Wednesday, December 14, 2016

வர்தா புயலின் பின் விளைவுகள்




6000 மரங்கள் சரிந்திருக்கின்றன.
இதன் இழப்பு ரொம்பவும் அபாயகரமானது.
கடந்த மாதம் இந்தியத் தலைநகர் டில்லியில் 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவிக்கும் அளவுக்கு தலைநகரில் மாசும் தூசியும் . கிட்டத்தட்ட ஒர் அவசரநிலை கால நடவடிக்கைக்கு ஒத்ததாக இருந்தது அப்போதைய நிலை. பல ஆண்டுகளாகவே டில்லியின் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுவிட்டது. இதன் விளைவு தான்
டில்லி வாழ் மக்களின் மருத்துவச்செலவு ஓராண்டில் 2450 கோடி அதிகரித்திருக்கிறது!
சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் ஆகப்பெரும் சக்தி மரம் மட்டுமே. காற்றில் கலக்கும் மாசைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுத்து நிறுத்தி ஒரு சமநிலையை எப்போதும் கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஒரு மரம் ஓராண்டிற்கு சற்றொப்ப 100 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது. ஒரு மனிதனுக்கு சற்றொப்ப 740 கிலோ ஆக்ஸிஜன் ஓராண்டுக்கு
தேவைப்படுகிறது.
அதாவது ஒரு மனிதனுக்குத் தேவை குறைந்தது 6 மரங்கள் !
 இந்த விவரங்களை அறியும்போது விழுந்துவிட்ட
 6000 மரங்களும் அதன் விளைவுகளும் நாம் நினைப்பது போல
 அவ்வளவு சாதாரணமானதல்ல.
ஒவ்வொருவரும் மரம் நடுவோம்.
நம் எதிர்கால சந்ததியினருக்கு இந்த மண்ணை
அவர்கள் உயிர்வாழ தகுதியுள்ளதாக காப்பாற்ற வேண்டியது
 அரசின் கடமை மட்டுமல்ல,
ஒவ்வொரு தனிமனிதனின் கடமையும் கூட.



1 comment:

  1. ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டிய தருணம் இது...

    ReplyDelete