Sunday, September 23, 2018

பாவண்ணன்+பருவம்= மும்பை ஃபீவர் …






எங்கள் வாசிப்பு மண்டலத்தில் பருவம் காய்ச்சல் வந்தது.
பைரப்பாவின் பருவம் நாவலை சாகித்திய அகதெமிக்காக
எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்.
இந்தக் காய்ச்சல் பெங்களூரிலிருந்து மும்பைக்குப் பரவியது.
இந்தக் குளிர்காய்ச்சலை மும்பைக்கு பரப்பியது
சாட்சாத் இந்த லூசு தான்.. 

பெங்களூர் தமிழ்ச்சங்க நிகழ்வில் சிறப்புரை ஆற்ற
பெங்களூர் சென்றிருந்தேன். அதுவும் தந்தை பெரியார்
அறக்கட்டளை சொற்பொழிவு.. அப்போது இரு தினங்கள்
சாருஶ்ரீ இல்லத்தில் தங்கி இருந்தேன். இரவு தூங்கும் போது
சாரு மெதுவாக பருவம் பற்றி பேசினார்அப்போதே
என் கண்கள் அங்குமிங்கும் அலைய ஆரம்பித்துவிட்டன.
அவர்.. மும்பை போகும் போது தர்றேண்டி..
இப்ப தூங்கு என்று என்னை சமாதானப்படுத்திவிட்டார்.
மும்பைக்கு டிரெயினில் உட்கார்ந்தவுடன் பருவம்
விழித்துக் கொண்டது. இரவு முழுவதும் ஏசி கோச்சில்
பருவம் குளிரில் வெடவெடத்துப்போனேன். பேயடிச்சமாதிரி
இறங்கியவள் குளிக்காமல் சாப்பிடாமல் ரூமில் போய் கதவை
அடைத்துக் கொண்டேன். பருவம் மீண்டும் என் அருகில்
அதற்குள்ளாக சாருவின் போன்..
தெரியுமே.. டிரெயினிலேயே திறந்திருப்பேனு
அடியே.. புக்கை வாசிக்கறப்போ நன்னா சாய்ந்து
உட்கார்ந்துக்கோ.. பக்கத்தில் தண்ணீர், மிக்சர்,
முடிஞ்சா இரண்டு பழம் .. எதாவது வச்சுக்கோ..
அப்புறம் மறக்காம கண்ணாடி போட்டுண்டு வாசி.
இன்னொரு டிப்ஸ்.. மடியில ஒரு தலையணையை
வச்சிண்டு வாசி.. புக்கு கீழை விழுந்தா.. ..
(சாருவுக்கு கனமான பருவம் என் கைதவறி விழுந்து
காயம் பட்டுவிடக் கூடாது என்ற பயம் தான்..!)
அப்புறம் அடிக்கடி போன் வேற.. இப்போ எது வரைக்கும்
வந்திருக்கே.. பீஷ்மர் என்ன பண்றார்..?
திரெளபதி சொன்னதைப் பார்த்தியோ..!”
போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு பருவத்தில்
நான் கரைந்துப் போனேன்
1000 பக்கங்களுக்கும் அதிகமான கனமான
பக்க அளவில் மட்டுமல்ல.. எழுத்திலும் கனமான
பருவம். பைரப்பாவை தமிழிலுக்குத் தந்தது மூலம்
பாவண்ணன் எங்கள் அனைவருக்கும் ரொம்பவும்
வேண்டியவராகிப் போனார்
இதைப் பாவண்ணனுன் அறிவார்.

இப்படியாக பருவம் நான் வாசித்து எனக்குப் பின்
எங்கள் வட்டத்தில் கே ஆர் மணி, மதியழகன் சுப்பையா.
அக்னிபுத்திரன் என்று கைமாறிக்கொண்டே இருந்தது.
இறுதியில் சாருவுக்கு அவர் பருவம் திரும்பவே இல்லை.
யாரோ வசமாக திருடிக் கொண்டு பருவத்தை தன்
வசமாக்கிக் கொண்டது பெரிய புத்தகத்திருட்டு
கதை.. 

இந்தக் காய்ச்சல் வந்தததால் பருவம் காய்ச்சல் தீர
சந்தித்து பருவம் பற்றி மட்டுமே  பேசிப் பேசி.. 
ம்கூம் அப்படி எல்லாம் பருவம் எங்களை விட்டுவிடுவதாக இல்லை.
காய்ச்சல் முத்திப்போய் வேறு வழியின்றி 
ஒருவழியாக பாவண்ணனை மும்பைக்கே அழைத்தோம்..!
பருவம் பற்றி பேசுவதற்குத்தான்!!!!
அவரும் வந்தார். பாவண்ணன் மிகச்சிறந்த சிறுகதைகளை
எழுதி இருக்கிறார். அதோடு அவர் மொழிபெயர்த்தும் இருக்கிறார்
என்ற ஓர்மை எங்களுக்கு கொஞ்சம் லேட்டாகவே ஏற்பட்டது.
பாவண்ணன் புத்தகங்களை அனைத்தையும் வரவழைத்து
பிரித்துக்கொண்டு வாசித்து மேய்ந்து அவரை வரவேற்க
தயாரானோம்.. அவருக்கு எங்கள் பருவம் காய்ச்சல் 
சாருஶ்ரீ மூலமாக ஏற்கனவே தெரியவந்திருந்தது.
அவருக்காக நாங்கள் நவி மும்பை தமிழ்ச்சங்கத்தில்
கூட்டம் ஏற்பாடு..

என்ன செய்தோம் தெரியுமா..
பருவம் நாவலின் கடைசிக் காட்சி..
அஸ்தினாபுரத்தின் அரண்மனையை நோக்கி
குருஷேத்திரத்தில் கணவனை இழந்தப் பெண்கள்
தலைவிரிக்கோலமாக வரும் காட்சி..
குருசேத்திரத்தில் மரணதேவதையின்
நடனம் பின்னணியில் ..
கதைக் காட்சிக்கு நாடகம் வடிவம் கொடுத்தவர்
இளவல் மதியழகன் சுப்பையா..
நாடகக்கலைஞர் பானுமதியின் குழுவினர்
நாடகத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் பெண்கள்..
இப்படியாக பருவம் நிகழ்த்துக்கலையாகி..
அதற்காகவே நாங்கள் அனைவரும் எழுந்து நின்று
பாவண்ணன் அவர்களுக்கு :போட்டோம்

எந்த வியாதி வந்து மருந்து சாப்பிட்டாலும்
அதற்கு பக்கவிளைவுகள் இருக்கும் தானே!
அப்படித்தான் பருவம் நாவலும் .. எனக்குள்
சில தேடல்களை.. 
பருவம் வாசித்தவர்கள் கட்டாயம் இரண்டாம் இடம்
வாசித்தாக வேண்டும் என்று யாரோ அருள் வந்து சொல்ல
நானும் மலையாளத்தில் வாசுதேவ நாயர் எழுதிய இரண்டாம் இடம்
நாவலை - தமிழில் குறிஞ்சிவேலன் மொழிபெயர்ப்பில் வாசித்தாகிவிட்டது.
அப்படியே எஸ்.ரா.வின் உபபாண்டவம் 
AJAYA: Roll of dice By Anand Neelakandan
Rise of kali by Anand Neelakandan..
வாசித்துவிட்டு கொஞ்சம் அசைபோடுவதற்குள்
இன்னொரு செய்தி சசிதரூர் எழுதிய மகாபாரதக் கதையில்
தற்கால அரசியலுடன் சேர்த்து எழுதி இருப்பதாக 
பத்திரிகையில் வாசித்தேன்.. அதையும் எப்படியும்
வாசித்தாக வேண்டும்..
இப்படியாக பருவம் துரத்திக் கொண்டே இருக்கிறது..



No comments:

Post a Comment