Sunday, December 11, 2016

மரணமும் அதிகார மாற்றங்களும்


பிஜேபியுடன் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.ஆனால் அவர்களின் வெளிப்படைத்தன்மையான அதிகார மாற்றமும்
அது செயல்படும் விதமும் அதற்கான கட்டுக்கோப்பும் என்னை எப்போதும் பிரமிக்க வைக்கிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்தப்போது அவர் நல்லவர்,,
அணுகுண்டு வெடித்து இந்தியாவை வல்லரசாக்கிய வல்லவர், கவிஞர்,கூட்டணிக்கட்சிகளை மதிப்பவர்... 
இத்தியாதி அவர் மீது விழுந்த புகழாரங்கள் பல உண்டு. 
இவற்றில் உண்மை இல்லாமலும் இல்லை.
 ஆனால் அவருடைய உடல்நிலை குறித்து அவர்கள்
 வெளிப்படையாக பேசினார்கள். அவருக்குப் பின்
இப்போதைய பிரதமர் நரேந்திரமோதியை கட்சி முன்னிறுத்தியது
. இப்படியாக
அதிகார மாற்றம் என்பது ஒரு கட்டுக்கோப்பாக
 பிம்ப வழிபாடுகளைக் கடந்ததாக தொடர்கிறது. 
வாஜ்பாய் அவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் இருந்து
 விலக்கப்பட்டதற்கும் சங்க்பரிவார் அதிகார மையத்திற்குமான 
உட்பூசல் காரணங்கள் இருந்தாலும்
இந்த அதிகார மாற்றத்தை இவ்வளவு வெளிப்படையாக 
இந்தியாவில் இன்னொரு தேசியக் கட்சியான காங்கிரசோ 
அல்லது பிற மாநில கட்சிகளோ செய்வதில்லை என்ற யதார்த்த நிலையுடன் ஒப்பிடும்போது ..
 மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கிறது.
காங்கிரசிலும் சரி, பிற மாநிலக் கட்சிகளிலும் சரி
அதிகார மாற்றம் என்பதை மரணம் மட்டுமே தீர்மானிக்கும்.. அரண்மனை வாரிசுகளுக்கு மட்டுமே அரியணை உரிமை என்ற புரிதலுடன்.
(கம்யூனிஸ்ட் கட்சியினர் கோபித்துக் கொள்:ளக்கூடாது. அவர்கள் இப்போது ஆட்டத்தில்
இல்லை. ரெஸ்ட் ரூமில் இருக்கும் என் தோழர்களை தொந்தரவு செய்யாதீர்கள்!)

No comments:

Post a Comment