Friday, October 9, 2015

வைரமுத்துவின் "காதல்கொலை"



வைரமுத்து எழுதிய 40 சிறுகதைகளின் தொகுப்பு நூல்
 நாளை (சனிக்கிழமை) வெளியிடப்பட இருக்கிறது. 
கலைஞர் வெளியிடுகிறார்.
தன்னுடைய கதைகள் குறித்து அக்கதைகளை எழுதியவர்
 என்ற முறையில் ஒரு படைப்பாளியாக
 எதை வேண்டுமானாலும் வைரமுத்து அவர்கள் சொல்லிக்கொள்ளட்டும்.
 
வார்த்தைகளை தங்க நாணயம் போல
 செல்வழித்ததாக சொல்லட்டும்.
ஜெயகாந்தன் வாழ்ந்த இறுதி ஆண்டில்
 இவர் கதைகள் எழுத ஆரம்பித்ததால் 
தன்னை ஜெயகாந்தனின் வாரிசாக
 பட்டா போட்டு பதிவு செய்து கொள்ளட்டும்
.
கவுரவக்கொலைகள் என்று தப்பாக உச்சரிக்கப்படும்
 காதல்கொலைகள் (முதல் இலங்கை இனப்படுகொலை வரை 
எழுதி இருக்கிறேன் )" 
என்று சொல்லி இருப்பது விவகாரமாக இருக்கிறதே!
என்ன சொல்ல வருகிறார் வைரமுத்து அய்யா அவர்கள்?
கவுரவக்கொலைகளை காதல் கொலைகளாக்கி இருக்கிறாரா?
அல்லது காதல்கொலைகள் கவுரவக்கொலைகளாக 
திரிக்கப்பட்டு தப்பாக உச்சரிக்கப்பட்டு விட்டதற்காக
 கொதித்துப் போயிருக்கிறாரா?
எரியும் பிரச்சனைகளை எழுதி இருக்கிறேன் 
என்று சொல்லும் அய்யா வைரமுத்து அவர்கள்
 எதை எதில் எரித்து இருக்கிறார் என்று தெரியவில்லையே!

1 comment:

  1. அன்புள்ள அம்மா,

    வணக்கம். எனது வலைத்தளம்: மணவை

    என்னுடைய வலைத்தளத்தைப் பார்வையிட்டுத் தங்களின் மேலான கருத்துகளைப் பின்னூட்டமிட அன்புடன் வேண்டுகிறேன்.

    வலைத்தள முகவரி: manavaijamestamilpandit.blogspot.com
    இமெயில் முகவரி: manavaijamestamilpandit@gmail.com

    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.

    ReplyDelete