Thursday, May 12, 2016

மின்பற்றாக்குறையா அல்லது மின் ஊழலா..?




காற்றில் ஊழல், தண்ணீரில் ஊழல், மின்சாரத்தில் ஊழல்.
இந்த ஊழல்களிலும பங்குதாரர்கள் தனியார் நிறுவனங்களும் அரசியல்வாதிகளும்.
சந்தைப்பொருட்கள் அனைத்திற்கும் சந்தை விலை உண்டு. அந்த விலையை நிர்ணயித்துவிட்டு அதைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு விலை கொடுத்து தனியாரிடமிருந்து வாங்குவது அரசு தான்.
இப்படி செய்கிற அரசாங்கம் வாய்க்கூசாமல் சொல்லுகிறது அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் ஓடுகின்றன என்று. ! இது எப்படி இருக்கு?
தமிழ்நாட்டைத் தொடர்ந்து ஆண்டு வந்திருக்கும் திராவிட அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக இருவரும் இந்த ஊழலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.
மின்துறை இன்று அரசின் நஷ்ட கணக்கில் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் மின்சார பற்றாக்குறை என்பதை விட
>அரசின் மெத்தனப்போக்கு.
.>அறிவித்த பொதுத்துறை மின் நிலைய திட்டங்களை கிடப்பில் போட்டிருப்பது.
>மின்சார உற்பத்தியில் தனியாரை வளர்த்துவிட்டதுடன்
சந்தைவிலையை விட அதிக விலைக்கு தனியாரிடமிருந்து மின்சாரத்தை அரசே வாங்கி விநியோகிப்பது....
இதனால் இன்று தமிழ்நாடு மின்சார துறைக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டம் ரூ. 97000 கோடி ....
.
இந்த லட்சணத்தில் நம் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையிலேயே மின்சாரம் தயாரித்து விற்றுக்கொண்டிருக்கிறார்கள்..
(நேற்று மாலை ஊழல் மின்சாரம் ஆவணப்படம் பார்த்தேன்.நன்றி விழித்தெழு இயக்கம். மும்பை)

No comments:

Post a Comment