Sunday, December 11, 2011

பால்தாக்கரே பேத்திக்கு நிக்காஹ் வாழ்த்துகள்






திருமணங்கள் எப்போதும் மகிழ்ச்சிக்குரியவை.
கொண்டாடப்பட வேண்டியவை. சுற்றமும் நட்பும் சூழ
இனிய நினைவுகளை என்றும் சுமந்து நிற்பவை.
அந்தக் காலத்தில் அரசர்கள் திருமணங்களுக்குப் பின்னால்
போரும் சமாதானமும் எழுதப்பட்டன.
உலகம் போற்றும் மாவீரன் அலெக்சாண்டரிலிருந்து
மராத்திய மண்ணின் சிவாஜி மகாராஜா வரை
இதற்கு விதிவிலக்கல்ல.
இன்றைக்கும் நம் அரசியல் வாரிசுகளின் திருமணங்களில்
இதெல்லாம் இருக்கிறதோ இல்லையோ திருமணத்தில்
நேரில் வந்துக் கலந்து கொள்ளும் தலைவர்களின்
வருகையை ஒட்டி அந்தந்த அரசியல் தலைவர்களின்
கட்சி சார்ந்த கூட்டணி அரசியலின் உறவுகள் கூட
தீர்மானிக்கப்படுகின்றன!

இதெல்லாம் இருக்கட்டும். அண்மையில் மும்பையில் நடந்த ஒரு
திருமணம் ஊடகங்களின் வெளிச்சத்திற்கு அதிகமாக வராத
ஒரு திருமணம்! அதுதான் எங்கள் மும்பை மாநகரின்
சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் பேத்தி நேகாவின் திருமணம்!
மன்னிக்கவும் நிக்காஹ் என்ற திருமணம்.

பேத்தி நேகா தாக்கரேவின் மூத்தமகன், மறைந்த பிந்துமகாதேவின் மகள்.
பிந்து மகாதேவ், ராஜ்தாக்கரேவின் நண்பரின் மகன் , குஜராத்தைச் சார்ந்த
இசுலாமியக்குடும்பத்தைச் சார்ந்தவர் தான் மணமகன் மநன்.
டிசம்பர் 04, 2011 ல் மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த திருமணத்தில்
தாக்கரேக்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டு கலக்கி இருக்கிறார்கள்.
சிவசேனாவும் மராத்திய நவநிர்மான் சேனாவும் அருகருகே கூடிக்கலந்து
நிற்கும் காட்சி ஒருபக்கம் இந்த நிக்காஹின் இன்னொரு ஹைலைட்.

திருமணத்திற்கு வந்திருந்தவர்களை தாக்கரேவின் மூத்தமருமகள் மாதவி தாக்கரே வரவேற்பதில் கவனம் செலுத்தினார். வந்தவர்களின் பட்டியலில் மனோகர் ஜோஷி, ராம்கதம், கோபால் ஷெட்டி, நிதின் சர்தேசி, அவர் மனைவி சுவாதி, மங்கேஷ் சாங்க்ளே,ஷிரிச் பார்க்கர், சிசிர் ஷிண்டே இப்படியான பிரபலங்கள்.

தாக்கரேவின் பேத்தியைத் திருமணம் செய்திருக்கும் மணமகன் திருமணத்திற்கு
முன் இந்துவாக மதமாறிவிட்டார் என்று சிலர் சொல்கிறார்கள்.
ஆனால் குடும்பத்தினர் அச்செய்தியை மறுத்திருக்கிறார்கள்.
எப்படியோ.... மணமகனை குஜாராத்திலிருந்து தேர்ந்தெடுத்து
நிக்காஹ் செய்திருக்கும் பேத்தி நேகாவுக்கு நெஞ்சம் நிறைந்த
வாழ்த்துகள்!

இந்த நிக்காஹ் திருமணத்தில் க்ளீன் போல்டாகி
இருப்பது யார் என்று போகப்போகத்தான் தெரியும்.

கோழி முட்டை இடுவதையும் மழைப் பொழிந்தால்
குளம் நிரம்புவதையும் கூட சுடச்சுட செய்தியாக்கும்
ஊடகங்கள்... இந்தச் செய்தியை இதுவரை பெரிய
செய்தியாக்கவில்லை! இந்த நிக்காஹை செய்தியாக்கிவிடக்கூடாது
என்பது கூட காரணமாக இருக்கலாம்!

எப்படியோ தலைவர்கள் ஆட்டுக்கறிக்கு அடிச்சிக்கிற மாதிரி அடித்துக்கொண்டு
கோழிக்கறிக்கு கூடிக் குலாவிக் கொஞ்சிக் கொள்கிறார்கள்! பாவம்...
மகாஜனங்கள்! இவர்கள் தலைவர்களாக எப்போதும் நிலைப்பதற்காக
எதாவது காரணங்களை ஏற்படுத்திக்கொண்டு கொலை வெறிப்பிடித்து
அலைவதை நிறுத்தினால் புண்ணியமாக இருக்கும்.


(ஆதாரம் :Dailybhaskar.com )

1 comment:

  1. vanakkam....

    Akka,Arumaiyana pathivu...

    Polikalin mugatherai Kizinthathu...

    ReplyDelete