Saturday, September 29, 2018

தூய்மைவாதமும் நம் தலைவர்களும்.



தூய்மைவாதமும் நம் தலைவர்களும்.



எனக்கென்னவோ இந்திய சமூகம் இக்கருத்தில்
இலட்சியவாதிகளாக இல்லாமல் நடைமுறைவாதிகளாக
இருப்பதாகவே நினைக்கிறேன்., அதிலும் குறிப்பாக
தனிமனித தூய்மைவாதத்தில்.
தனி மனித ஒழுக்கம் என்பது போற்றுதலுக்குரியது தான்.
ஒழுக்கத்தின் வரையறைகளுக்கு அவரவர் பார்வையில்
எல்லைக்கோடுகள் வித்தியாசப்படுகின்றன.
ஒழுக்கவிதிகளை மீறுபவர்களுக்கு ஆதரவாக
பேசும்போது அத்தகைய மீறலின் காரணமாக
பாதிக்கப்படும் தனி மனிதர்களின் மன உளைச்சல்,
குடும்பம் என்ற நிறுவனத்தின் ஒப்பந்தங்கள்
உடையும் போது ஏற்படும் சிதைவுகளால்
சின்னாபின்னமாகும் எதிர்காலம், பொருளாதர
பிரச்சனைகள் , குழந்தைகளின் எதிர்காலம்
இப்படியான பல கோணங்களில் பார்த்தாக
வேண்டி இருக்கிறது.
அதிலும் குறிப்பாக இந்திய சமூகத்தில் பிரபலமான
தலைவர்கள் தனிமனித ஒழுக்கத்திலும் தூய்மைவாதத்திலும்
எந்தளவுக்கு தேர்ச்சி அடைவார்கள் என்பதை
யோசித்துப் பார்க்கிறேன்.
நேரு- மவுண்ட் பேட்டன் மனைவி
எல்லோரும் அறிந்த ரகசியமில்லாத ரகசியம் தானே!
“நான் திருமணமாகாதவன், ஆனால் பிரம்மச்சாரி இல்லை!”
என்று சொன்ன வாஜ்பாய்..
இந்த வரிசை நடுவண் அரசுடன் நிற்காது.
மா நில அரசுப்பட்டியலுக்கு வரும் போது
பல கிளைகளாக பிரிந்து மெகா தொடராகும்!
ஆனால் நம் அரசியல் கட்சிகளின் சில எழுதாத
ஒப்பந்தங்களின் படி இவை எதுவும் பொதுமேடையில்
பேசப்படுவதில்லை. காரணம் கண்ணாடிக் கூண்டுக்குள்
நின்று கொண்டு கல்லெறிவது பற்றி நன்கு அறிந்தவர்கள்
நம் அரசியல் கட்சி தலைவர்கள்.
அதுமட்டுமல்ல, நம் பொதுஜன உளவியல் இவற்றை
தலைமைத்துவத்திற்கான அளவுகோலாக எடுத்துக்கொள்வதில்லை
என்பதும் ஒரு காரணம். 
“We don’t expect politicians to be good people. 
We don’t need them to be good people. 
What we still need is for them to be good representatives,” 
voters are viewing personal transgressions far less 
seriously than abuses of power.
says Michael G. Miller, a political science professor 
at the University of Illinois !
மைக்கல் ஜி மில்லர் சொன்ன இந்த வரையறையின் ஒரு
பாதி தான் சரி. இன்னொரு பாதியான அதிகார துஷ்பிரயோகம்
பற்றிய கருத்து நம்ம அரசியல் தலைவர்களுக்கு
ஒத்துவருமா? 
இப்படியாக எல்லா வரையறைகளையும் தாண்டி
மீண்டும் மீண்டும் நாற்காலிகள் இந்தத் தலைவர்களை
எப்படி கொண்டாடுகின்றன என்பது தான்
எந்த அரசியல் ஆய்வாளருக்கும் பிடிபடாத
பரம ரகசியமாக ..

No comments:

Post a Comment