப்பில்லை என்றால் அவர்கள் இந்தப் பால் மாற்று அறுவைச்சிகிச்சையை செய்வார்களா? அவர்களின் நோக்கம் நிறைவேறாத போது இந்த அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இந்தச் செய்திக்கு எதிர்வினையாக வைக்கப்பட்டிருக்கும் இக்கேள்வி மிகவும் கனமானது. மிகவும் யோசிக்க வைப்பதும் கூட.

மற்றபடி, பிறப்பிலேயே சில பெண் குழந்தைகளின் உடல் உறுப்பில் ஆண் குழந்தைகளின் அடையாளம் காணப்படுவதுண்டு.
(a child with abnormal or ambiguous genitals. A girl may be born with a noticeably large clitoris giving impression of a penis or lacking a vaginal opening. A boy may be born with a notably small penis or with a scrotum that is divided so that it looks like labia, a part of female sexual organ)
எனவே வளர்ந்தப் பின் அக்குழந்தைக்கு ஏற்படும் பால் வேற்றுமை குழப்பம் தீர்க்கவே பால் மாற்று அறுவைச்சிகிச்சைகள் (genitoplasty)நடக்கின்றன என்கிறார்கள்

பால்மாற்று அறுவைச்சிகிச்சையில் புகழ்பெற்ற இந்திய மருத்துவர் டாக்டர். எஸ்.வி. கோட்வால் “ஒரு குழந்தைக்கு இம்மாதிரியான பால்மாற்று அறுவைச்சிகிச்சை செய்வது சாத்தியமே இல்லை” என்று உறுதியாகச் சொல்கிறார்.

இக்கருத்துகளை எல்லாம் முன்வைத்து பார்க்கும் போது எனக்குச் சில ஐயப்பாடுகள் எழுகின்றன. குழந்தைகளுக்குச் செய்ய முடியுமா ? செய்ய முடியாதா? என்ற கேள்விகளை மருத்துவர்கள் பேசித்தீர்த்துக் கொள்ளட்டும்.

*இம்மாதிரி அறுவைச்சிகிச்சைக்கு தங்கள் பெண் குழந்தைகளை எடுத்துச் செல்லும் பெற்றோர்களின் குழந்தைகள் வரலாறு. ஒருவேளை அவர்களுக்கு வாரிசை வளர்த்தெடுக்க ஏற்கனவே ஆண்குழந்தை இருந்தால், நமக்கெதற்கு இந்தப் பெண் குழந்தையை வளர்க்க வேண்டிய சிக்கல்? என்று எண்ணி ஒன்றரை இலட்சத்தில் தங்கள் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முன்வருகின்றார்களா? என்பதைக் கவனிக்க வேண்டும்.

* இந்த அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளுக்கெல்லாம் உடல் ரீதியான பால் உறுப்பு சம்பந்தமான குறைபாடுகள் இருந்தது என்பதற்கான சான்றுகள் இந்தூர் மருத்துவமனைகளில் இருக்கின்றனவா?

* ஓராண்டில் சற்றொப்ப 200 முதல் 300 அறுவைச் சிகிச்சை நடக்கிறது இந்தூரில் என்றும் புதுடில்லியில் இருக்கும் சர்.கங்காராம் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு 2 முதல் 5 வரை இம்மாதிரியான குறைபாடுகளுக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்படுகிறது என்றும் செய்திகள் சொல்கின்றன. இந்தப் புள்ளிவிவரங்களின் வரலாறு என்ன? இக்குறைபாடு அண்மையில் அதிகரித்திருக்கிறதா? எந்தப் பகுதியில் வாழ்ந்த/பிறந்தக் குழந்தைகளுக்கு இக்குறைபாடு பொதுவாக அதிகமாக இருப்பதாக தெரிகிறது? இக்குறைபாட்டின் காரணம் என்ன? மூலம் என்ன? பரம்பரை வியாதியா?

சமூகத்தின் மீது அக்கறைக்கொண்ட ஒவ்வொருவருக்கும் இம்மாதிரியான ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. கத்தரிகாயிலிருந்து பூச்சி மருந்து வரை உலகக் கண்டு பிடிப்புகளின் சோதனைக்கூடாமாகி விட்டது இந்தியச்சந்தை. இப்போதெல்லாம் நம் மனித வளம் வெள்ளை எலிகளுக்கு மாற்றாக மாற்றப்பட்டிருக்கிறதோ என்று அச்சமாக இருக்கிறது .

ஆண் பெண் எண்ணிக்கை விகிதம் மும்பையில் 1000 : 874 டில்லியில் 1000 : 866. சமீபத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தற்போது இந்தியாவில் பெண்குழந்தைகளை விட ஆண்குழந்தைகளின் எண்ணிக்கை 7 மில்லியன் அதிகம்! என்ற புள்ளிவிவரமும் இந்த நேரத்தில் என் நினைவுக்கு வந்து என்னை அலைக்கழிக்கிறது.

எங்கேயோ ஏதோ ஒரு மூலையில் என்னவொ நடக்கிறது ….
நடந்ததும் நல்லதாக இல்லை
நடப்பதும் நல்லதாக இல்லை
நாளை.. ?

——–

துணை நின்ற பதிவுகள்:

Hindustan Times , 26/6/11

Asian Tribune , 27/6/11 by R Vasudevan

பால் அழித்தல் – சிங்கை ஜெயந்தி சங்கரின் கட்டுரை,
இருவாட்சி பொங்கல் மலர் 2, 2010

(NanRi : thinnai.com)

Saturday, July 9, 2011

தமிழக அரசு தீர்மானமும் சாத்தியக்கூறுகளும்.



தமிழ்நாட்டு சட்டசபையை துவக்கிவைத்து ஆளுநர்ஆற்றும் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
உரைகளை இடைநிறுத்திவிட்டு ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை தமிழ்நாட்டு முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். வாழ்க!
என்று ஒவ்வொருவரும் வாழ்த்தி பூங்கொத்து கொடுத்து ஓய்வாக
இருக்கும் போது கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அவரை வாழ்த்துவதில் எனக்கொன்றும் கருத்து வேறுபாடுகள் இல்லை. ஆனால்
"போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்று சொன்னதும் இவர்தான்
என்பதை மறக்க முடியவில்லை.

இலங்கை மீது பொருளாதர தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபை
தீர்மானத்தில் சொல்லப்படுகிறது. தடைவிதிக்க நடுவண் அரசு சம்மதிக்குமா?
ஏனேனில் போர் முடிந்தவுடன் சுவிட்சர்லாந்தில் 24 நாடுகள் கூடி போர்க்குற்ற
தீர்மானம் இலங்கை மீது கொண்டுவந்தப் போது அத்தீர்மானம் தோல்வியுற
காரணமாக இருந்ததே நம் இந்திய அரசுதானே!

ஜோதிபாசு மேற்கு வங்க சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானமும்
மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் போலீஸ் படையைக் கொண்டு
போரிடப்போவதாக முழங்கியதும் அடிக்கடி இப்போது நினைவுப்படுத்தப்படுகிறது.
பூகோள ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இந்தியா அரசால் தெற்கெல்லையில்
இருக்கும் இலங்கை மீது அதே நடவடிக்கைகளை எடுக்கும் சூழல்
இருக்கிறதா?

இதை எல்லாம் கடந்து தமிழக முதல்வர் போர்க்கோலம் பூண்டால்
இந்திய அரசு வழக்கம் போல அவர் மீது இருக்கும் சொத்துக்குவிப்பு
வழக்குகளைக் கொண்டு தன் வளையத்துக்குள் இறுக்கிப்பிடிக்காது
என்பது என்ன நிச்சயம்?

இந்தத் தீர்மானமே நடுவண் அரசை மிரட்டுவதற்கும்
அரசியல் சுயலாபங்களுக்கும் கையில் எடுத்திருக்கும்
சாட்டையாக மட்டுமே இருக்குமானால் ....

கடந்தக் கால தமிழர் குறித்த வரலாற்று நிகழ்வுகள் இப்படியான
கசப்பான உணர்வுகளையும் அச்சத்தையும் தருகின்றன.

வடக்கு மாநிலங்களில் தன் இராணுவத்தை வைத்தே மனித
உரிமைகளைச் சிதைத்தாலும் இந்திய அரசு , சர்வதேச அளவில்
மனித உரிமைகளை மதிக்கும் இந்திய தேசம் என்ற பிம்பம்
சுக்கு நூறாக உடைவதை நம் தேசத்தலைவர் வகையறாக்கள்
அப்படி ஒன்றும் விட்டுக்கொடுத்துவிட மாட்டார்கள்.
ஏதாவது செய்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்போது
வசமாக இலங்கை அரசை மட்டும் மாட்டிவிட்டு தப்பித்துக்
கொள்வார்கள். அதில் நம்மவர்கள் கில்லாடிகள்.
அந்தக் கில்லாடித்தனம் மட்டுமே இப்போதைக்கான
நமக்கிருக்கும் ஒரே நம்பிக்கை.

Friday, July 8, 2011

UNO report on srilanka war : SOME IMPORTANT POINTS


REPORT OF THE SECRETARY-GENERAL'S PANEL OF EXPERTS ON
ACCOUNTABILITY IN SRI LANKA - 31 MARCH 2011


56) srilanka in its diplimatic efforts, the govt drew on the favourable global environment for
support from the number of states, in the context of the "war on terror" and in the region.'
gained increased collaborations from the indian govt due to the LTTE's assassination
of rajiv gandhi. in one significant example, the indian navy directly assisted sri lankan
forces in intercepting the floating warehouses used by the LTTE to maintain its
supplies by sea.

தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று உலகமெங்கும் ஓங்கி ஒலித்த சூழலை
இலங்கை அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. புலிகள் ராஜீவ் காந்தியைக்
கொலை செய்ததைக் காரணம் காட்டி இந்திய அரசுடன் உறவைப் பலப்படுத்திக் கொண்டது.
இதன் முக்கியமான ஓரு விளைவுதான் புலிகள் கடல்வழி தங்களுக்குத் தேவையான
பொருட்களைக் கொண்டு செல்வதை இந்திய கப்பற்படையின் நேரடி கண்காணிப்பில்
தடுக்கப்பட்டது.

63)
white van operation:

உண்மை நிலையை எழுதத்துணிந்த பத்திரிகையாளர்கள், ஊடகங்களை
புலிகள் என்று சொல்லி வெள்ளை வேனில் அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திக்
கொலை செய்த சம்பவங்கள். 2006 முதல் போரின் கடைசிகட்டம் வரை
66 பேர் இப்படி காணாமல் போய் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
a potent symbol of this operations was the WHITE VAN. white vans were used
to abduct and often disappear critics of the govt or those suspected of links with
the LTTE and more generally to instil fear in the population. An elite unit within the special task
force of the plice is implicated in running these white van opearations. those abducted were
removed to secret locations, interrogated and tortured in a variety of ways including through
beatings , forced nudity, suffocation with plastic bags, partial drowning, extraction of fingers or toe nails,
pr administering electric shocks. many were killed and their bodies disposed of secretly.
human right workers, journalistsm newspaper editors, humanitarina workers accused of being
"tiger sympathizers" were also caught in the net.

e-g. two prominnent journalists, associated newspapers of ceylon ltd.
Poddala Jayantha, picked up in white van severely beaten in june 2009 . 8 jan 2009, prominenet
newspaper editor, Lasantha Wickrematunge was killed.
ref: srilanka journalist rish death by BBC News, 3rd feb 2009.

75)
ஐ.நா தன்னுடைய செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள தீர்மானித்தது.
அலுவலகம் கிளிநொச்சியிலிருந்து வவுனியாவுக்கு மாற்றப்படுகிறது. பிற உலக நாடுகளின்
அமைப்புகளும் தங்கள் பணியாளர்களை திரும்ப அழைத்துக்கொள்கின்றன.
கிளிநொச்சியிலிருந்து ஐ.நா. பணியாளர்கள் கிளம்ப தயாராக இருக்கும்போது'ஏவுகணைத்
தாக்குதல்கள் ஐ.நா அலுவலகத்தை நோக்கி..
15 செப் 2009ல் பொதுமக்கள் கூடி 'தயவுசெய்து இங்கிருந்து போகாதீர்கள்" என்று
கெஞ்சுகிறார்கள். (பக் 21)


128) ஊடகங்களிடம் பேசக்கூடாது என்றும் குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும்
என்றும் மீறீனால் தண்டனை என்றும் இலங்கையில் ஹெல்த் மினிஸ்டர்
எச்சரிக்கை செய்திருந்தார். டாக்டர் சத்தமூர்த்தியும் வரதராஜாவும் வன்னியில் இருந்த
நிலையை 05 மார்ச் 2009ல் "situation report health sector vanni" =
இலங்கை அரசுக்கு 16 மார்ச் அனுப்பிய ரிபோர்ட்டில்
போதுமான தேவையான மருத்துவ வசதிகள் இருந்திருந்தால் காயப்பட்ட பலரை
மருத்துவமனையில் காப்பாற்றி இருக்க முடியும். அடிப்படை மருத்துவ வசதிகள்
கூட இல்லாத நிலை நிலவியது.

" most of the hospital deaths could have been prevented if basic infrastucture facilities
and essential medicines were made available... we have been supplied with No antibiotics,
no anaethestics and not even a single bottle of IV fluid, leaving
us in a desperate situation of not being able to provide even life saving emergency
surgery" (pg 38)

146) வன்னியிலிருந்து அரசாங்கத்தின் பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் இடம்பெயர்ந்தப்போது
ஸ்கிரீன் செக்கிங் நடந்தது. அப்போது, ஆண்களும் பெண்களும் தனித்தனியாக நடந்தாலும்
அவர்கள் ஆடைகளை முழுவதும் நீக்கி நிர்வாணமாக்கி செக்கிங் செய்திருக்கிறார்கள்.
மக்களிடன் பேச அனைத்து உலக நாடுகளின் அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. (பக் 43)

161) ஆண்களை போரில் இழந்த குடும்பத்தின் பெ ண்களும் குழந்தைகளும் அவர்களுக்கு
முன்பின் தெரியாத ஆண்களுடன் ஒரே கேம்பில் அடைக்கப்பட்டனர். பெண்கள் குளிக்கும்போதும்
உடை மாற்றும் போதும் சிங்கள இராணுவத்தினர் பார்த்தது மட்டுமல்ல, வயிற்றுப் பசிக்காகவும்
தங்குமிடத்திற்காகவும் கேம்ப்களில் பெண்கள் தங்கள் உடலை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
(பக் 45)

193)
தங்கள் தாக்குதலின் மூலம் பொதுமக்கள் கட்டாயம் கொல்லப்படுவார்கள் என்று
அறிந்தும் தாக்குவது என்பது கொலைச் செயலாகும். சேனல் 4 காணோளி
காட்சிகள் இறுதிக்கட்ட போரில் சரணடைந்த/ கொண்டு செல்லப்பட்ட புலிகள்
இயக்கத்தினரை நிராயுதபாணியாக்கி இலங்கை இராணுவவீரர்கள் சுட்டுக்கொல்வதைக்
காட்டுகிறது.

where a civilian population is subject to an attack such as an artillery attack, which results in civilian
deaths such deaths may appropriately be characterized as murder, when the perpertrators had
knowledge of the probability that the attack would cause death" the channel 4 videos indicates that the SLA executed unarmed LTTE cadre who were taken into custordy particularly during the final days of the war.
(pg 56)

207) shelling of hospitals and humanitarian objects:

உலக மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் படி, (விதி. 25, 28, 31, 32 ) மருத்துவர்,\
மருத்துவ இடம், மருத்துவ ஊர்தி, மனித உரிமை பாதுகாப்பு நபர்கள், அவர்கள்
சம்பந்தப்பட்ட பொருட்கள் பாதுகாக்கப்படவும் மதிக்கப்படவும் வேண்டும்.
ஆனால் இலங்கை இராணுவம் ஐ.நாவின் கொடி பறந்த மருத்துவமனைகளைக்
குண்டு வீசித்தாக்கியது.ஏற்கனவே இலங்கை அரசுக்கு ஐ.நாவின் மருத்துவக்குழு
இடம் தெரிவிக்கப்பட்டிருந்தும் தாக்குதல் நடத்தியது. அதைப்போலவே
ஐ.நாவின் கொடி பறந்துக்கொண்டிருந்த அதன் அலுவலகம் , such as inthe first NFZ-
(no firing zone) குண்டுவீசித் தாக்கப்பட்டது .


113) படைக்கு புதிய ஆட்கள் கட்டாயமாக தேவைப்படும் சூழலில். புலிகள் இளைஞர்களையும்
இளம் சிறார்களையும் இழுத்துச் சென்றார்கள். அதிலும் குறிபாக ஏப்ரல் மாத, திர்கோணமலை
எழிலன் நூற்றுக்கணக்கான இளைஞர்களைப் பலவந்தமாக வலையன்மடம் சர்ச் பகுதியிலிருந்து
முல்லைவாய்க்கல் செல்லும் பேருந்தில் ஏற்றினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை
விட்டுவிடும் படி கெஞ்சி அழுதார்கள். (பக் 34)

&
annexure 3 pg 186

satellite imagery - explanatory note.

யுனிடார் - யுனோசட் ( United nations office of military affairs and the united nationa
institute for training and research) உதவியுடன் செயற்கோள்கள் அனுப்பிய
புகைப்படங்கள். முதல் ஆறு படங்கள் மருத்துவமனைகளின் மீது ஆர்டிலரி குண்டுகள்
வீசப்பட்டதை உறுதி செய்கின்றன. அடுத்த பத்து படங்களில் மூன்று No fire zone
என்று இலங்கை அரசு அறிவித்த இடங்களை குறிவைத்து தாக்குவதைக் காட்டுகிறது.


இந்த அறிக்கைச் சொல்லும் உப்பு சப்பில்லாத சில தீர்வுகள்:
----------------------------------------------------------




* போர்க்காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்களை அரசே விசாரிக்க வேண்டும்.

*கடத்தப்பட்டு பின் மாயமானவர்கள் பற்றிய உண்மை நிலையை அறிவிக்க வேண்டும்.

* அரசே நிகழ்த்தும் வன்முறைகளை நிறுத்த வேண்டும்.

*இக்குற்றச்சாட்டுகளை எல்லாம் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்று ஆய்வு
செய்யும் நடவடிக்கைகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்.

* இறுதிக்கட்டப்போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக
அரசு தனது பொறுப்பை ஏற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

Wednesday, July 6, 2011

ஈழம் பிரச்சனை குறித்து அறிஞர் அண்ணா 1954ல்





தகவல் : நன்றி திரு குமணராசன், ஆசிரியர், இலெமுரியா

தமிழ் சிந்தனையாளர் சங்கமத்தின் எட்டாம் அமர்வில்

ஈழத்தமிழர் படுகொலை பற்றிய ஐநா அறிக்கை வெளிவந்தப் பின்
அது குறித்த கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், சொற்பொழிவுகள்,
கட்டுரைகள் என்று வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இச்சூழலில்
இவ்வறிக்கை குறித்த ஒரு தெளிவு மும்பை மக்களிடம் இருக்கிறதா
என்ற ஐயம் எங்களுக்கு ஏற்பட்டது. அப்போதுதான் தமிழ் சிந்தனையாளர்
சங்கமத்தின் எட்டாம் அமர்வில் 'இலங்கை தமிழர் படுகொலை பற்றிய
ஐநா அறிக்கை' என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்ற
திரு குமணராசன் - தமிழ் இலெமுரியா மாத இதழின் ஆசிரியர் அவர்களைக்
கேட்டுக் கொண்டோம்.







திரு குமணராசன் அவர்கள் திராவிட இயக்கப் பின்னணியில் வளர்ந்தவர்.
தந்தை பெரியாரின் கொள்கைகளைத் தன் வாழ்க்கையில் அனைத்து தளங்களிலும்
கடைப்பிடித்து வரும் ஒரு சிலரில் மிகவும் முக்கியமானவர். சிறந்தச் சிந்தனையாளர்,
பேச்சாளர், மும்பை புறந்கர் திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பை
ஈழத்தமிழர் பிரச்சனை குறித்த திமுக வின் நிலைப்பாடு காரணமாகத் துறந்தவர்.
ஈழத்தமிழர் பலருக்கு நன்கு அறிமுகமானவரும் கூட.

நவிமும்பை தமிழ்ச் சங்க அரங்கத்தில், 3/7/11 ஞாயிறு மாலை 7 மணிக்கு கூட்டம்
ஆரம்பமாகியது.
மும்பை மழையில் நனைந்துக் கொண்டு வந்தவர்களை அன்றைக்கு அவர்
பேச்சு சூடாக்கியது. அவர் பேச்சிலிருந்து சில துளிகள்..

>இந்த சூலை மாதம் ஈழத்தமிழர் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வுகள்
நடந்த மாதம். இப்படி ஒரு ஜூலை மாதத்தில் தான் குட்டிமணி வன்கொடுமை
செய்யப்பட்டார். பண்டாரநாயகாவுடன் இந்திய அரசு ஓர் ஒப்பந்தம் செய்ததே
அதுவும் இந்த ஜூலை மாதத்தில்தான், ஏன்.. ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே
ஒப்பந்தமும் ஜூலை 27 1987ல் தான்.
இன்றைக்கு அதே ஜூலை மாதத்தில் தான் அந்த நினைவுகளை எல்லாம் சுமந்துக்
கொண்டு உங்கள் முன் நான் நிற்கிறேன். தமிழனுக்கு எட்டாத உரிமைகளை
உங்கள் எட்டாவது அமர்வில் பேச என்னை அழைத்திருக்கின்றீர்கள்.

> தாயை இழந்த சேயிடம் பொம்மையைக் காட்டி ஏமாற்றுவது போல ஐநா
அறிக்கையும்.

> ஈழத்தமிழர் குறித்து எதற்கும் அசையாத தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி
இருக்கிறது.

> இலங்கையில் தமிழர் வரலாறு வந்தேறிகளின் வரலாறு மட்டுமல்ல, அந்த நிலத்தின்
மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் வரலாறும் கூடத்தான் என்பதைப்
பலர் புரிந்து கொள்வதில்லை. எனவே இலங்கை வரலாற்றைத் தொட்டுச்செல்வது
சிலரின் ஐயப்பாடுகளைத் தீர்த்து வைக்கும்.
(சரியாகவே தான் சொன்னார் என்று நினைத்துக் கொண்டேன். ஏனேனில் அங்கே
வேலைத்தேடிப் போனவா தனிநாடு கேட்டா சரியா? சொல்லுங்கோ..? என்று
ஒரு கல்லூரி பேராசிரியரே மும்பையில் பேசியது என் நினைவுக்கு வந்தது.!!)

> ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த , நிர்வாகக்காரணங்களுக்காக இந்தியா என்றும்
இலங்கை என்றும் ஒன்றுபட்ட தேசங்களின் சுதந்திர வரலாற்றுப் போரில்
தமிழனின் குரல் என்றுமே தனித்து ஒலிக்கவில்லையே. அவர்களின் அன்று
பெருந்தன்மையுடன் நடந்துக் கொண்டார்கள். அதனால் தான் ஒன்றுபட்ட
சுதந்திர இந்தியா, ஒன்றுபட்ட சுதந்திர இலங்கை என்று கொடி பறந்தது.

> ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை அடங்கி இருந்த சிங்களவர், சுதந்திரம்
கொடுக்கப்பட்டவுடன் தங்கள் கோரமுகத்தைக் காட்டியது ஏன்?
காரணம் ஈழத்தமிழனின் பொருளாதர, கல்வி ஆளுமை.

> அதன் பின் சிங்களவர்/ தமிழர்களுக்கு நடுவே தரப்படுத்துதல் என்ற கீறல்
விழுகிறது.
> 1954ல் ஆசியஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேரு ஒப்பந்தம் செய்து
கொள்கிறார். ஈழத்தமிழர்களின் நலனுக்காக அல்ல, தன்னை ஆசியஜோதி
என்று நிலைநிறுத்திக்கொள்ள. தங்கள் அரசியல் சுய லாபங்களுக்காக.




(அனைத்து தீர்மானங்களையும் குறித்து காலவரிசைப்படி அவர் பட்டியலிட்டார்.)

வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழீழம் அமைய இளைஞர்களே வாருங்கள் என்றழைப்பு
விட்டது.

> ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். தமிழர்கள் பல்வேறு தமிழீழ அமைப்புகளின்
மூலம் அமைதியான முறையில் எடுத்த எல்லா முடிவுகளும் தீர்மானங்களும்
சிதைக்கப்ட்டனவே, இதற்கெல்லாம் காரணம் யார்? ஈழத்தமிழர்களா?
இக்காலக்கட்டத்தில் புலிகள் இயக்கம் அப்போது பிறக்கவே இல்லை.
ஈழத்தமிழர் ஆயுதம் ஏந்தியதற்கு காரணம் புலிகள் , புலிகள் என்று
சொல்கிறவர்கள் யோசிக்க வேண்டும்.

> 1983, ஆகஸ்டு 04ல் இதே மும்பையில் ஈழத்தமிழர்களை ஆதரித்து 10 இலட்சம்
தமிழர்கள் திரண்டார்கள். தமிழர் பேரவையின் தலைவர் வரதராசனார் தலைமையில்.
அன்றைக்கு தமிழர்கள் பேரணியில் கலந்துக் கொள்ள வசதியாக அம்பர்நாத்திலிருந்து
ஒரு ரயில்வண்டியே முன்பதிவே செய்யப்பட்டது. இன்றைக்கு அந்தத் தமிழர்கள்
எல்லாம் எங்கே போய்விட்டார்கள்?

>கொத்துகொத்தாக ஈழத்தமிழர் செத்து மடியும் போது கள்ள மவுனம் சாதித்த
ஐநாவும் பான்கிமூனும் இன்றைக்கு மனித உரிமைகள் குறித்துப் பேசுகிறார்கள்

> இந்திய எல்லைப் போரில் எல்லாம் துடித்து எழுந்தவன் தெற்கே வாழ்ந்த தமிழன்.
வேற்றுமையில் ஒற்றுமை என்று இந்தியாவின் பதாகையைத் தூக்கிப் பிடித்திருக்கும்
கைகள் தமிழனின் கைகள். ஆனால் இந்தியா மட்டும் எப்போதும் தமிழனை
வேற்றுமைப் படுத்தியே பார்க்கிறது.
(ஆமாம்.. இந்தியா எங்களைக் காப்பாற்றும் என்கிறது இலங்கை அரசும்
ராஜபக்சேயும். இந்தியா எங்களைக் காப்பாற்றும் என்று கூறமுடியுமா
நம் தமிழக மீனவர்கள்? என்று அடுத்தக்கட்டத்திற்கு என் மனம் தாவியது)

> மேற்கு வங்க மாநிலத்தின் அன்றைய முதல்வர் ஜோதிபாசு சட்டமன்றத்தில்
நிறைவேற்றிய தீர்மானம், நடுவண் அரசு ஏற்காவிட்டால் மாநில அரசின்
கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் போலீஸ்படையைக் கொண்டு போராடத் தயங்க
மாட்டேன் என்று வெகுண்டெழுந்ததும் அதுவே பங்களாதேசம் என்று
இன்றைக்கு ஐநாவில் ஒரு தனிதேசக்கொடிப் பறக்க காரணமானதும்
வடக்கே சாத்தியப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடுவதற்கில்லை.

> இந்த அறிக்கையில் ஒரு வரியில் கூட இனப்படுகொலை என்ற சொல்
பயன்படுத்தப்படவில்லை.

> No Fire zone என்று அறிவித்துவிட்டு அங்கே தமிழர்களைக் குவித்து
குண்டு போட்டு அழித்ததைப் பதிவு செய்துள்ளது.

> கேம்ப் களில் ஸ்கீரின் சோதனை என்ற பெயரில் நம் தமிழ்ப்பெண்களின்
உடலைத் தொட்டுப் பார்த்ததையும் ஏன் நிர்வாணமாக்கியதையும்
பதிவு செய்துள்ளது.

திரு குமணராசன் அவர்கள் சற்றொப்ப இரண்டு மணிநேரம் பேசினார்.
அதன்பின் இலங்கையின் கொலைக்களம் என்ற சேனல்4 ல் வெளியான
ஆவணப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது.
கனத்த இதயத்துடன் ... நாங்கள்..ஒவ்வொருவரும்.

Wednesday, June 29, 2011

மெழுகுவர்த்திகள் மட்டும் போதுமா?

மெரீனா கடற்கரையில் மெழுவர்த்தி ஏந்தி
உங்கள் உணர்வை
உங்கள் எதிர்ப்பைக் காட்டிய
என் உறவுகளே....

ஆண்டுக்கொரு முறை மெழுகுவர்த்தி ஏந்தி
நினைவேந்தல் நடத்துவதன் ஆரம்பவிழாவா
உங்கள் கூட்டமும் உங்கள் கோஷமும்..?
அப்படியானால்
என்னை மன்னித்துவிடுங்கள்...
இனிமேல் மெழுகுவர்த்திகளை
உங்கள் தீர்க்கமுடியாத வியாதியாகிவிட்ட
மின்சாரதடையின் போது மட்டுமே
உபயோகப்படுத்துங்கள்.
அது உங்களுக்கு மட்டுமல்ல
உங்கள் அடையாளங்களைச் சுமந்து
உங்கள் அடையாளங்கள் இருந்ததால் மட்டுமே
மண்ணில் விதைக்கப்பட்ட
மானுட விதைகளுக்கு
நீங்கள் செய்யும் மரியாதையாக
இருக்க முடியும்.

எப்போதும் உணர்வுக்குமிழிக்குள்
பொங்கி வெளிவந்து
கரை சேர்வதற்குள் உடைந்துப் போன
கடந்தக் காலத்தின் கதைகள்
தொடர்கதையாகிவிடாது
என்பது என்ன நிச்சயம்?

உங்கள் திட்டம் என்ன?
உங்கள் செயல்பாடு என்ன?
உங்களுக்குள் இருக்கும்
உப்பு புளி சண்டைகளை
உங்களுக்குள் இருக்கும்
அதிகார ஆசைகள்
உங்களுக்குள் இருக்கும்
உன்மத்தங்கள்
எல்லாவற்றையும் எரித்துவிட்டீர்களா?
எரித்தச் சாம்பலை வங்கக்கடல்நீரில்
கரைத்துவிட்டீர்களா?

யாராவது தீர்மானம் போட்டால்
எல்லாம் நடக்கும் என்று
எப்போதும் நினைத்தீர்கள்!
அட இப்போதும் நினைக்கிறீர்கள்!
எப்படி நடக்கும்?
இறையாண்மை இருக்கிறதே..!
அதை வெல்லும் மறையாண்மை
மறவர் ஆண்மை
உங்களிடம் இருக்கிறதா..?

செண்ட்ரல் ஸ்டேஷந்தாண்டி
உங்கள் செய்திகள் கூட
பயணிக்கவில்லை என்பதை
என்றாவது பார்த்திருக்கின்றீர்களா
?
மெரீனாவில் ஏற்றிய
மெழுகுவர்த்திகள் எரிந்து முடிவதற்குள்
இலவச டிவிக்களில்
மானாட மயிலாட பார்க்கும்
மானுடப்பிறவிகளே...

இருளைச் சுமந்துக்கொண்டே
எரியும் மெழுகுவர்த்தியாய்
இந்தியத் தமிழனாய்
இருக்க நினைப்பது

சத்தியமாய்த் தவறில்லை
சாத்தியமா தெரியவில்லை

செங்கோட்டையிலிருந்து
தேவதூதர்கள்
வருவார்கள்
போவார்கள்
எழுதுவார்கள்
அறிக்கை விடுவார்கள்..
ஆகா என்று
ஆனந்தப்பட்டு ஆரத்தழுவும்
காட்சிகள் மாறவில்லை
கட்சிகள் தான் மாறி இருக்கின்றன.

முடியும் என்றால்
உங்கள் அணிவகுப்பை
செங்கோட்டையை நோக்கித்
திருப்புங்கள்
செங்கோட்டை வாசலெங்கும்
மெழுகுவர்த்திகள் எரியட்டும்
அணையாமல் எரியட்டும்
குளிர்ந்தக் காற்றில்
அணைந்துவிடாமல்
சூடேற்றக் காத்திருக்கும்
சூரியக்குஞ்சுகளின் சார்பாக...

Tuesday, June 21, 2011

காயங்களுக்கு மயிலிறகாய் கவிதைமொழி....


என் கவிதை தொகுப்பு "ஐந்திணை"
இருவாட்சி பதிப்பகம், சென்னை வெளியிட்டுள்ளது.
அந்நூலுக்கான என்னுரையில்.....


காதல் ஒரு நினைவுச்சுருள்.
ஒரு நிமிடத்தில் ஓராயிரம் ஆண்டுகளின் நினைவுகளைப்
புரட்டிப் போடும் வேகம்
காதலின் நினைவுச்சுருளுக்குள் பத்திரமாக
நமக்குத் தெரிந்தும் தெரியாமலும்
நமக்குள் ஓடிக்கொண்டுதானிருக்கிறது.
அந்த நினைவுகளைப் புரட்டிப்பார்ப்பதும் அசைப்போடுவதும்
பெண்ணுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கற்பொழுக்கத்தில் ஒரு கரும்புள்ளிஎன்று
காலம் காலமாக அவளுக்குப் போதிக்கப்பட்டு வருகிறது.
அதனால்தான்
அந்த நினைவுச்சுருளைத் தொட்டுப்பார்க்கவே பெண்கள் அச்சப்படுகிறார்கள்.
சமூகம், சமூக அந்தஸ்த்து, குடும்பம்..
இப்படியாக சொல்லப்படும் காரணங்கள்
அனைத்தும் பெண்ணை மையமாக்கி
சுற்றி சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் வளையங்கள்.
அந்த வளையத்துக்குள் இருந்துக்கொண்டே
பிரபஞ்சம் போல பரந்து விரிந்து
தன்னை ஆட்கொண்ட காதலை வெளிப்படுத்துவது என்பது
சங்ககாலம் தொட்டே பெண் எதிர்நோக்கும் பிரச்சனையாகவே
வலம் வந்துக் கொண்டிருக்கிறது.
புறம் சார்ந்தக் காரணிகள் ஒருபக்கம் என்றால்,
புறக்காரணிகளின் தாக்கத்தால் ஏற்படும்
அகம் சார்ந்த உணர்வுகளே குற்றமாகி
அவள் கழுத்துக்கு மேலே தூக்குக்கயிறாய்
எப்போதும் அசைந்து ஆடிக்கொண்டிருக்கிறது
.

காதல் இயல்பானது-
காதல் இயற்கையானது -
என்ற உண்மையை அவள் உணர்ந்து கொள்ள நடக்கும் போராட்டத்தில்
அவள் சமூகத்துடன் மட்டுமல்ல,
'நான் - பெண் ' என்ற தன் சுயத்துடனும்
போராடிக் கொண்டே இருக்கிறாள்.
இந்தப் போராட்டத்தில்
உண்மையை அப்படியே நிர்வாணமாக்க
அவள் உடல் கூசுகிறது.
மொழிகளின் வசீகரமான வார்த்தைகளால் உண்மைகளை
அவள் அலங்காரம் செய்துக் கொள்கிறாள்.
கவிதைமொழி அவள் காயங்களுக்கு மயிலிறகாய் தடவிக்கொடுக்கிறது.

**

காதலும் பெண்ணும் ஒன்றில் ஒன்றாய்க் கலந்து கரைந்து நிற்பதை
அவள் உணரும் தருணத்தில்..
அவள் தான் காதல்
காதல் தான் அவள்.
அவளிடமிருந்து எவராலும் எக்காலத்தும் காதலைப் பிரித்தெடுக்க முடியாது.
குட்டிப்போட்டு பாலூட்டுவது மட்டுமே பெண்ணின் அடையாளம் என்ற வட்டத்தை
அவள் உடைத்துவிட்டாள். காதல் மட்டுமே அவளுக்கான அடையாளம்.
ஆகாயத்தின் கீழிருக்கும் அனைத்தையும் அவள் காதல் தனதாக்கிக் கொள்கிறது
களவும் கற்பும் ஊடலும் கூடலும் மட்டுமே காதலாகி இருந்த அவள் வாழ்க்கையில்
நெய்தலும் பாலையும் காதலின் வலிமையைக் காட்டும் அவள் ஆயுதங்களாகின்றன.

**

உங்கள் காதல் கவிதைகளின் போதையில் பெண் தள்ளாடுவதை
உங்களின் வெற்றி என்று கொண்டாடினீர்கள்.
அப்போதுதான் அவளுக்குத் தெரியவந்தது
காதல் என்ற பெயரால் அவள் கட்டப்பட்டிருக்கும் சூக்குமம்.
காதலுக்கு கூட இனி அவள் அடிமையாக இருக்க மாட்டாள்.
காதல் மட்டுமே விட்டு விடுதலையாகி பறக்கும் சுகத்தைத் தரும்
என்பதை அவள் தனக்காக மட்டுமல்ல, உங்களுக்காகவும் சேர்த்தே பாடிக்கொண்டிருப்பாள்.
வேடனின் வலையுடன் பறந்தப் புறாவின் கதையை நீங்கள் அறிவீர்கள்.
வேடன் வலையையே சிறகாக்கி பறக்கும் புறாவாக அவள்

இதோ.. உங்களுடன்.

**

கவிதைகளில் "கூறியது கூறல்" இருப்பதை நானறிவேன். வெவ்வேறு காலக்கட்டத்தில்
எழுதியவை என்ற காரணங்களுக்கெல்லாம் அப்பால் அபாயங்கள் இருப்பதை
அடிக்கடி நினைவுபடுத்தினால் விபத்துகள் தவிர்க்கப்படலாம் என்ற நப்பாசைதான்!
உள்ளாடையிலிருந்து உள்ளாட்சி தேர்தல் வரை இங்கே அரசியல் இருக்கும் போது
ஐந்திணையிலும் அரசியல் கலந்திருப்பது ஆயுள் தண்டனைக்கான குற்றமா என்ன?

**


ஐந்திணையை என் அப்பச்சி - அப்பாவின் அம்மா - நினைவில் வாழும்
என் பாட்டி அமராவதி சுப்பையாவுக்கு... என்று ஒற்றைவரியில்
அறிமுகப்படுத்துவது அவளுக்கு நான் செய்யும் நியாயமாக இருக்காது.
என் பாட்டியின் புகைப்படம் இல்லவே இல்லை. நாங்கள் யாரும் அவளைப்
பார்த்ததில்லை. ரவிக்கையும் காலில் செருப்பும் அணிவது மறுக்கப்பட்ட
சமூகத்தில் அவள் 1915வாக்கில் தன் திருமணத்தின் போதே திருநெல்வேலி சீமையிலிருந்து
ரவிக்கை அணிந்து காலில் செருப்புடன் எங்கள் கிராமத்தில் அடியெடுத்து வைத்து
மவுனமாக ஒரு புரட்சியைச் செய்திருக்கிறாள்..கொழும்பு, கராச்சி, பம்பாய் என்று
தாத்தாவுடன் கப்பலில் பயணம் செய்திருக்கிறாள். அவள் செய்த புரட்சிகளைப்
புரிந்துக் கொள்ளவும் பெருமையுடன் உங்களுக்கு அறிமுகப்படுத்தவும் ஐந்திணையில்
ஒரு புள்ளி வைத்திருக்கிறேன்.

**

கடுகளவு உதவி செய்தாலும் அதைக் கடலளவாய் எப்போதும் இசைத்துக் கொண்டிருக்கும்
பேருள்ளம் சிலருக்குதான் உண்டு. என் நட்புவட்டத்தில் எப்போதும் அந்த
அலைகளுக்குச் சொந்தக்காரர் நண்பர் அன்பாதவன் அவர்கள். அவருடைய முயற்சிதான்
என் எழுத்துகள் பல அச்சேற உதவியாகவும் உறுதுணையாகவும் இருக்கின்றன.
தன் பணிகளுக்கு நடுவில் இக்கவிதைகளுக்கு அவரே அணிந்துரையும் தந்து
சிறப்பு செய்திருக்கிறார்.
வடிவமைத்த கோவை பாலா, வெளியிடும் உதயக்கண்ணன், என் கவிதைகளுக்கு
இடமளிக்கும் சிற்றிதழ், இணைய இதழ் தோழமை உறவுகளுக்கும் என் வணக்கமும்
நன்றியும்.

Thursday, June 16, 2011

சமச்சீர் கல்வியும் சண்டைக்கோழியும்




சமச்சீர் கல்வியை தடை செய்வதும் அதற்கான காரணங்களாக
பாடத்திட்டத்தில் குற்றம் கண்டுபிடித்ததும்.. இப்படியாக
நித்தமும் ஓர் அறிக்கை யுத்தம்.. பாவப்பட்டவர்கள்
மாணவர்களும் பெற்றோர்களும் மட்டுமல்ல.. பள்ளிகூட
ஆசிரியர்களும் தான்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி
பாடத்திட்டம் தொடரும் என்று அறிவித்தாகிவிட்டது.
ஆறாம் வகுப்புக்குப் பின் பழைய பாடத்திட்டமாம்!
தலையைச் சுற்றுகிறது...! இந்தக் கேலிக்கூத்துக்கெல்லாம்
சொல்லப்படும் காரணங்களும் அரசியல் தலைவர்களின்
கோமாளித்தனங்களும்...!!

தினமலர் 13/6/2011ல் வெளியாகி இருக்கும் ஒரு செய்தி.

" ப்ளஸ் 1 ப்ளஸ் 2 பாடப்புத்தகங்களில் கடைசிப் பக்கத்தில்
செம்மொழி மாநாடு லோகோ அச்சிடப்பட்டுள்ளது. இப்புத்தகங்களில்
உள்ள லோகோவை மறைக்கும் வகையில் அதன் மீது ஸ்டிக்கர்
ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 10 வகையான அளவுகளில்
இரண்டு லட்சம் ஸ்டிக்கர் திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து
கோரப்பட்டிருந்தன. அதன்படி பச்சை நிறத்திலான ப்ளெயின் ஸ்டிக்கர்
வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான ஸ்டிக்கர் வழங்கி
புத்தகங்கள் மீது ஒட்டிய பின்பே மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது."

செம்மொழி மாநாடு நிகழ்வில் பலருக்கும் கருத்து வேறுபாடு உண்டு.
செம்மொழி மாநாடு கலைஞரின் கவிதை.. "செம்மொழியான தமிழ்மொழியாம்..."
வெளிவந்தவுடனேயே பல்வேறு விமர்சனங்கள் வந்தன. இலக்கண குற்றத்தையும்
தமிழறிஞர்கள் சுட்டிக்காட்டினார்கள்...
இதெல்லாம் இருக்கட்டும்.. ஆனால் முந்தைய திமுக ஆட்சியில் செம்மொழி
மாநாடு முத்திரையும் அதில் எழுதப்பட்ட 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்'
என்ற வாசகங்களும் மட்டும்தான் ஒவ்வொரு தமிழனும் பெருமைக்கொண்ட
விரும்பிய ஓர் அம்சம். அதை அரசுப் பொறுப்பேற்றவுடன் தமிழக முதல்வர்
ஜெயலலிதா அவர்கள் திமுக கலைஞர் மீதான வெறுப்பை தமிழனின் பெருமிதமான
திருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் செயல்படுத்தி இருக்கிறார்.
இந்த நிகழ்வின் மூலம் சமச்சீர் கல்வியை எதிர்ப்பது ஏன் என்பதை
மட்டுமல்ல..
' நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் பார்..! '
என்ற தன் அதிகாரத்தின் உச்சத்தையும் காட்டி இருக்கிறார் தமிழக முதல்வர்.

குஷ்பு எதாவது உளறிக்கொட்டினால் கொதித்துப் போகும் என் தமிழ்
உணர்வாளர்கள் இதை எல்லாம் கண்டும் காணாமலும் இருக்க
கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு.. "

Saturday, June 11, 2011

கலைஞர் டிவியும் திமுகவும்




கலைஞர் டிவி.. திமுக என்ற அரசியல் இயக்கத்தின் தொலைக்காட்சி அல்ல.
திமுக என்ற அரசியல் இயக்கத்தின் தலைவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும்
சொந்தமான ஒரு சொத்து கலைஞர் டிவி. வீடு வாசல் தோட்டம் நகை நட்டு போல
இதுவும் ஒரு சொத்து. அதிலும் பொன்முட்டையிடும் வாத்து என்று கூட வைத்துக்
கொள்ளலாம்.

சரி, திமுகவின் எந்த திராவிட இயக்க கருத்துகளை முன்வைத்து
கலைஞர் டிவியின் நிகழ்ச்சிகள் இருக்கிறதா என்று பார்த்தால்
மற்ற தொலைக்காட்சிகளுக்கும் கலைஞர் டிவிக்கும் எந்த வேற்பாடுகளும்
கிடையாது. எனவே கலைஞர் டிவியை திராவிட இயக்கத்தின் கருத்துப் பரப்பும்
ஊடகம் என்று காதில் பூச்சுத்த முடியாது.

கலைஞர் டிவி ஆரம்பிக்கும் போது திமுக வின் பொதுக்குழு செயற்குழு
கூட்டத்தைக் கூட்டி அதில் கருத்துக் கேட்டு ஆரம்பித்தார்களா என்றால்
அப்படியும் இல்லை. ஆனால் கலைஞர் டிவிக்கு இன்று ஏற்பட்டிருக்கும்
அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண திமுக வின் பொதுக்குழு
செயற்குழு கூட்டப்படுவது ஏன்?

Saturday, June 4, 2011

கலைஞர் வசனத்தில் குளறுபடி




திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய 88வது வயது
பிறந்தநாள் அன்று 3/6/2011 ல் தன் தொண்டர்களுக்குச் சொன்னது:

" சமுதாய எழுச்சிக்காகவும் அரசியல் மறுமலர்ச்சிக்காகவும் தங்களை
ஒப்படைத்துக் கொண்ட தோழர்கள், உடன்பிறப்புகள்,
'கூடா நட்பு கேடாய் முடியும்!' என்ற பொன்மொழியை மறந்துவிடாமல்
பயணம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் " என்றார்.

எல்லாம் சரிதான். நீங்கள் மிகச் சிறந்த வசனகர்த்தா என்பதில்
என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால் இதென்ன.. ?? இந்த வசனத்தை நீங்கள் சொல்றமாதிரி
இருப்பது கதையுடனும் காட்சியுடனும் பொருந்தவே இல்லையே.
உடன்பிறப்புகள் உங்கள் பிறந்தநாளுக்குச் சொன்னதாக
இருந்தால் தானே சரியாக இருக்கும்.

இப்படி எல்லாம் உங்களைப் போன்ற சிறந்த வசனகர்த்தாக்கள்
வசனத்தில் குளறுபடி செய்வது தான் எங்களுக்கு குழப்பமாக
இருக்கிறது. கதையும் புரியலை.. உங்கள் கதைப் பாத்திரமும்
புரியலை.. பாவம் உடன்பிறப்புகளும் கூட்டணி தோழர்களும்.

Sunday, May 22, 2011

அரசியல் குருபெயர்ச்சி






தேர்தல் முடிவுகள் வந்த நாள்..
மறக்க முடியாத நாளாக இருந்தது.முந்தின நாள்: இரவில் தூக்கம் வரவில்லை.
வீனஸ் சேனலில் வேலைக்குச் சேர்ந்தப் பின் நண்பர்கள் வட்டம் அதிகமாகிப்போனதுஒருவகையில் எரிச்சலாகவே இருந்தது.

எலெக்ஷன் ரிசல்ட் விடிந்தால் காலை 10 மணிக்கெல்லாம் தெரிந்துவிடப் போகிறது.இருந்தாலும் ஏன் தான் இந்த மாதிரி எல்லாம் கேள்விக் கேட்டு தொந்தரவு செய்கிறார்களோ தெரியவில்லை.

அரசியல் கட்சியில் இருப்பவர்களும் தேர்தலில் போட்டி இடும் வேட்பாளர்களும்கேட்டால் ஏதொ அதற்கு காரணம் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால்சொந்தக்காரர்கள் முதல் கல்லூரியில் ஒன்றாய் படித்த தோழியின் கணவர் வரைபோன் செய்து விசாரித்தார்கள்.
எங்கள் கணிப்பு இதுதான் என்று சொன்னால் அப்படியா என்று கேட்டுவிட்டுஇருக்க வேண்டியதுதானே. காரண காரியங்கள் எல்லாம் கேட்பார்கள்,அவர்கள் திருப்தி படுகிறமாதிரி பதில் சொல்லியாக வேண்டும்.இல்லை என்றால் நாங்கள் செய்த கருத்துக் கணிப்பு வேலை எல்லாம்ஒரு பைத்தியக்காரத்தனம் என்கிற மாதிரி பேசுவார்கள்.அப்படிச் சொல்கிறவர்களிடம் அப்புறம் நீங்கள் ஏன் சார் போன் போட்டுஎங்களிடன் கேட்கிறீர்கள் என்று கேட்டால் சரியான பதில் வராது.

வீனஸ் சேனலில் நாங்கள் கொடுத்திருந்தக் கருத்து கணிப்பு நான்கு மாநிலங்களிலும்சரியாக இருந்தது. அந்த டீமுக்கு நான் தான் பொறுப்பு என்பதால் மேலிடத்திலிருந்துஏகப்பட்ட பாராட்டு வந்தது.ஸ்டார், ஹெட் லைன்ஸ் என்று நான் இதற்கு முன்பு வேலைப் பார்த்த சேனல்நண்பர்களும் எனக்கு வாழ்த்துச் சொன்னார்கள். உங்களை ரொம்ப மிஸ் பண்ணினோம்என்று சொன்னது எனக்கு கொஞ்சம் பெருமையாகத் தான் இருந்தது.

எல்லோரின் கருத்துக் கணிப்பையும் மீறி ஜெயலலிதா அதிரடியாக இவ்வளவுஇடங்களைப் பிடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றுஅரசியல் பிரிவில் வேலைப்பார்க்கும் நரேஸ் நாலு பத்திரிகை காரர்களைவைத்துக் கொண்டு அலசிக் கொண்டிருந்தான்.

செல்வி ஜெயலலிதா பழைய தவறுகளைச் செய்ய மாட்டார் என்றும்இன்னும் 10 வருடத்திற்கு அவரை அசைக்க முடியாது என்றும்சிலர் சொன்னார்கள்.

ஜெயலலிதா, மம்தா இருவரின் ஜாதகப்படி எதிரிகள்இருந்த இடம் தெரியாமல் போவார்கள் என்றும் அவர்கள் வெற்றிக்குகுருபெயர்ச்சியே காரணம் என்றும் ஒரு பண்டிதர் அலசிக் கொண்டிருந்தார்..

தேர்தல் முடிவுகளை நக்கீரன் ஆசிரியரை வைத்துக்கொண்டு அட்டகாசமாகஆரம்பித்த கலைஞர் டிவி 10 மணிக்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல்அல்லாடிக் கொண்டிருந்தது பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ரொம்பவும்பரிதாபமாக இருந்தது. எப்படியோ 'மானாட மயிலாட' போட்டு அன்றைய பகல் பொழுதை ஓட்டினார்கள்.

ஸ்டாலின் பின்னடைவு என்ற செய்தி அடிக்கடி வந்து பயமுறுத்தியது உண்மை!உண்மையாப்பா? என்று சென்னை நண்பர்களைத் தொடர்புக் கொண்டால்ஒவ்வொருவரும் அவரவர் கேள்விப்பட்டதைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

என் கருத்துக்கணிப்புக்கு மிகவும் பலமாக இருந்தது திமுகாவின் பழம் பெரும்தொண்டர்களின் ரகசிய வாக்குமூலங்கள் என்று நான் யாரிடமும் வெளியில்சொல்லவில்லை.
எங்கள் ஊரில் திமுகாவின் பழம் பெரும் தொண்டர் ஒருவர் சொன்னக் கருத்துதான்என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது. அவரும் என் அப்பாவும் நெருங்கியநண்பர்கள். இருவரும் கலந்துக் கொள்ளாத திமுக மாநாடுகளே கிடையாது.இரண்டு பேருமே மனைவி பிள்ளைகள் என்று கவலைப்பட்டதே இல்லை.என் அப்பாவுக்காவது மாசச்சம்பளம் வரும் உத்தியோகம் இருந்தது.அவருக்கு அதுவும் கிடையாது. இரண்டு வீட்டிலும் பிள்ளைச் செல்வங்களுக்குமட்டும் குறைவில்லை. எந்தப் பிள்ளை எந்த வகுப்பு படிக்கிறது, என்ன செய்கிறதுஎன்று இருவரிடமும் கேட்டால் தெரியாது. ஆனால் கட்சியில் யார் யார் என்னசெய்து கொண்டிருக்கிறார்கள், என்ன எழுதினார்கள், இத்தியாதி விசயங்கள்அத்துப்படியாகத் தெரியும். அதெல்லாம் ஒரு பெரிய கதை.

அவரிடம் தான் எலெக்ஷனுக்கு முந்தியே கொஞ்சம் பல்ஸ் பிடிச்சிபார்ப்பதற்காக போனில் பேசிக்கொண்டிருந்தேன்.

ஆவடையப்பன் தோற்கட்டும்
எல்லாரும் தோக்கட்டும் அப்போ தான் புத்தி வரும்..
மூணே மூணு பேரு ஜெயிச்சா போதும்..
தலைவரு, ஸ்டாலினு அப்புறம் நம்ம பேராசியர்..'"

நான் வேறு அவர் வேறல்ல, நான் தான் அவர், அவர்தான் நான்... என்றுஅடிக்கடி அன்பழகன் சொல்வாராம் நெல்லை நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.பாவம் அவருக்கு ரொம்பவும் வேண்டியவரு அவுட் போலிருக்கே என்றுஅன்பழகனின் தோல்வியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான் விழித்தெழு இயக்கத்திலிருந்து தம்பி ஸ்ரீதர் வீட்டுக்குவந்தான். எலெக்ஷன் ரிசல்ட் குறித்து ரொம்பவும் காரசாரமாகப்பேசிக்கொண்டிருந்தான்.அன்பழகன் தோல்விக்கு மிகவும் சரியாக ஒரு நியாயத்தை முன் வைத்துப்பேசினான்.

பிறகென்ன அக்கா,
மக்களுக்கு இப்போதெல்லாம் புரிந்துவிட்டது,குற்றம் செய்பவன் மட்டும் குற்றவாளி இல்லை,அந்தக் குற்றத்தைக் கண்டும் காணாமல் கூட இருப்பவன் மிகப்பெரிய குற்றவாளி.அதற்குரிய தண்டனையைத் தான் வழங்கி இருக்கிறார்கள்! வாழ்க.
என்றான்.

அவன் எதைப் பேசினாலும் கொஞ்சம் சூடாகத்தான் பேசுவான்.அவன் சொல்வதிலிருந்த நியாயங்கள் எனக்கும் புரிந்தது.செம்மொழி மாநாட்டு மேடையில் மியுசிக் சேரில் உட்கார இடம் பிடிப்பதுமாதிரி வாரிசுகள் போட்டிப் போட்டதைக் கண்டும் காணாமல்இடிச்சப்புளி மாதிரி மனுசன் உட்கார்ந்திருந்தக் கோலம் நினைவுக்கு வந்தது.

அன்றிரவு,நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே படுத்திருக்கிறேன்.
ஒவ்வொரு நட்சத்திரமாக கடலில் விழுந்துக் கொண்டிருக்கிறது என்றுகாற்று வந்து மெதுவாகச் சொல்கிறது
புதிய வானம், புதிய நட்சத்திரங்கள் வரட்டும், என்கிறேன்.
ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டையை புதிய வானம் புனரமைக்குமா?காற்று கேட்கிறது கண்ணீருடன்.
கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்ல கைகளை நீட்டியவுடன்காற்று காணாமல் போகிறது..

தெற்கிலிருந்து அழும் விம்மல் ஓசை..
முட்புதரில் கிழிந்துத் தொங்கும் உள்ளாடை
மருத்துவமனைகள் எங்கும் பிணவாடை.
சாபமிடுகிறாள் என் ஆதித்தாய்.
பயமாக இருக்கிறது.. குருதி வழிய காயத்துடன்அவள் நின்ற கோலம்

மன்னித்து விடு தாயே ... என்று அலறுகிறேன்.
அவள் கருப்பை வெடித்துச் சிதறுகிறது
ரத்த வெள்ளத்தில் மிதக்கிறது அவள் குழந்தை பிணமாக..
மயங்கி விழுகிறேன்.எழுந்து நிற்கத் தெம்பில்லை.
ஆதித்தாயின் சாபம் என்னைத் துரத்துகிறது.
என் இருத்தலை ஆயிரம் ஏவுகணைகளால் துளைத்து எடுக்கிறது.

ஊரில் அப்பா பெயரால் ஏற்றப்பட்டிருந்த கொடிக்கம்பம்
சாய்ந்துவிழுந்துவிட்டதாம்.
மீண்டும் கொடிக்கம்பதை தூக்கி நிறுத்தவா?
அல்லது விழுந்தது விழுந்ததாகவே இருக்கட்டுமே என்று விட்டுவிடவா? கேட்கிறான் தம்பி, புரியவில்லை. அவனுக்கு என்ன பதில் சொல்லட்டும்?
காலம் என் பதிலுக்காக காத்திருக்கப் போவதில்லை.
கொடிக்கம்பத்தில் பொறிக்கப்பட்டிருந்தஅப்பாவின் பெயர்
கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைகிறது.பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.. மவுனமாக.
அந்தப் பெயர், அந்த மனிதர், அந்த முகம், அந்த வாழ்க்கை
அதில் எனக்கான இடம் ஒரு சின்னப் புள்ளிதான் என்றாலும்
ஓ வென்று அழ வேண்டும் போலிருக்கிறது.
என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர்..
நான் தூக்கத்தில் அழுதேனா.. தெரியவில்லையே
நட்சத்திரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அப்பாவின் நீண்ட நேரியல்என் கண்ணீரைத் துடைக்கிறது.

காலையில் திமுக தொண்டர் தோல்வி தாங்காமல் தற்கொலை என்ற செய்தியை வாசித்தவுடன் கோபம் வந்தது.உங்கள் ஊரில் மட்டும் ஏன் எதற்கெடுத்தாலும் தற்கொலை, தீக்குளிப்பு!அடிப்படையில் உங்கள் எல்லோருக்குமே எதோ ஒரு வகை மனவியாதிப்டித்திருக்கிறது என்கிறார்கள் என்னுடன் வேலைப்பார்க்கும்வீன்ஸ் டிவி நண்பர்கள்.
இருக்கலாம் ! என்று சொல்லிவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல் நலம்பெற மராட்டிய மாநில ரஜினி ரசிகர் மன்ற தலைவர் எனக்குத் தெரிந்தவர்தான், ஆதிமூலம் ஏதொ யாகமெல்லாம் செய்யப் போகிறாராம்அதைக் கவர் செய்ய காமிராமேனுடன் வேகமாக வெளியில் புறப்பட்டேன்.

Tuesday, May 17, 2011

இன்னமும் போராளிகளே..



மௌனிக்கப்பட்ட ஆயுதங்களும் மௌனமாய் அழும் முன்னைநாள் பெண்போராளிகளும். (..நன்றி சாத்திரி -@தமிழ்மணம் )







இலங்கைத்தீவில் 30 ஆண்டுகால ஆயுதப்போர் வடகிழக்கு தமிழர்களிடம் ஏற்பட்ட மாற்றங்களில் முக்கியமான மிகப்பெரிய வரலாற்று மாற்றமாக தமிழ்பெண்களின் மாற்றமும்.அவர்கள் மீதான பார்வையும். இடம் பிடித்திருந்தது ; பகத்து வீட்டிற்கு போவதானாலும் பக்கத்தில் ஒரு துணையை அழைத்துக்கொண்டே போவதற்கு பழக்கப்பட்ட அல்லது பழக்கத்தினை திணிக்கப்ப்பட்ட தமிழ் பெண்கள.; அது மட்டுமல்லாது சம்பிரதாயம் அல்லது சமூக கட்டுப்பாடு என்கிற பெயரில் நடை உடை பழக்கவழக்கங்கள் என்று பெண்கள் மீது திணிக்கப்பட்டிருந்த அனைத்து விதிமுறைகளையும் உடைத்து தன்னந்தனியே இராணுவ உடைகளுடன் காடு மேடெங்கும் கைகளில் துப்பாக்கிகழுடன் திரிந்தார்கள் வாகனங்கள் ஓட்டினார்கள். இராணுவ முகாம்களினுள் புகுந்து வேவுபார்த்தார்கள். கடலிலும் தரையிலும் சமர்கள் செய்தார்கள். இப்படி எதிர்மறையானதொரு மாற்றத்தினை கொண்டிருந்தார்கள். சமூகத்தில் ஒரு ஆணை எதிர்த்து பெண் கதைத்தாலே அவளை அடங்காப்பிடாரி என்றும்.உடைகளில் மாற்றங்களை கொண்டிருந்தாலே அர்த்தங்கள் சொல்லமுடியாத பல பட்டங்களை அள்ளி வழங்கும் தமிழ் சமூகம் பின்னர் சமராடிய அதே பெண்களை அணைத்து ஆனந்தக்கூத்தாடி அவர்களை ஆயுதம் தரித்த பெண்தெய்வங்களான துர்க்கை காளிமாதா என்று போற்றி கொண்டாடியது.
பெண்கள் மீதான பார்வையே தனிமதிப்பாகிப்போனது.அவர்களின் வீரக்கதைகள் விதவிதமாகப் பேசப்பட்டது. ஆனால் ஆயுதங்கள் மொளனிக்கப்பட்டு ஆயுதப்போரும் முடிவிற்கு வந்தபின்னர். ஆயுதங்களற்ற அதே துர்(கா);கைகளும் காளிகளும் அதே சமூகத்தால் தெரு நாயினும் விடகேவலமாய் பாரக்கப்படுகிறார்கள். இப்பொழுதெல்லாம் அவர்கள் போற்றப்படுவதில்லை. கொண்டாடப்படுவதில்லை. எங்களை போற்றவேண்டாம். தூற்றாமல் இருந்தாலே போதும் என்று மனதினுள் அழுகின்றார்கள் முன்னைநாள் பெண்போராளிகள்.இறுதி யுத்தத்தின் போது சரணடைந்து விசாரணைகள் சித்திரவதைகள் மனஉழைச்சல்கள் என்று அத்தனையையும் தாண்டி விடுவிக்கப்பட்டு தங்கள் சொந்த வாழ்க்கைக்கு திரும்பிய பல நூறு பெண்களின் கதைகள் ஒரு கட்டுரை மூலமாக அத்தனையும் சொல்லிவிட முடியாது. இவர்கள் இன்று தமிழ் சமூகத்தால் ஒதுக்கபடுவதற்கான முக்கிய காரணங்களாக பாதிக்கப் பட்ட பெண்கள் கூறுவது முதன்மையானது. 1)சாதியம்(திருமணமானவர்கள்) 2) பிரதேசம் 3)யுத்தத்தில் அவர்கள் அடைந்தஅடைந்த ஊனம். 4)வறுமை என்று தரம் பிரிக்கலாம்.
1)சாதியம்...இங்கு அதிகமாகப் பாதிப்படைந்தவர்கள் நீண்டகாலம் போராளிகளாக இருந்து இயக்கத்திலேயே திருமணமாகி யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களே. புலிகள் அமைப்பின் எழுச்சிகாலகட்டங்களில் அமைப்பில் சாதிகளற்ற கலப்பு காதல் திருமணங்களே ஊக்கிவிக்கப்பட்டது. அது புலிகள் அமைப்பில் இருந்தவர்களிற்கு மட்டுமல்ல சாதாரணமான பொதுமக்களிலும் சாதி மாறி காதலித்தவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிற்கு ஓடிச்சென்று திருமணம் செய்து கொண்டனர்.இப்படி சாதி மாறி திருமணம் செய்தவர்கள் யுத்தத்தில் கணவர்களை பறி கொடுத்தபின்னர் தங்கள் குழந்தைகளுடன் வாழவழியற்று வருமானமும் இல்லாத நிலையில் கணவனின் உறவுகளாலும்; ஏற்றுக்கொள்ளப்படமல் பெண்ணின் உறவுகளாலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் தனியே தவிப்பது மட்டுமல்லாது சமூகத்து ஆண்களின் தவறான கண்ணோட்டங்களும் இவர்கள் மீதே அதிக அழுததத்தினை கொடுக்கின்றது இவர்களே அதிகம் பாதிக்கபட்டவர்களாகின்றனர்.
2)பிரதேசம்..இங்கு அதிகம் பாதிப்படைவது கிழக்கு மாகாண பெண்களே முகாம்களிலிருந்து வெளியே வந்த பெணகள் தங்கள் சொந்த ஊரிற்கு திரும்ப முடியாத நிலை அதற்கான காரணங்கள் அவர்களின் கிராமங்கள் இன்று சிங்கள குடியேற்றங்களாகி விட்டது .அல்லது அவர்களிற்கு உறவுகள் யாரும் இல்லை அல்லது தொடர்புகள் அறுந்து பலவருடங்களாகியிருக்கும். முக்கிய காரணமாக அவர்கள் போராளிகளாய் இருந்த காலத்தில் உயர்நிலை பதவிகளில் இருந்திருப்பார்கள்.அல்லது ஊரில் சிறு பிரச்சனைகளிற்காக யாரிற்காவது தண்டனைகள் வழங்கியிருப்பார்கள். இவர்கள் சொந்த ஊரிற்கு திரும்பி சாதாரண வாழ்வில் ஈடுபடும்பொழுது பாதிக்கப்பட்டவர்களாலேயோ அல்லது அவரிற்கு வேண்டதவர்களால் மீண்டும் காட்டிக்கொடுக்கப்பட்டு புலனாய்வாளர்களால் கைது செய்யப்படலாம் அல்லது உயிராபத்து ஏற்படலாமென நினைத்து வேறு பிரதேசங்களில் குடியேறியவர்கள். அப்படி வேறு பிரதேசங்களில் குடியேறியிருந்தாலும் மேலே சொன்ன அனைத்து பிரச்சனைகளுடன் பிரதேசவாதமும் அவர்களை ஒதுக்குகின்றது.
3) யுத்தகாலத்தில் ஊனமடைந்த போராளிகள் புலிகளின் காலத்தில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்ததோடு அவரவர்களின் திறைமைகளிக்கேற்ப இயலுமான வேலைத்திட்டங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய நிலையில் ஊனமடைந்த பெண்போராளிகளின் நிலை அவர்களது உறவுகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.அவர்களை தனியாக பராமரிக்க இயலாது அதே நேரம் சாதாணமாள பெண்களிற்கே திருமணம் செய்வதற்கு சீதனம் செலவுகள் என பணம் தேவைப்படும் இந்த நிலையில் ஊனமான பெண்ணை வைத்து என்ன செய்வது என்பது அவர்களது காரணங்களாகின்றது. அண்மையில் ஒரு முன்னைநாள் போராளிப் பெண்ணொருத்தி என்னுடன் தொலைபேசியில் கதைத்தபொழுது சொன்ன விடயங்கள்.அவள் யுத்தத்தில் இரண்டு கால்களையும் முழங்காலுடன் இழந்தவள்.பின்னர் அவளது குரல் வளத்தால் அவள் புலிகளின் குரல் வானொலியில் பணிபுரிந்தவள். யுத்தம் முடிவடைந்த பின்னர் தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகி அவனது வீட்டிற்கு சென்ற பொழுது தாய் தந்தை அவளை துரத்தி விட்டார்கள் தனக்கு யாரையும் தெரியாது எங்கேயும் போக முடியாதென வீட்டு வாசலில் அழுதபடி இருந்தவளை அவளது சகோதரன் மீதமிருந்த முழங்கால்களில் பிடித்து தரதரவென இழுத்துவந்து வீதியில் எறிந்துவிட்டு போய்விட்டானாம். பின்னர் அவளின் நண்பர்கள் மூலம் எம்முடன் தொடர்பினை ஏற்படுத்தியதில் அவளை பராமரிப்பு நிலையம் ஒன்றில் சேர்த்து அடிப்படை உதவிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது ஒரு உதாரணம்தான்.
4)வறுமை என்பது நான் முதலில் எழுதியிருக்கும் காரணங்களுடன் சேர்ந்தே வருகின்ற ஒரு விடயம்தான். யுத்தம் முடிவிற்கு வந்தபின்னர் காயங்களோ அற்ற திருமணமும் செய்திருக்காத பெண்கள் உடல் ரீதியிலான தாக்கம் குறைந்து காணப்பட்டாலும் உளரீதியான தாக்கங்கள் நிறையவே உள்ளது. புலிகள் அமைப்பில் பலவருடங்கள் இருந்துவிட்ட காரணத்தால் இவர்களது கல்வியை தொடராது இருந்தவர்கள். இன்றைய வேகமான வளர்ச்சிகண்ட உலகில் இவர்களது கல்வி அடிப்படைகளை வைத்து எந்த வேலையும் செய்ய முடியாத நிலைமை. திருமணம் என்று வரும்பொழுது புலிகள் அமைப்பில் இருந்தது ஒரு காரணத்தடையாக முன்னே நிற்கின்றது. அண்மையில் எனக்கு தெரிந்த ஒருவர் பிரான்சில் வசிப்பவர் தனது மகனிற்கு ஊரில் ஒரு நல்ல பெண்ணாக தேடுவதாக சொன்னார் நான் அவரிடம் எனக்கு தெரிந்த நிறையபெண்கள் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் இப்போ வெளியில் வந்து சரியாக சிரமப் படுகிறார்கள் வேணுமானால் விபரம் தருகிறேன் போய் பார்த்து விரும்பினால் திருமணத்தை நடத்து என்றேன்.உடனே அவர் பதறியவராக ஜயோ புலியிலை இருந்தவளா அதுகள் குடும்பத்துக்கு சரிவராது என்றார்.
இப்படி காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.ஆனால் ஒன்றை மட்டும் நாம் வெகு இலாவகமாய் மறந்து விட்டோம் அல்லது மறந்தது போல் நடிக்கிறோம் இவர்கள் போராட பேனது யாரிற்காக?? எம்சமூகத்திற்காகவும் எம்மினத்திற்காகவுமேஅதற்காக அவர்பட்ட சிரமங்கள் வலிகள் வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்கள் வெற்றிகளை கொண்டாடிய சமூகம் தோல்விகளை துரத்துவது ஏன். அன்று அவர்கள் கைகளில் ஆயுதங்களை கொடுத்து இன்னொரு இனத்துடன் போராட தள்ளிவிட்டோம். ஆனால் இன்று அவர்கள் ஆயுதங்களற்றவர்களாயும் தோற்று போனவர்களாயும் களைத்துப்போயிருந்தாலும் எமது சமூகச்சாக்கடைகளுடன் போராட தள்ளியிருக்கிறோம். எனவே அவர்கள் முன்னைநாள் பெண் போராளிகளல்ல.......... இன்னமும் போராளிகளே..







நன்றி தமிழ்மணம் & சாத்திரி