Thursday, February 18, 2021

ஆசீவகமும் தமிழர் மெய்யியலும்

 அறிவுசார் சமூகமாய் ஆசீவகம் 



- நம் கல்வி நிலையங்கள் சமூகவியல் ஆய்வுகள் மதச் சார்பான பரப்புரைகள் அவை சார்ந்த வரலாறுகள் இலக்கியச் சான்றுகள் அனைத்திலும் சமணமும் பெளத்தமும் சைவமும் வைணவமும் வைதீக மரபும் கற்பிக்கப்படுகின்றன. இந்த மதங்களின் வழிப்பாடுகள் கோவில்கள் சடங்கு சம்பிரதாயங்கள் தொடர்ந்து தலைமுறைத் தலைமுறையாக நம் வாழ்க்கையின் பழக்க வழக்கங்களில் காட்சிகளாக விரிகின்றன. 

வாசல் கதவுகளில் செதுக்கப்பட்டிருக்கும் கஜலட்சுமி உருவமோ திருமாலின் மனைவி இலட்சுமி தேவியாகவே காட்சி அளிக்கிறாள். சித்தார்த்தன் அரண்மனை வாழ்க்கையைத் துறந்து புத்தனாகி பெளத்தம் பரப்பினான் என்றும் வட இந்திய பேரரசர் அசோகன் காலத்தில் பவுத்தம் தென்னிந்தியாவையும் தாண்டி உலக நாடுகளுக்குப் பரவியது என்றெல்லாம் படிக்கிறோம். இந்த வரலாற்றில் துறவறம் அஹிம்சை ஆகிய கருத்துருவாக்கங்கள் திடீரென உருவாகி வளர்ந்திருக்க முடியாது என்ற புரிதலை விலக்கி வைக்கிறோம்.

 சித்தார்த்தன் திடீரென இல்லறம் துறந்ததிருக்க முடியுமா? . 

அதுு என்ன துறவு வாழ்க்கை ?! சித்தார்த்தனுக்கு முன்பே இல்லறம் துறந்து சமூக வெளிக்கு வந்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதையும் அப்படி ஒரு வெளி நடைமுறையில் சமூகத்தில் இருந்ததால்தான் சித்தார்த்தன் அந்த வழியைப் பின்பற்ற ஏதுவாக இருந்தது என்ற புரிதலை இருட்டடிப்பு செய்து விடுகிறது நம் கேள்வி பதில் பாடசாலைகள். 

சமணண பவுத்த மத நூல்கள் , காப்பியங்களைத் தமிழில் பட்டியலிடும் போது .. இப்படியாக வடக்கே இருந்து ஒரு கருத்துருவாக்கம் தமிழ் கூறு நல்லுகம் வந்தடைந்து இங்கே பெரும் வளர்ச்சி பெற்று மக்களின் வாழ்க்கையில் 14 ஆம் நூற்றாண்டு வரை உயிர்ப்புடன் இருந்த து என்று சொல்லும் நாம் … இந்த கருத்துருவாக்கங்கள் தமிழ் மண்ணுக்கு வருவதற்கு முன்.. இந்த மண்ணில் என்ன இருந்த து..? என்ன நம்பிக்கை இருந்த து? இவர்களின் கருத்து தளம், சமூகவியல் கருத்தாக்கங்கள் என்னவாக இருந்தன என்பதைப் பற்றி யோசிக்கவே இல்லை! 


இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சில நம்பிக்கைகள் சில கருத்துருவாக்க சமூகச் சிந்தனைகள் இருந்திருக்கும் என்ற கேள்விக்கான பதிலைத் தேடும் போது.. அத்தேடல் பெருவெளியாகி.. பிரபஞ்சமாக விரிகிறது. 


இயற்கை, அறிவியல், அணுக்கோட்பாடு என்று ஒவ்வொரு பக்கமாக விரிந்து பிரபஞ்ச வெளி திறக்கிறது. இவை இட்டுக்கட்டி சொல்லப்படும் கதைகள் அல்ல, நம் புனைவுகளோ புராணங்களோ அல்ல என்பதற்கு சாட்சியாக இருக்கிறது பரிபாடலின் வரிகள்…


 "கருவளர் வானத் திசையில் தோன்றி உருவறி வாரா ஒன்றன் ஊழியும் உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும் செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு தன்பெயல் தலைஇய ஊழியும் அவையிற் நுண்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு மீண்டும் பீடுயர் பீண்டி அவற்றிற்கும் உள்ளீடாகிய இருநிலத்து ஊழியும் (பரிபாடல் 2:5-12) 

“பாழ்பட்டுப்போன வெட்டவெளியில், அணு கரு நிலையில் இருந்தபோது ஏற்பட்ட பெரிய வெடிப்பின் காரணமாக வெப்பம் தோன்றியது. பிறகு காற்றும் தோன்றியது. வெப்பத்தின் மீது காற்று மோத மோதத் தீயாகியது. தீ எரிந்து எரிந்து அணையத் தொடங்கியபோது ஆவிப்படலம் மேகமாகப் படிந்து, அது குளிர்ந்து மழையாகப் பெய்தது” என்கிறது பரிபாடல். 


இந்தத உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்பதை அறிந்தவர்கள் சங்க காலத் தமிழர்கள். 

மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பூதத்தியற்கை “ என்று தீர்மானமாகச் சொல்கிறது புற நானூறு. 

ஆனால் உலகத்தில் தோன்றிய மதங்கள் பெருங்கடவுள் வழிபாடுகள் அனைத்தும் கடவுள் உலகத்தைப் படைத்தார் கடவுள் மரம் செடி கொடிகளைப் படைத்தார் கடவுள் மனிதனைப் படைத்தார் என்று மட்டுமே அவரவர் கற்பனைக்கு ஏற்ப எழுதி வைத்திருக்கின்றன. மதங்களின் ஆட்சி அதிகாரம் அரசு அதிகாரத்திற்கு மிகவும் நெருக்கமாகும் போதும் சில நேரங்களில் ஆட்சி அதிகாரத் தைத் தீர்மானிக்கும் சக்திகளாக மத பீடங்கள் மாறும் போது… கடவுள்தான் உலகத்தைப் படைத்தார், கடவுள் தான் மனிதனைப் படைத்தார் என்ற கருத்துக்கு எதிரான சிந்தனைகள் ஒட்டு மொத்தமாக துடைத்து எடுக்கப்படுகின்றன. மக்கள் வாழ்க்கையில் அவை வேறு ஒன்றாக மாறுகின்றன. காலப்போக்கில் மாற்றங்களின் காரணம் மறைந்துவிடுகிறது. அதன் எச்சங்கள் மட்டும் நம் வாசலில் கஜலட்சுமியாக காட்சி அளிக்கின்றன.. 

பரிபாடல்் பேசும் உலகம் பற்றிய சிந்தனைக்களம் தான் ஆசீவகதின் ஒரு பக்கம். ஆனால் இந்தப் பக்கம் அறிவுசார் அறிவியல் உலகம் இன்று ஏற்றுக் கொண்டிருக்கும் கருத்து. According to the Big Bang theory, the Universe was once in an extremely hot and dense state which expanded rapidly. This rapid expansion caused the Universe to cool and resulted in its present continuously expanding state’ (www.wikipedia.com) ‘The universe began over 15,000 million years ago with an unimaginably violent explosion, called the Big Bang. The Big Bang created a huge fireball, which cooled and formed tiny particles. Everything in the universe is made of these tiny particles, called matter’ (The USBORNE – Encyclopedia of World History)

2 comments: