Thursday, August 26, 2021

குமுதம் - ஏர் இண்டியா விருதின் கதை

 

பலருக்கும் மறந்திருக்கும்.. ஒரு விருது அறிவிக்கப்பட்ட து.

ஆனால் அந்த விருதாளருக்கு அந்த விருது அவர்

எழுத்துகளுக்கான அடையாளமாக மட்டுமே இருந் த து.

விருது அறிவித்தவர்கள் “இந்த விருதாளர் ஏன் விருதின் பயன்பாடை அனுபவிக்கவில்லை என்று யோசிக்கவும் இல்லை,
அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவும் இல்லை!

விருதின் கதை :
1995 ஆண்டில் குமுதம் இதழும் ஏர் இந்தியா நிறுவனமும்
சேர்ந்து சிறந்த நாவல், குறு நாவல்,
சிறுகதை, கவிதைக்கான போட்டி அறிவித்தார்கள்.

நாவலுக்கு நியூயார்க் பயணம்
குறு நாவலுக்கு லண்டன் பயணம்
சிறுகதைக்கு சிங்கப்பூர் பயணம்
கவிதைக்கு கோலாலம்பூர் பயணம்..
இதில் கவிதை தேர்வில் என்னவெல்லாம் நடந்த து
என்பதை இம்மாத காக்கைச்சிறகினிலே இதழில் வேணுமாதவன்
“எழுத்து, சொல், பொருள் “ என்ற கட்டுரையில் எழுதி இருக்கிறார்.

முதல் பரிசு பெற்ற கவிதை ஆறாவயல் பெரி ய்யா எழுதிய
“தாராவிச் சித்திரம்” கவிதை.
இக்கவிதைக்கு முதல் பரிசு கொடுத்தே ஆகவேண்டும்
என்று போராடியவர்களில் முக்கியமானவர் தேர்வுக்குழுவில்
இருந்த கவிஞர் இன் குலாப் அவர்கள்.
ஆறாவயல் பெரிய ய்யாவின் “தாராவிச்சித்திரம்”கவிதை நூலுக்கு
எழுதிய அறிமுகவுரையில் இதைப் பற்றி விளக்கமாக
எழுதியிருக்கிறார் இன் குலாப் அவர்கள்.
இக்கவிதையை தேர்வு செய்த கவிஞர் இன் குலாப் அவர்கள்
முதன்முதலாக மும்பை வந்திருந்தப்போது –
(எழுத்தாளர் மன்ற துவக்க விழாவுக்கு ) அவர் பார்க்கவிரும்பிய இடம்
“தாராவி “
ஆறாவயல் எழுதிய தாராவியைப் பார்க்க வேண்டும் என்றார்,
கவிதைக்கு விருது பெற்ற ஆறாவயல் பெரியய்யா
கோலால்ம்பூர் செல்லவே இல்லை! அவr ஏன் செல்லவில்லை என்று
ஏர் இந்தியாவோ குமுதமோ விசாரிக்கவோ
கண்டு கொள்ளவோ இல்லை..!
ஆறாவயல் இதைப் பற்றி எனக்கு மின்னஞ்சலில் எழுதி இருக்கும்
பகுதியிலிருந்து ….

என்னிடம் பாஸ்போர்ட் இல்லை!
பாஸ்போர்ட் எடுப்பதற்கு குறைந்தது 500 ரூபாய் தேவைப்பட்டது!
தவிர, சுற்றுலாப் பயணி 500 டாலர்களுடன் செல்லவேண்டும்
என்பது இன்னொரு விதி. இதனை மனதில் கொண்டிருந்த நான்
"பரிசாகக் கிடைத்த சுற்றுலாப் பயணத்தை என்னால்
மேற்கொள்ள இயலவில்லை இந்த வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது. அது போதும்! " என்று பேட்டி கொடுத்திருந்தேன்.
இதை அறிந்த எங்கள் ஆசிரியர் "பாஸ்போர்ட்டை நான் எடுத்துத் தருகிறேன். நீங்கள் கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் போய் வாருங்கள்! உங்கள் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடுங்கள்! "ஊக்கப் படுத்தினார்
கணக்கு மேலாளரை அழைத்தார்
" ஐயாவுக்கு உடனே பாஸ்போர்ட்டுக்கு ஏற்பாடு செய்யுங்கள்! "என்றார்
தாராவிச் சித்திரம் கவிதையை நக்கீரனில் வெளியிட்டு, தானும் வாழ்த்தி, வாசகர்களின் வாழ்த்தையும் பெறவைத்தார் ஆசிரியர்!
மூன்றாம் நாள்.. எனக்கான, பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து
, என் கையொப்பங்கனையும் பெற்ற மேலாளர் "ம்....500 ரூபாயை கொடுங்கள்! "கேட்டார். குறுகிப் போனேன்
"ஒரு அஞ்சு நிமிஷம்! "கூறிவிட்டு என் இருக்கைக்குத் திரும்பினேன்!
யோசித்தேன்.
இந்த 500 ரூபாய்க்காக மீண்டும் முதலாளி முன்னால்
போய் நிற்க வேண்டுமா? அப்புறம் ஒரு 500 டாலருக்காக
யார்யார் கால்களில் விழ வேண்டியிருக்குமோ?
ஈதொன்றும் அடிப்படைத் தேவையல்லவே!
ஆடம்பரம் தானே! வேண்டாமே!
ஆமாம்... வேண்டாம்! "இந்த முடிவுக்கு வர எனக்கு மூன்று நிமிடங்கள் போதுமானதாக இருந்தது.
மீண்டும் மேலாளர் மேஜை முன்சென்றேன்
"ஸாரி சார்! வெளிநாடு போவதாக இல்லை!
எனக்கு பாஸ்போர்ட் அவசியமில்லை!
அதைத் தாங்க! "பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வாங்கினேன். கிழித்தபடியே என் இருக்கைக்கு திரும்பினேன்!
குப்பைக் கூடையில் போட்டேன்
மனசு லேசானது. எனக்கான வேலைகளைப் பார்க்கத் தொடங்கினேன்!”
கோலாலம்பூர் செல்லவிட்டால் என்ன?
இன்றும் உங்கள் “தாராவிச்சித்திரம்” எங்களுக்கு
எங்கள் குடிசையின் கவிதைகளுக்கு
உயிரூட்டிக் கொண்டிருக்கிறது.

#குமுதம்_ஏர்இண்டியா_விருது

#தாராவி_எழுத்தாளர்கள்_புதியமாதவி

No comments:

Post a Comment