Monday, September 12, 2016

உலக வங்கியின் கடன்பத்திரத்தில் இந்தியா



"கடன் காரப் பாவிமக்கா.."
ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு தடவையாவது
நான் இந்த சாலையை கடந்து செல்கிறேன்.
(eastern express highway)
ஒவ்வொரு முறையும் இந்த சாலையை நான்
பயன்படுத்துவதற்காக அரசாங்கம் என்னிடம்
பணம் வசூலிக்கிறது. இந்தியா எங்கும் சாலைவழி
போக்குவரத்தில் இன்று இது பெருகிவிட்டது.
ஏன் வசூலிக்கிறார்கள்? எவ்வளவு ஆண்டுகள் வசூலிப்பார்கள்?
நாம் ஏன் கொடுக்க வேண்டும்? அவர்கள் நாம் கொடுக்கும்
பணத்தை குறிப்பிட்ட அச்சாலையின் பராமரிப்புக்கு
செலவு செய்கிறார்களா ..? பாருங்கள் .. எவ்வளவு
கேள்விகள் எழுகின்றன.
INFRA STRUCTURE .. STRUCTURE என்று அடிக்கடி பேசுகிறோம்
.ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இது ரொம்பவும் முக்கியமானதுதான்
 என்பதையும் மறுப்பதற்கில்லை. 
ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை என்ன நடக்கிறது..
உலக வங்கி இந்தியா போன்ற நாடுகளுக்கு இத்திட்டங்களுக்காக 
கடன் வழங்குகிறது.
க்டந்த 70 ஆண்டுகளில் அதிகமாக உலகவங்கியிடம் 
கடன் வாங்கி இருக்கும் நாடு இந்தியா தான்.
(எவ்வளவு வழங்கியிருக்கிறது என்பதையும் அட்டவணையில் பார்க்கவும்)
1947 முதல் 1994 வரை மட்டும் உலக வங்கி 6000 பிராஜெக்டுக்கு திட்டம் போட்டது,அதில் எதையும் நிறுத்தவில்லை. கொடுத்து முடித்துவிட்டது.
க்டன் வாங்கிய இந்தியா,,, வின் நிலைமை:
1993 முதல் 1998 வரை வாங்கிய கடன் தொகையை விட
அதிகமாக 1,475 பில்லியன் டாலர் தொகையை இந்தியா
உலக வங்கிக்கு கட்டி இருக்கிறது
வட்டியைக் கட்டுவதற்கு கூட தடுமாறிப்போய் இந்தியா
மீண்டும் மீண்டும் உலக வங்கியிடம் கடன்வாங்கிக் கொண்டு அதைக் கொண்டு , பழைய கடனுக்கு வட்டி செலுத்துகிறது..
(ஆதாரம் உலகவங்கியில் 1998ஆம் ஆண்டின் ஆண்டறிக்கை)
இதுவும் ஒருவகையான காலனியாதிக்கம் தான்.
எப்படியோ... வாங்கியக் கடனுக்கு நம்மை எல்லாம்
என்னிக்கோ அடகு வச்சிட்டாங்கப்பா..


No comments:

Post a Comment