Sunday, February 28, 2021

Ever green books

 கல்கியின் பொன்னியின் செல்வன் சலுகைவிலையில் கிடைத்த தாக சொன்னார் அந்தப் பெண். அதனால் வாங்கிவந்ததாகவும் சொன்னார். 3 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அவர் இன்னும் அப்புத்தகத்தைப் பிரித்துப் பார்க்கவில்லை. இப்படியும் இருக்கிறார்கள் புத்தகப்பிரியர்கள்! பாவம்.. பொன்னியின் செல்வன். 

கல்கியை வாசிக்க வேண்டும் என்றால் பொன்.செ. பக்க அளவு பயமுறுத்தலாம்.. அதனால் சிவகாமியின் சபதம் வாங்குவது நல்லது.. 

சிறுகதைை என்று வந்துவிட்டால் புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, கு.பா.ரா , லா..ச.ரா..எப்போதும் வாசிக்கலாம். 

மீசைை என்பது மயிறு.. ஆதவன் தீட்சண்யா.. ரொம்பவும் வித்தியாசமானது. 

ஜெயமோகன் கொரொனா காலத்தில் எழுதிய சிறுகதைகள் புத்தகமாக வந்துவிட்டால் வாங்கிவிடலாம். 

யமுனாா ராஜேந்திரனின் மொழியாக்க கவிதைகளும் வாசிப்பின் புதிய வாசலைத் திறக்கும். 

(ஆ.தீ, ஜெ.மோ, ய.ரா… அடுத்தடுத்து எழுதியதற்கு எந்தக் காரணமும் இல்ல. அப்படி வந்திடுச்சி…ப்ளீஸ் நம்புங்க) 

தமிழ்் ஸ்டுடியோ இதழ்கள் நவீன சினிமாவைத் தேடும் வாசகனை ஏமாற்றாது. 

 “ உயிர் எழுத்து “ இதழ் மீண்டும் ஆரம்பித்திருப்பதாக சுதிர் செந்திலின் முக நூல் பக்கம் சொல்கிறது. தமிழ் இதழ்களில் உயிர் எழுத்து வரவேற்கப்பட வேண்டியதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. (உயிர் எழுத்து பழைய இதழ்கள் மொத்தமாக தோழர் மதி கண்ணன் இல்லத்தில் தங்கி இருக்கும் போது வாசித்தேன்.) 

கொஞ்சம்் தத்துவ விசாரணையும் தேடலும் இருப்பவர்கள் “மிர்தாதின் புத்தகம்” – மிகெய்ல் நைமி எழுதியது. “இதயத்தால் வாசிக்க வேண்டிய புத்தகம்” என்று ஓஷோ சொல்வது முழுக்க உண்மை. PDF கிடைக்கிறது என்றாலும் கூட புத்தகமாக நம்முடம் மிர்தாத் பயணிக்கும் அனுபவம் இனிது. 

மொழியாக்க நாவலில் இதிகாசங்களை விரும்பி வாசிப்பவர்களுக்கு எப்போதுமே “பருவம்” நாவல் தாம் . கன்னட த்தில் பைரப்பா எழுதியது. பாவண்ணன் தமிழாக்கம். 

இன்னொருபுதினம் “அக்னி நதி” உருது மொழியில் குர் அதுல் ஜன் ஹைதர் எழுதியது. தமிழாக்கம் செளரி. . பவுத்தம். அத்வைதம் துவைதம், சூஃபி பவுத்தம் சமூகத்தில் பரவிய காலத்தின் கதையாக விரிகிறது. இப்படி எல்லாம் எழுதமுடியுமா என்று வாசித்துவிட்டு நான் பிரமித்த நாவல். 

விமர்சனக்கட்டுரையில்் ராஜ்கெளதமன் எழுதிய “சுந்தர ராமசாமி கருத்தும் கலையும்” . ஆனால் சுந்தர ராமசாமியை தலையில் வைத்துக் கொண்டாடும் வாசகனுக்கு இப்புத்தகம் அவ்வளவு உவப்பானதாக இருக்காது. (இன்றைக்கு இவ்வளவுதான் நினைவில் வந்த்துச்சு.. தொடரலாம்) 

 #chennaibookfair2021 

#MyReadings_puthiyamaadhavi

No comments:

Post a Comment