Saturday, August 28, 2021

MP / MLA Local area development scheme

 உங்கள் தொகுதி உங்கள் வேட்பாளர்

உங்கள் பணம்…
எங்கே போகிறது?!!

தகவல் அறியும் சட்ட்த்தின் கீழ் விசாரித்தால்
நம் சட்டசபை நாடளுமன்றம் மேல் கீழ் எல்லோரும் நாணயமும் தரையில் உருளும்!

நம் நாட்டில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஒவ்வொரு ஆண்டும் சற்றொப்ப ரூ 5 கோடி கொடுக்கப்படுகிறது.
(இவர்களின் மாதச்ச்சம்பளம், அலவன்ஸ், பயணப்படி, போன் சார்ஜ் சலூன் சார்ஜ் எல்லாம் தனி, அது அவர்களின் கடின உழைப்பிற்கானது. அதைப் பற்றிப் பேசக்கூடாது)
தமிழ் நாட்டில் ஒவ்வொரு சட்டசபை உறுப்பினரும் பெறும் தொகை ரூ 2..25 கோடியிலிருந்து ரூ. 3 கோடியாக
அதிமுக எடப்பாடி புண்ணியத்தில் உயர்த்தியாகிவிட்ட து. !
இவர்கள் பெறும் பணத்திற்கு
MLA – LOCAL AREA DEVELOPMENT SCHEME
ஓராண்டுக்கு இவ்வளவு தொகை என்றால்
இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளுக்கு
5 X 5 = 25 Crores for MP
5X 3 + 15 Crores for MLA

முட்டையிலும் பருத்தியிலும் சாராயத்திலும் ஊழலைக கண்டுப்பிடித்து தங்கள் பிரச்சார மேடைகளில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் நம் அரசியல்வாதிகள்
இதைப் பற்றி ஒரு கூட்டு உடன்படிக்கை வைத்திருக்கிறார்கள்.
"அதாவது நீ என்னைப் பற்றிப் பேசாதே. நானும் கண்டு கொள்ள மாட்டேன்” என்று!

நரசிம்மராவ் 2 கோடி அறிவித்தார்.
மன்மோகன்சிங் ரூ 5 கோடி அறிவித்து இந்திய ஜனநாயகத்தை சந்தோஷப்படுத்தினார்.!!

இவர்கள் வாங்குகிற பணத்தை என்ன செய்கிறார்கள்? ஒரே குடும்பத்தில் இரண்டு மூன்று பேர் இருக்கிறார்கள். அடேங்கப்ட்பாளர் ரூ 1 கோடி செலவு செய்து ஏன் தேர்தலில் போட்டியிட முன்வருகிறார்கள் ? 15 கோடி / 25 கோடி கிடைக்கும் னு தான்!.
இந்த தொகைக்கு கணக்கு காட்டுவார்களா நம்ம ஆட்கள்!
இது அவுங்க வீட்டுப் பணமில்லைய்யா
உங்களோட என்னோட பணம்.
நம்மோட பணம்.
நமக்கானது என்றாவது
புரிந்து கொள்வோம்.
இந்த லட்சணத்தில் எதொ ஒரு தண்ணித்தொட்டி அல்லது நூலகம் இப்படி எதாவது திறந்துவிட்டால் தங்கள் பெயரைப் பொறித்து என்னவோ தங்கள் கை காசிலிருந்து செலவு செய்து புண்ணியம் செய்த மாதிரி இவர்கள் செய்கிற அலப்பறை தாங்க முடியல.
இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல.


காலப்போக்கில் புதிய ஜன நாயகம் ஒரு முதலாளித்துவ சமூகத்தின் இன்னொரு முகமாக இருக்கும்னு சொல்வது உண்மைதான்.
கணக்குத் தெரிந்தவர்கள்
ஒட்டு மொத்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
எவ்வளவு வாங்கினார்கள்
என்று வாய்ப்பாடு போட்டு கூட்டிப் பெறுக்கி
வரும் தொகையை எனக்கும் சொல்லுங்கள்.!
பிகு: கொரொனாவைக் காரணம் காட்டி இந்த
தொகையை நிறுத்தி வைத்திருக்கிறது அரசு

1

No comments:

Post a Comment