Wednesday, September 7, 2016

JIO JIO MODI JI


ரிலையன்ஸ் ஜியோ விளம்பரத்தில்
ஜியோ ஜியோ என்று நம் பிரதமர் சந்தோஷத்தில் குதிக்கிறார்.
TRAI விதிகளில் இருக்கும் ஓட்டைகளை மிகவும் தந்திரமாக
 கையாண்டு வெற்றி பெற்றுவிட்டது ரிலையன்ஸ் 
அதாவது கட்டணம் இல்லாத அழைப்புகள் 
(free trial calls) எவ்வளவு காலத்திற்கு என்பதைப் பற்றி 
காலவரையறை இல்லை.
இந்த free trial calls காலத்தில் அரசுக்கு ரிலையன்ஸ் 
சேவை வரியோ கட்டண வரியோ செலுத்த
 வேண்டியதில்லை. 
அந்த தொகை மட்டும் ரிலையன்ஸின் ஜியோ வரவில்
 25% முதல் 28% வரை இருக்கும்.
அதாவது அவ்வளவு தொகை அரசுக்கு இழப்பு
. தனியார் நிறுவனத்திற்கு கொள்ளை லாபம். 

BSNL 4 டவர்களில் அனுப்பும் அலைவரிசையை 
தனியார் நிறுவனங்கள் ஒரே ஒரு டவரில் அதிகமான
 மின்சாரத்தைக் கொடுத்து அழுத்தம் ஏற்படுத்தி 
அனுப்பி வருகின்றன. இதைப் பற்றி கருத்து தெரிவித்த
 BSNL தோழர் பால்கி அவர்கள்
"தனியார் நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் அதிகமாக 
அழைப்பு வரக்கூடிய இடத்தை சர்வே செய்து, டவர் 
அமைத்து, 18 சதுர கிலோமீட்டர்
பரப்பளவுக்கு கொடுக்கக்கூடியதை 36 கிலோமீட்டர்
 பரப்பளவுக்கு பூஸ்ட் செய்வார்கள். இதனால் பயனாளர்களின் ந்ரம்பு மண்டலம் பாதிக்கபப்ட்டு உடல்நலம் கெடுகிறது.
ரிலையன்ஸ் ஜியோவுக்கு சேவைசெய்ய டவர்கள் இல்லை. நஷ்டத்தில் ஓடக்கூடிய டவர்களை வாடகைக்குக் கேட்டு வருகிறது.
திட்டமிட்டே, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நஷ்டத்தில்
ஓடக்கூடிய டவர்களை தனியாருக்கு ஷேர் செய்யலாம்
என்ற சட்டமும் போட்டது. " என்று சொல்லி இருக்கிறார்.
எனவே, BSNL நஷ்டத்தில் இருக்கும் டவர்களை
ரிலையன்ஸ் பயன்படுத்தும்.
இப்படித்தான் அரசாங்கத்தின் பணம், 
அதாவது நம்முடைய பணம் தனியாருக்கு தாரைவார்த்துக்கொடுக்கப்படுகிறது.
எல்லாம் இலவசம் எல்லாம் இலவசம் என்ற
இலவச வியாதியில் நமக்கு கணக்குப்போடக் கூட
மறந்துவிடுகிறது.
(நேரம் இருப்பவர்கள் see JIO vs BSNL tariff )
இப்படியாக பொதுஜனம் இலவச மயக்கத்தில் கொள்ளை அடிக்கபப்ட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் சட்சாத் நம் பாரதப்பிரதமர் ,
120 கோடி மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்
ஜியோ அறிமுகத்தை முன்னிட்டு வெளியான 
டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் 
போன்ற தேசிய ஆங்கில நாளிதழ்களின் முழுப்பக்க-முதல்பக்க விளம்பரத்தில் சிரித்துக்கொண்டு இருக்கிறார். .
பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கும், 120 கோடி நாட்டு மக்களுக்கும், ஜியோவை அர்ப்பணிக்கிறோம் என்று விளம்பரத்தில் வாசகமும் இடம் பெற்றிருந்தது. மும்பையில் நடந்த ஜியோ அறிமுக விழாவிலும்,
முகேஷ் அம்பானி, பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை குறிப்பிட்டு பேசி இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
பிரதமர் & முகேஷ் அம்பானி அறிவித்திருக்கும் 
இந்த 120 கோடி மக்களில் நானும் இருக்கிறேனா... ?!!
இந்த அர்ப்பணிப்பு எனக்கு வேண்டாம் என்று அறிவிப்பது
எப்படி என்ற குழப்பத்தில் நான்.

No comments:

Post a Comment