Monday, January 12, 2015

பெரியார் & பி.கே. திரைப்படம்




நேற்று பி.கே திரைப்படம் பார்த்தேன். (11/01/15)
சில கேள்விகளும் காட்சிகளும் ரசனைக்குரியது.
இம்மாதிரி கேள்விகளை ரசனைக்குரியதாக்கியதில்
பி.கே. க்கு வெற்றி தான். ஆனால் பி.கே. கதைப்பாத்திரம்
ஒரு வேற்றுலக ஜீவன் என்ற அறிவியல் பின்புலத்தில்
இக்கதையைப் பார்த்தால் அந்தக் காலத்தில்
எம்.ஜி. ஆர் நடித்த "பறக்கும் தட்டு" திரைப்படத்தைவிட
இப்படம் பெரிதாக எதையும் காட்டிவிடவில்லை. its not a science
fiction .  எனவே வேற்றுகிரகவாசி கேரட் சாப்பிடுவதும்
கனவு காணுவதும் காதல் கொள்வதும் எப்படினு யோசிக்க
கூடாது.
இகேள்விகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டுப் பார்த்தால்
பி.கே. படத்தை ரசிக்கலாம். தந்தை பெரியார் சொல்லாத
எதையும் புதிதாக பி.கே சொல்லிவிடவில்லை.
ஆனால் பெரியார் சொன்ன பாணியில் சொல்லவில்லை
என்பதால் தான் வெகுஜனங்களின் பொதுப்புத்தியில் இப்படம்
ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மதங்களும் மதக்குருமார்களும்
உருவாக்கி இருக்கும் கடவுள் மனிதனின் பய உணர்வுகளின்
மீது ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அவர்கள் உருவாக்கி
இருக்கும் அந்தக் கடவுளர்கள் அனைவரும்
WRONG NUMBER. சரி... அப்போ.. who is RIGHT NUMBER...?
பி.கே சொல்வது... உங்களையும் என்னையும் இந்தப் பிரபஞ்சத்தையும்
உருவாக்கிய சக்தி.. ..
தந்தை பெரியாருக்கு இந்தக் குழப்பமில்லை. அவர் எல்லாமே
wrong number தான் என்று சொன்னார். ஒருமுறை அவரிடம்
கேட்டார்கள்:" அய்யா.. கடவுள் இல்லை, இல்லை என்று சொல்கிறீர்களே,
அவர் உங்கள் முன் வந்தால் என்ன சொல்வீர்கள்? என்று"
பெரியார் தயக்கமின்றி பதில் சொன்னார்.
"கடவுள் இருக்கார்னு சொல்லிட்டுப்போறேன்,!!" என்று.

பி.கே திரைப்படத்தில் இன்னொரு காட்சி.. "இசுலாமியர் என்றால்
நம்பக்கூடாதுனு " இந்து தேசம் கட்டமைத்திருக்கும் ஒரு கேள்வியை
கதைப்போக்கில் உடைத்து நொறுக்கி இருக்கும் இடம்.
சமகால அரசியலில் மிகவும் கவனிப்புக்குரியது.

நம்மைச் சுற்றி எண்ணிடலங்கா அற்புதங்கள் இருக்கின்றன.
பிரபஞ்சம். பால்வீதி நம் கற்பனைக்குள் அடங்காமல்
விரிகிறது. ஏன் நாம் வாழும் பூமியில் கூட நமக்குப் புரியாதப்
புதிர்கள் தொடர்கின்றன. நம் அறிவியல் கூட எப்படி நிகழ்ந்தது
ஏன் நிகழ்ந்தது என்று தான் சொல்லமுடியுமே தவிர இது
இப்படித்தான் நடக்கும், இதனால் மட்டுமே நிகழும் என்று
அறுதியிட்டு சொல்லிவிடுவதில்லை. ஒரு கண்டுப்பிடிப்பைத்
தாண்டி இன்னொரு கண்டுப்பிடிப்புகள் அதனால் தான் தொடர்கின்றன.
அதில் நேற்று சொன்னது இன்று தவறாகிவிடுவதும் உண்டு.
ஆனால்; இவை எல்லாமே வாழ்க்கையைக் கொண்டாடுவதற்கு
தான். இயற்கையை, சக மனிதனை அழிப்பதற்கோ மறப்பதற்கோ
அல்ல.



...

1 comment:

  1. அவசியம் படத்தினைப் பார்க்கின்றேன் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete