Wednesday, July 31, 2019

எந்தப் பெண்ணுக்கு 3 நாட்கள் விடுமுறை??


Imageஇதைப் பேசி இருப்பவர் என் அன்புக்கும்
 மதிப்புக்கும் உரியரவிக்குமார் எம்.பி. 
(திமுக எம். பி என்று சொல்லவா அல்லது வி.சி. எம்.பி
என்று சொல்லவா.. விடுங்கள். எப்படியானாலும்
 அவர் தமிழகத்தின் எம்.பி. அதுபோதும்!)

இவர் எந்தப் பெண்களுக்காக
 இதைப் பேசி இருப்பார் என்று
யோசித்து யோசித்து இந்த மழை நேரத்திலும்
 மண்டைக்காய்கிறது!

வர்க்க ரீதியாக பேசி இருந்தாலும் சரி,
சாதி ரீதியாக பேசி இருந்தாலும் சரி..
இவர் எந்தப் பெண்களுக்காக பேசி இருக்கிறார்?

வரப்போரத்தில் பிரசவித்து
கதிர் அறுக்கும் அருவாளால்
 தொப்புள் குடியை அரிந்த அவள்
ஓடையிலே கால்கழுவி
ஓடிக்கொண்டிருக்கிறாள்..
அவளுக்காகவா..  பேசி இருக்கிறார்???
இல்லை…
பட்டுப்போன்ற சானிடெரி நாப்கினைத்
தொட்டுப்பார்க்கும் ஆசையில்
அம்மாவின் கிழிந்தப் புடவை
தொடைகளில் அறுக்க
குனிந்து வளைந்து
மாடிப் படிகளில் ஏறி இறங்கி
பத்துப்பாத்திரம் கழுவி
வீடு வீடாக ஓடிக்கொண்டிருக்கும்
அவளுக்காக பேசி இருக்கிறாரா..?
இந்த 3 நாட்கள் யாருக்காக?

யார் யாருக்கு அறிவித்த 3 நாட்கள்?
யார் வீட்டில் இந்த 3 நாட்கள்?
யாருக்காக பேசுகிறோம் இந்த 3 நாட்களை????
ரவிக்குமார்.. யாருக்காக பேசி இருப்பார்
அந்த 3 நாட்கள்  விடுப்…..பை…..

1 comment:

  1. ரவிக்குமார் எம்பியின் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் 3 நாட்கள் விடுப்பு என்பதே தமிழகத்தில் நடைபெறும் ஏமாற்று அரசியலை தெரிவிக்கிறது.

    ReplyDelete