Monday, May 27, 2019

ராகுல் அபிமன்யு ஆக்கப்பட்டாரா?

ராகுல்காந்தி தனித்து விடப்பட்டாரா..?!
தங்களின் வாரிசுகளுக்கு சீட் கொடுக்காவிட்டால் 
கட்சியை விட்டு விலகிவிடுவேன் என்று மிரட்டிய
பெரிசுகளின் அராஜகம்... 
வாரிசுக்கு சீட்டு வாங்குவதில் காட்டிய 
பிடிவாதத்தில் 10% கூட மோதியைத் தோற்கடிப்பதில் 
காட்டவில்லை! இந்தப் பழம் தின்னு கொட்டை முழுங்கிய
 பெரிய மண்டைகள்.. 

தமிழ் நாடு ப. சிதம்பரம்,  மத்திய பிரதேச முதல் மந்திரி கமல் நாத், 
ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் ஆகியோரின்
பெயர்களை வெளிப்படையாக சொல்லி காங்கிரசு கமிட்டியில் 
பேசி இருக்கிறார்கள். 

இதைத் தோற்றுப்போனவரின் புலம்பலாக மட்டுமே
 எடுத்துக் கொண்டு கடந்து சென்றுவிட முடியவில்லை. 
காரணம் அவர் சொல்வதில் இருக்கும் 
உண்மையின் கொதி நிலை..

ராகுல்காந்தியும் காங்கிரசும் பெற்றிருக்கும் 
சொற்பமான தொகுதிகளின் வெற்றிகள் கூட
காங்கிரசின் வெற்றி அல்ல, 
அந்தந்த மா நில கட்சிகளின் தலைவர்களுக்கு 
இத்தேர்தலில் இருந்த செல்வாக்கும் 
மா நில கட்சியினரின் உழைப்பும் மட்டும் தான் காரணம்...
இவ்வளவும் செய்துவிட்டு...
I stand with Rahul gandhi " என்று
என்ன டுவிட்ட வேண்டி இருக்கிறது.. !

No comments:

Post a Comment