Thursday, February 13, 2020

காதலர்கள் மாறிவிட்டார்கள்

காதலர்கள் மாறிவிட்டார்கள்!
காதல் மட்டும் மாறவில்லை???!
காதல் திருமணத்திற்கானது
 காதலித்தவர்களின் விருப்பமும் நோக்கமும்
 இல்லற வாழ்வில் இணைவது என்பது... 
எம் தலைமுறையின் நம்பிக்கை.
 காதல் ஒருமுறை தான் வரும், காதல் போயின்
 சாதல் சாதல் , காதல் புனிதமானது.. இத்தியாதி 
நம்பிக்கைகளை அன்றைய சினிமாக்களும்
 இலக்கிய உலகமும் உருவாக்கி வைத்திருந்தன.

களவொழுக்கத்தை ஏற்றுக்கொண்ட தமிழ்ச்சமூகம் 
பொய்யும் வழுவும் வந்தப் பின்னர் ஐயர் யாத்தனர்
 கரணம் என்ப என்று திருமண உறவுக்கான காரணத்தை
 வெளிப்படையாக சொன்ன தமிழ்ச்சமூகம் 
ஒன்றைமட்டும் சொல்வதற்கு இடம் கொடுக்கவில்லை
. களவொழுக்கத்தில் பொய் சொல்லி ஏமாற்றியவர்கள்
 இருந்திருக்கிறார்கள் என்று சொல்லும் தமிழ்
 இலக்கியப் பரப்பில் அந்த ஏமாற்றத்தில்
 பாதிக்கப்பட்ட தலைவன் தலைவி வாழ் நிலை
 கவிதையாக்கப்படவில்லை.சங்க இலக்கியம் பேசிய
 பிரிவு என்பது நிரந்தரமாகப் பிரிந்த காதலர்கள் பற்றியதல்ல.


இதை எல்லாம் எழுதக் கூடாது..
 எழுதினாலும் அதைப் பற்றி பேசக்கூடாது. என்று 
அன்றும் கட்டுப்பாடுகள் இருந்திருக்கலாம்.
இன்றைய காதலர்கள் ரொம்பவும் தெளிவாக இருக்கிறார்கள். 
அவர்கள் காதலை மட்டும் காதலிக்கிறார்கள்.
 காதலனை அல்லது காதலியை மாற்றிக் கொள்வதிலோ அல்லது ஒத்துக்கொள்ளவில்லை என்று விலகிக் கொள்வதிலோ 
அவர்களுக்கு பிரச்சனை இல்லை. 
வாழ்வின் இந்த யதார்த்த நிலையை இன்றைய தலைமுறை 
ரொம்பவும் எளிதாகக் கையாளுகிறது.

இன்று வணிக வளாகத்திற்குப் போனால்..
இளம் ஜோடிகளைப் பார்த்து ரசிப்பதுண்டு.
இவர்களில் 0.00000000003 பேர் கூட காதலிப்பது
இல்லறத்தில் இணைவதற்கு என்ற கருத்து 
கொண்டவர்கள் இல்லை!
பிறகு ஏன் காதலிக்கிறார்கள் என்றால் 
காதலிப்பதும் காதலிக்கப்படுவதுமாக
 காதலை மட்டும் கொண்டாடுகிறார்கள்...
இன்னும் ஒரு படி மேலே போய் ..
 இல்லற வாழ்க்கையை எம் தலைமுறை 
கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஒரு 
ப்ராஜெக்ட் லெவலில் ஒப்பந்தங்களுடன் தொடர்கிறார்கள்.
காதலர்கள் மாறிவிட்டார்கள்.
காதல் மட்டும் மாறவில்லை.

1 comment: